கி.மு 33ம் நூற்றாண்டிலேயே முதன்முதலில் ஐபாட் பயன்படுத்தியவன் தமிழன் தான் என்பதும் அதற்கான குறிப்புகள் அகநாநூறு குண்டலகேசி தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டிருப்பதும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்!? என்பது மாதிரியான அறிய தகவல்களை ஃபேஸ்புக்கில் படித்து தமிழ் வரலாற்றறிவை வளர்த்துக்கொள்ள முடியாது.
ஃபேஸ்புக்கில் படித்த அந்த அறிய செய்தியை இருக்கும் ரெண்டு லட்சத்து முப்பத்திநாளாயிரம் வாட்சப் குரூப்பிலும் ஃபார்வேடு செய்து களிப்படைய முடியாது.
விடியவிடிய வாட்சப்பில் கேட்டியாக்கா சேதிய என்பது மாதிரி பைசா பிரயோஜனமில்லாத விஷயத்தை புறம் பேசி நேரம் போக்க முடியாது.
நுங்கம்பாக்கம் கொலை கேஸையும், தமிழக முதல்வர் மர்ம மரணத்தையும் இன்வஸ்டிகேட் செய்து ஷெர்லாக் ஹோம்ஸ் ரேஞ்சுக்கு குற்றப்பத்திரிக்கை தயார் செய்து உலாவ விட்டு மொத்த நாட்டையும் யார்ர்ரா இந்த இணைய ஜேம்ஸ் பாண்டென ஆச்சர்யப்பட வைக்க முடியாது.
அரிஸ்டாடில் அலக்ஸான்டர் மாதிரி
கண்ணு தெரியாதவங்களுக்கு ரோடு க்ராஸ் பண்ணி விடுங்க,
காது கேக்காதவங்களுக்கு வாக்மேன் வாங்கி கொடுங்க, முதியோர் இல்லத்துக்கு போய் வயசானவங்களுக்கு பஞ்சுமிட்டாய் வாங்கி கொடுங்க என்பது மாதிரியான உயரிய தத்துவங்களையெல்லாம் ட்விட்டரில் சொல்லி வழி தவறி போகும் இளைஞர்களை திருத்தி நல்வழிப்படுத்த முடியாது.
கொடிகாத்த குமரன், வஉசி, மா.பொ.சியெல்லாம் கூட செய்திடாத
நதிநீர் பிரச்சனை, மீத்தேன் எடுப்பு, ஜல்லிக்கட்டு புரட்சியெல்லாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே செய்து சின்ன பகவதி மாதிரி சின்ன சேகுவாரா ஆக முடியாது.
கதை சொல்லுறேன் பேர்வழியில் கண்டதை ப்ளாகில் கிறுக்கி,
ஒருவர் விடாமல் தனிச்சாட்டில் லிங்க் கொடுத்து அனைவரையும் படிக்க சொல்லி டார்ச்சர் செய்ய முடியாது.
தலையை சாய்த்த மாதிரி ஒரு 674 செல்ஃபி எடுத்து, அதில் ஒரளவு சுமாரான ரெண்டை மட்டும் ஃபில்ட்டர் செய்து இன்ஸ்ட்டாவில் போட்டு லைக் வாங்க முடியாது.
அதே இன்ஸ்ட்டாவில் உங்கள் ஸ்ரீலங்கன் க்ரஷின் புது ஃபோட்டோக்கு இன்னிக்கு இந்த ட்ரெஸ்ல நீ
சூப்பராயிருக்கனு கமாண்ட் பண்ணி பச்சையா ஃப்லிர்ட் பண்ண முடியாது.
உறுமும் வேங்க ஒரு மான் முட்டி தோத்தேனடி........ உங்களோட இந்த ஃபேரிட் பாட்ட நீங்க நினைக்கிறப்போ கேக்க முடியாது.
டிவில எஃப்எம்ல எப்போ போடுவான்னு ஒவ்வொரு சேனலையா பொழுது முழுக்க மாற்றிக் கொண்கொண்டேயிருப்பீர்கள்.
ஜிமேப்பில் வழி பார்த்து கொண்டே என்னால் மங்கோலியா காங்கோ நைஜீரியா வடகொரியா போன்ற உலகநாடுகளில் தெரியாத முகவரிக்கும் கூட நடந்தே சென்றடைந்துவிட முடியுமென்ற அதீத சூப்பர் பவருடைய நீங்கள்,
பக்கத்திலிருக்கும் கே.கே.நகரின் மேக்ஸ் ஷோரூமிற்கு வழி தெரியாமல் எங்கேயிருக்கென ஆட்டோக்காரர் ஒருவரிடம் கேட்க போக,
தம்பி... இப்டியே நேரா போய் ஃபஸ்ட் ரைட் எடு அப்பரம் அங்கிருந்து ரெண்டாவது லெஃப்ட்ல ஒரு பிள்ளையார் கோவில் வரும், அங்க பகவான் பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வெளிய வந்து ரைட் எடுத்தன்னா.......வென்று சுத்தலில் விட, நேரா நடந்திருந்தா இந்நேரம் நான் சிக்கிம் மிசோரம்க்கே போயிருப்பேனேடாவெனுமளவு நடந்திருப்பீர்கள்.
ராஜஸ்தானில் வசிக்கும் பள்ளி தோழிக்கு வீக்எண்டானால் வி.சாட் செய்து பேச முடியாது.
பிடிஎஃப் படிக்க முடியாது.
ஹாட்ஸ்டாரில் காதல்முதல் கல்யாணம் வரை பாக்க முடியாது.
அவசரத்துக்கு ஒரு மெய்ல் கூட செய்ய முடியாது.
புக்ஃபேருக்கு கம்பெனிக்கு ஆளில்லாமல் அநாதையாக தனியாய் போய் 700 ஸ்டாலையும் சுற்றி வர வேண்டிய நிலை வரும்.
ஓடாத சீலிங் ஃபேனை நடுஹாலில் படுத்துக்கொண்டு வெறிக்க வெறிக்க வேடிக்க பார்க்குமளவு நேரமிருக்கும்.
அந்த நேரத்தை கழிக்க சன் டிவியின் வம்சம் சீரியல் பார்க்க வேண்டிய நிலை கூட வரும்.
அகிலவுலக நாட்டாமை விஜயகுமாரும் சரத்குமாரும் சேர்ந்து, இந்த பயளோட நாட்டுல யாரும் அன்னந்தண்ணி பொழங்க கூடாதுடாயென தீர்ப்பு வழங்க, பூமியை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு,
நெப்ட்யூன் யுரேனஸ் கிரகங்களில் குடியேறி தனியாளாய் உருளை பயரிடும் மார்ட்டினை போல் தனக்குள் உணர்வீர்கள்.
இவையெல்லாம் நிகழுமென முன் கூட்டியே அறிந்திருந்தால் அந்த 62ஏவில் ஏறும்போது மொபைலை எங்கே வைத்தோம் அல்லது வைத்திருக்கிறோமா என்ற சிந்தனை இருந்திருக்கும்.
விழிப்பின்றி மொபைலை தொலைத்திருக்கவும் மாட்டீர்கள்.
இனி அம்பத்தூரிலிருந்து ஆவடி செல்லும் எந்த பேருந்தில் ஏறும் போதும் கைபேசியை எங்கேனும் தொலைத்துவிடாமல்
கல்யாணமான புது பொண்டாட்டியை பசார் தெருவில் புது சுடிதார் வாங்க அழைத்து செல்பவனை போல அணைத்தவாறே பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.
ஃப்ரீ அட்வைஸ்..... கேட்டா கேளுங்க....
-நெப்ட்யூனில் 20நாட்கள் தங்கியிருந்து பொங்கலன்று இந்தியா வந்திறங்கிய வயசு பையன் ராஜி
ஃபேஸ்புக்கில் படித்த அந்த அறிய செய்தியை இருக்கும் ரெண்டு லட்சத்து முப்பத்திநாளாயிரம் வாட்சப் குரூப்பிலும் ஃபார்வேடு செய்து களிப்படைய முடியாது.
விடியவிடிய வாட்சப்பில் கேட்டியாக்கா சேதிய என்பது மாதிரி பைசா பிரயோஜனமில்லாத விஷயத்தை புறம் பேசி நேரம் போக்க முடியாது.
நுங்கம்பாக்கம் கொலை கேஸையும், தமிழக முதல்வர் மர்ம மரணத்தையும் இன்வஸ்டிகேட் செய்து ஷெர்லாக் ஹோம்ஸ் ரேஞ்சுக்கு குற்றப்பத்திரிக்கை தயார் செய்து உலாவ விட்டு மொத்த நாட்டையும் யார்ர்ரா இந்த இணைய ஜேம்ஸ் பாண்டென ஆச்சர்யப்பட வைக்க முடியாது.
அரிஸ்டாடில் அலக்ஸான்டர் மாதிரி
கண்ணு தெரியாதவங்களுக்கு ரோடு க்ராஸ் பண்ணி விடுங்க,
காது கேக்காதவங்களுக்கு வாக்மேன் வாங்கி கொடுங்க, முதியோர் இல்லத்துக்கு போய் வயசானவங்களுக்கு பஞ்சுமிட்டாய் வாங்கி கொடுங்க என்பது மாதிரியான உயரிய தத்துவங்களையெல்லாம் ட்விட்டரில் சொல்லி வழி தவறி போகும் இளைஞர்களை திருத்தி நல்வழிப்படுத்த முடியாது.
கொடிகாத்த குமரன், வஉசி, மா.பொ.சியெல்லாம் கூட செய்திடாத
நதிநீர் பிரச்சனை, மீத்தேன் எடுப்பு, ஜல்லிக்கட்டு புரட்சியெல்லாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே செய்து சின்ன பகவதி மாதிரி சின்ன சேகுவாரா ஆக முடியாது.
கதை சொல்லுறேன் பேர்வழியில் கண்டதை ப்ளாகில் கிறுக்கி,
ஒருவர் விடாமல் தனிச்சாட்டில் லிங்க் கொடுத்து அனைவரையும் படிக்க சொல்லி டார்ச்சர் செய்ய முடியாது.
தலையை சாய்த்த மாதிரி ஒரு 674 செல்ஃபி எடுத்து, அதில் ஒரளவு சுமாரான ரெண்டை மட்டும் ஃபில்ட்டர் செய்து இன்ஸ்ட்டாவில் போட்டு லைக் வாங்க முடியாது.
அதே இன்ஸ்ட்டாவில் உங்கள் ஸ்ரீலங்கன் க்ரஷின் புது ஃபோட்டோக்கு இன்னிக்கு இந்த ட்ரெஸ்ல நீ
சூப்பராயிருக்கனு கமாண்ட் பண்ணி பச்சையா ஃப்லிர்ட் பண்ண முடியாது.
உறுமும் வேங்க ஒரு மான் முட்டி தோத்தேனடி........ உங்களோட இந்த ஃபேரிட் பாட்ட நீங்க நினைக்கிறப்போ கேக்க முடியாது.
டிவில எஃப்எம்ல எப்போ போடுவான்னு ஒவ்வொரு சேனலையா பொழுது முழுக்க மாற்றிக் கொண்கொண்டேயிருப்பீர்கள்.
ஜிமேப்பில் வழி பார்த்து கொண்டே என்னால் மங்கோலியா காங்கோ நைஜீரியா வடகொரியா போன்ற உலகநாடுகளில் தெரியாத முகவரிக்கும் கூட நடந்தே சென்றடைந்துவிட முடியுமென்ற அதீத சூப்பர் பவருடைய நீங்கள்,
பக்கத்திலிருக்கும் கே.கே.நகரின் மேக்ஸ் ஷோரூமிற்கு வழி தெரியாமல் எங்கேயிருக்கென ஆட்டோக்காரர் ஒருவரிடம் கேட்க போக,
தம்பி... இப்டியே நேரா போய் ஃபஸ்ட் ரைட் எடு அப்பரம் அங்கிருந்து ரெண்டாவது லெஃப்ட்ல ஒரு பிள்ளையார் கோவில் வரும், அங்க பகவான் பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வெளிய வந்து ரைட் எடுத்தன்னா.......வென்று சுத்தலில் விட, நேரா நடந்திருந்தா இந்நேரம் நான் சிக்கிம் மிசோரம்க்கே போயிருப்பேனேடாவெனுமளவு நடந்திருப்பீர்கள்.
ராஜஸ்தானில் வசிக்கும் பள்ளி தோழிக்கு வீக்எண்டானால் வி.சாட் செய்து பேச முடியாது.
பிடிஎஃப் படிக்க முடியாது.
ஹாட்ஸ்டாரில் காதல்முதல் கல்யாணம் வரை பாக்க முடியாது.
அவசரத்துக்கு ஒரு மெய்ல் கூட செய்ய முடியாது.
புக்ஃபேருக்கு கம்பெனிக்கு ஆளில்லாமல் அநாதையாக தனியாய் போய் 700 ஸ்டாலையும் சுற்றி வர வேண்டிய நிலை வரும்.
ஓடாத சீலிங் ஃபேனை நடுஹாலில் படுத்துக்கொண்டு வெறிக்க வெறிக்க வேடிக்க பார்க்குமளவு நேரமிருக்கும்.
அந்த நேரத்தை கழிக்க சன் டிவியின் வம்சம் சீரியல் பார்க்க வேண்டிய நிலை கூட வரும்.
அகிலவுலக நாட்டாமை விஜயகுமாரும் சரத்குமாரும் சேர்ந்து, இந்த பயளோட நாட்டுல யாரும் அன்னந்தண்ணி பொழங்க கூடாதுடாயென தீர்ப்பு வழங்க, பூமியை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு,
நெப்ட்யூன் யுரேனஸ் கிரகங்களில் குடியேறி தனியாளாய் உருளை பயரிடும் மார்ட்டினை போல் தனக்குள் உணர்வீர்கள்.
இவையெல்லாம் நிகழுமென முன் கூட்டியே அறிந்திருந்தால் அந்த 62ஏவில் ஏறும்போது மொபைலை எங்கே வைத்தோம் அல்லது வைத்திருக்கிறோமா என்ற சிந்தனை இருந்திருக்கும்.
விழிப்பின்றி மொபைலை தொலைத்திருக்கவும் மாட்டீர்கள்.
இனி அம்பத்தூரிலிருந்து ஆவடி செல்லும் எந்த பேருந்தில் ஏறும் போதும் கைபேசியை எங்கேனும் தொலைத்துவிடாமல்
கல்யாணமான புது பொண்டாட்டியை பசார் தெருவில் புது சுடிதார் வாங்க அழைத்து செல்பவனை போல அணைத்தவாறே பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.
ஃப்ரீ அட்வைஸ்..... கேட்டா கேளுங்க....
-நெப்ட்யூனில் 20நாட்கள் தங்கியிருந்து பொங்கலன்று இந்தியா வந்திறங்கிய வயசு பையன் ராஜி
posted from Bloggeroid
No comments:
Post a Comment