வழக்கமாய் இது போல் நோய்கள் தாக்கும்போது
கோடி உயிர்கள் மாண்டு,
காத்திருந்து கடைசி நேரத்தில்
ஏதோ ஒரு அரசோ அல்லது தனியார் கம்பெனியோ அதற்கான விலையுயர்ந்த மாற்று மருந்தை வெளியிட்டு உலகம் முழுவதும் வியாபாரம் செய்வது வழக்கம்.
ஆனால் இந்த முறை அப்படியேதும் நிகழ்ந்திருக்கவில்லை.
பிரபஞ்சத்தின் மிக உயரிய உயிரியாக தன்னை தானே கருதிக்கொள்ளும் மனிதயினமே கொஞ்சம் மிரண்டு போய் தான் கிடந்தது.
உலகத்தை ஒரு சமநிலைக்கு கொண்டு வந்து பின் அதில் கல்லெறிந்து கலைத்து விளையாடுவது தான் இயற்கையின் வழக்கம்.
அது புரிந்த பின்னும் வாழ சில மனிதர்களுக்கு சில நாட்களோ சில மணிநேரங்களோ சிலருக்கு அதை விட குறைவான சில காலமோ மட்டும் தான் மிச்சமிருந்தது.
மனிதனை மட்டும் கொண்று குவிக்கிறதே என்ன மாதிரியான வைரஸ் அது!
வளிமண்டலம் முழுவதும் பரவிக் கிடந்த அந்த சாத்தானிடமிருந்து எப்படி போராடியும் யாராலும் தப்ப முடியவில்லை.
உலகின்
சில முட்டாள் பணக்காரர்களுக்கு மட்டும் அதனிடமிருந்த தப்பிக்க அப்படியொரு முட்டாள்தனமான யோசனை தோண்றியிருந்தது.
என்ன செய்ய முடியும்.!
ஒரு விண்கலம் செய்து வளிமண்டலத்தை தாண்டி ஆகாயத்திற்கு பறந்து விட்டால் என்ன!
இதை தற்காலிக யோசனையாக கருதினாலும் அந்த வைரஸின் வீரியம் காற்றிலிருந்து முற்றிலும் கரைய குறைந்தது 600வருடங்களாவது ஆகுமாம்.
அதுவரை ஆகாயத்திலேயே வாழ்வது(!) கொஞ்சம் கடினமான காரியம் தான்.
சாப்பிட முடியாது, செக்ஸ் முடியாது அப்படியானால் வாழவும் முடியாது.
இருப்பினும் மனிதயினத்தை காத்துக்கொள்ள இயற்கையுடன் நிகழும் ஒரு அசாத்திய போட்டி.
வீண் முயற்சி.
பறந்த 900 தமிழர்களும் 800வருடங்களுக்கு நிமிடத்திற்கு இதயத்தை இருமுறை மட்டுமே துடிக்க செய்யும்படியான க்ரையோஜீனிக் உறக்கத்துக்கு செல்ல விண்கலமும் ஆகாயம் நோக்கி பறந்தது.
800 வருடங்களும் கடந்தன.
ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் இறுதி நம்பிக்கையையும் சுமந்து பறந்த அந்த தான் இயங்கி கலம்
எல்லா வைரஸும் பூமியிலிந்து அழிந்திருக்குமென்ற நம்பிக்கையில் மீண்டும் உலகவளி நோக்க புரப்பட்டது.
இது சுண்டெலிக்கும் ராசாளிக்கும் நிகழும் ஒரு போட்டி.
ராசாளி பார்வையிலிருந்து தான் எப்படி தப்ப முடியும்!!
கடல் மட்டத்திற்கு 80கிலோமீட்டர் நெருங்கியிருந்த விண்கலம் காரணமேதுமின்றியே வெடித்து சுக்கு நூறாய் சிதறியது.
800வருட தவம் பலனின்றி கடலில் கவிழ
இயற்கையின் கருணைப்பார்வை மனிதயினம் மீது இன்னும் கொஞ்சூண்டு மிச்சமிருந்தது ஆச்சர்யம் தான்.!
வெடித்த விண்கலனிலிருந்த இரண்டு எமர்ஜன்ஸி கேப்ஸுல்கள் மட்டும் எப்படியோ தப்பித்து தரையில் விழுந்தது.
நிச்சயம் தப்பித்தது அந்த 2கேப்ஸுல்கள் மட்டுமின்றி வேறில்லை.
பல கோடி பிரபஞ்சங்களின் பலகோடி பேரண்டங்களின்
பலகோடி கிரகங்களின் பலகோடி மனிதர்களின் பல கோடி நம்பிக்கையும் அந்த இரண்டே இரண்டு கேப்ஸுல்களில் அடைக்கப்பட்டிருந்தது.
ஏதோ ஒரு நாட்டின் ஏதோ ஒரு மாகாணத்தில் கிடந்த அந்த கேப்ஸுல் திறக்க,
பதினோரு பேரும் வெளியே வந்து விழுந்தனர்.
800வருடங்களில் நிகழ்ந்து விட்ட இது மிகப்பெரிய ஒரு உயிரியல் பொது மாற்றம்.
உயர்ந்திருந்த அந்த நகரத்தின் எல்லா இடங்களையும் நரிகளும் ஓநாய்களும் காட்டின் இன்ன விலங்கினங்களும் ஆக்கிரமித்திருந்தன.
சாலைகளிலும் கட்டிடங்களிலும் மனிதர்கள் கூடி வாழ்ந்த வீடுகளிலும்
காடுகள் மண்டிக்கிடந்தன.
அந்நகரம் மட்டுமின்றி உலகமே கிட்டதட்ட
எல்லாருக்குமான பொதுவெளியாகிக் கிடந்தது.
மனிதர்கள் இல்லாத மனிதர்களால் வளர்ச்சியடைந்த ஒரு உலகம் எத்தகைய மாற்றங்களையெல்லாம் சந்திக்கும் என்ற கற்பனையின் அம்சமாய்,
இந்த எட்டு நூற்றாண்டு
அத்தனை கற்பனை மாற்றங்களையும் அப்பட்டமாய் சந்தித்திருந்திருந்தது.
நியாயமான மாற்றம்!
அடுத்து என்ன!
தொலைத்த அத்தனையையும் முதலிலிருந்து தொடங்க வேண்டும்.
ஆனால் எப்டி!
தப்பித்த எவருக்கும் க்ளோனிங்கில் ஒரு பெண்ணை உருவாக்க தெரியாதே.!
கேப்ஸுலில் உறங்கி விழித்த பதினோரு பேரும் ஆண்கள்.
இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்துக்கொள்ள தான் ஆசை!
பயனில்லை.
பெண்ணின்றி இது ஒரு அவசியமற்ற அரைகுறை வாழ்க்கை.
விரக்தியில் தான் சில தினங்கள் கழிந்தன.
Chronophobiaவாலும் monophobiaவாலும் நால்வர் தற்கொலையும் செய்துக்கொண்டனர்.!
இரண்டு வருடங்களுக்கு பிறகு கேப்ஸுல் மீண்டும் அலறியது..
விழுந்த மற்றொரு கேப்ஸுல் இன்று தான் திறந்திருக்கிறது.
அந்த அலறலானது அது இருக்குமிடத்திற்கான ஜிபிஎஸ் அலெர்ட்.
உயிர் பிரியப்போகுமந்த கடைசி நொடியில் கூட ஏதோவொரு ஜாலம் நிகழுமென காத்திருந்தவர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி
அதிலிருந்த ஐவரில் ஒருத்தி பெண்.
இது போதாதா!
புதிய கலாச்சாரத்தை புதிய சட்டங்களை புதிய உலகத்தை மீட்(க)ட வேண்டிய தருணமிது.
ஜிபிஎஸ் காட்டுமிடம்
கிழக்கை நோக்கிய இங்கெங்கோ தான்.
ஆறு பேரும் மறுநிமிடம் அதை நோக்கி தான் விரைந்தனர்.
நடந்த பத்து நிமிடத்திலேயே அடைந்துவிட்ட தூரம் தான்.
கேப்ஸுல் அங்கு தான் இருந்தது.
உள்ளே ஒருவருமில்லை.
க்ரையோஜீனிக் பேழைகள் கூட திறந்து தான் கிடந்தன.
எஞ்சிய மிச்ச சிலரான நாம் உயிரோடிருப்பதோ
நாம் அவர்களை தேடி விரைந்ததோ அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.
எங்கு சென்றிருந்தாலும் கண்டுபிடித்து விடுவது இனி சுலபம்.
எல்லா திசைகளிலும் தேடிக் களைத்தோர் மூச்சிரைத்து நிற்க
உலகின் அந்த கடைசி/முதல் பெண்ணின் கூக்குரல் தூரத்திலெங்கோ ஒலிப்பதை கேட்க முடிந்தது.
குரலின் சத்தம் உயர்ந்துக்கொண்டே வருவதற்கான அர்த்தம் அவள் நம்மை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறாள் என்பது தான்.
குரலின் அந்த அலைவரிசை அவள் ஆபத்திலிருப்பதாக தான உணர்த்தியது.
காட்டு விலங்குகள் எதற்கோ அஞ்சி ஓடியிருக்கலாம்.!
தூரத்திலிருந்த மரத்தின் பின் காணப்பட்டவளின் உடலில் எங்கும் மனித நகக்கீறல்கள்.
கவர்ச்சியை தாண்டி காமத்திற்கு தேவையான அத்தனை இடத்திலும் ஆடைகள் கிழிந்திருந்தன.
முகத்தில் அத்தனை இனமறியயியலா பயம்.
துரத்தி வந்தது கேப்ஸுலில் உடன் உறங்கி விழித்த ஏனைய நால்வர் தான்.
பிரபஞ்சத்தின் முதல் புதிய உயிரை தாங்க முடியக்கூடிய கருமுட்டையை தன்னகத்தே கொண்ட ஒரே பெண் தான் தான் என்பது அவள் மட்டுமின்றி
துரத்தி வந்த மற்றவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
ஓடி வந்தவளோ புதிய அந்த ஆறு பேரை கண்டு திகைத்து நின்றாள்.
முகத்தின் அந்த பயம் இன்னும் ஆறு மடங்கானது.
-ராஜ்குமார்@RajiTalks
super
ReplyDelete