நீயா நானா பாக்குறத நிறுத்தி ரொம்ப நாளாச்சு.
எதேர்ச்சையா போன வாரம் சேனல மாத்திட்டு வரப்போ
இரு பக்கத்திலும் உட்கார்ந்திருந்த அழகிங்க ரிமோட்ட ஆப்ரேட் செய்ய விடாம விரல்களை செயலிக்க செய்திட்டாங்க.
ஷோ முடியும் போது அவங்க எல்லாரும் பேசின மொத்தமும் என்னை ஒரு விஷயத்தை நோக்கி மட்டும் தான் சிந்திக்க செஞ்சுது.
நிறைய யோசிச்சேன்.... எனக்குள்ளேயே புன்னகைச்சுக்கிட்டேன்.
முழுக்க முழுக்க பெண்களுக்காக ஆணுக்குள்ளிருக்கும் பெண்மையால் கட்டமைக்கப்பட்ட ஒரு உலகம் எப்படி இருக்கும்ங்கற அழகியல் சார்ந்த விசாலமான ஒரு கற்பனை.
அந்த கற்பனைல ரொம்ப வருஷமா அடிக்கடி நான் ஆழ்வதுண்டு.
பெண்கள்னாவே அழகு தானே!
தனக்குள் இருக்குற பெண்ண உணராம ஒரு கவிஞனால ஒரு சிறந்த கவிதைய படைக்க முடியாது.
தனக்குள்ள இருக்குற ஒரு பெண்ண உணராம ஒரு சிற்பியால வடிவான ஒரு சிற்றச்சை வடிக்க முடியாது.
சமையலில் ஆணுக்குள் இருக்குற ஒரு பெண்மை அந்த உணவ எப்படி, எந்தளவுக்கு சுவை மிகுந்ததாக்குதுங்கற ஒரு கற்பனை அது.
ஆண் இஞ்சினியர் வடிவமைக்கிற ஒரு மின்விசிறில பெண்மை புகுத்தப்பட்டா எப்படி இருக்கும்,
ஒரு ஆண் விஞ்ஞானி தனக்குள் இருக்குற பெண்மையின் விழியால ஒரு அனுக்கரு சிதைவை எப்படி பார்க்குறான்,
பீச்ல ப்ளாஸ்டிக் பாட்டில் பொறுக்குறவன் நெழிகளுடனான அவன் உரையாடல் எப்படி இருக்கும்,
ஒரு 14வயசு மாணவன் தனக்குள்ளிருக்கும் பெண்மையால அல்ஜீப்ராவ எப்படி அனுகுவான்,
ஒரு விவாகரத்து வழக்கை தனக்குள் இருக்கும் பெண்மையால ஒரு நீதியரசர் எப்படி அனுகுவார்னு ஒவ்வொரு விஷயத்தையும் கற்பனை செய்து பாத்தா அது அத்தனை அழகு.!
இந்த அழகியலை தாண்டி ஆணுக்குள் இருக்கும்
அந்த பெண்மை சமூகத்துல ஏற்படுத்துற மாற்றம் எத்தகையானதா இருக்கும்ங்கற கற்பனை அதுக்கும் ஒரு படி மேலானது.
ஒரு குழந்தைய கொஞ்சுறப்போ, தன் கவலைய பிரச்சனைய வெளிப்படையா சொல்லி புலம்புறப்போ, புல்லாங்குழல் இசைக்கிறப்போ, அவ்விடத்துல தன் கோபத்தை வெளிப்படுத்த முடியலங்கற ஆதங்கத்துல இயலாமைல பேசுறப்போ ஒரு ஆண் கிட்ட எக்ஸ்ட்ரீமான ஒரு பெண்மைய உணர முடியும்.
ஒரு பெண்ணாலயே பெண்ணுக்கு செய்திட முடியாத பல நல்ல விஷயங்கள, ஆணுக்குள் இருக்குற அந்த பெண்மை செய்யும்ங்கற ஒரு கற்பனை, நம்பிக்கை அது.
கலப்பு திருமணம் செஞ்சுக்கிட்டு குடும்பத்த விட்டு பிரிஞ்சு, ஒரு குழந்தையும் பிறந்துட்ட நிலைல,
அவர்களை ஒதுக்கிய இரு தரப்பு இல்ல பெரிய ஆண்களும் தனக்குள்ளருக்குற பெண்மையை உணரும் பட்சத்துல அந்த பேரக்குழந்தைய, பிரிஞ்சு போன தங்கள் பிள்ளைகளை எப்படி பாப்பாங்க!
அந்த பெண்மை அவங்கள எந்த மாதிரியான சிந்தனைக்கு இழுத்து செல்லும்ங்கறது ஒரு கற்பனை.
முன் கோபத்துல பல தவறுகள் செஞ்சுட்டு குடும்பத்தை வீதியில நிறுத்துற ஆண்கள் நிறைய உண்டு.
ஒரு முன்கோபி ஆணை அவனுக்குள்ள இருக்குற பெண்மை எப்படி கட்டுப்படுத்தி வழிநடந்தும்ங்கறது ஒரு கற்பனை.
"ஒரு பொம்பள தானே இவ"ங்கற சிந்தனைல பெண்களை அணுகுற பல ஆண்களுக்குள்ள, இந்த பெண்மை எட்டி பாத்தா என்ன மாதிரியான உளவியல் மாற்றம் அந்த ஆணுக்குள்ள நிகழும்ங்கறது ஒரு கற்பனை.
மனைவி இறந்து போக தன் 2வயசு குழந்தையை கைல வெச்சுட்டு மருமணத்திற்கு திட்டமிடுற ஒரு ஆணுக்குள்ள இந்த பெண்மை எட்டி பாத்தா என்ன மாதிரியான விஷயங்கள் நடக்கும்னு யோசிக்கிறது ஒரு கற்பனை.
குடிகார கனவனுக்குள்ளிருந்தும், காமத்தை மட்டுமே இலக்காக எண்ணி காதலியை அணுகும் காதலனுக்குள்ளிருந்தும் வெளிப்படுற பெண்மை எத்தகைய ஒரு உறவுமுறை மாற்றத்தை ஏற்படுத்தும்னு சிந்திக்கிறது ஒரு கற்பனை.
இது மாதியான கற்பனைகளையெல்லாம் பாஸிட்டாவாவும் அழகியலாவும் ஒரு பெண் பார்க்கிறாள் அப்டினாவே, அவ அந்த பெண்மையை மனதளவுல கொண்டாடுகிறாள் ஆத்மாத்மாக அனுபவிக்கிறாள்னு தான் அர்த்தம்.
இந்த ரக பெண்கள் ஆண்மையோடு ஈடுகட்டவோ அவர்களை விட அதிகமாக ஆண்மையை அனுபவிக்கனும்னோ விரும்புறதில்ல.
தனக்குள் இருக்கும் பெண்மையை
மட்டுமே மேம்படுத்தனும்னும், அந்த பெண்மையை பெண்மையாக மட்டுமே கொண்டு சமுதாய சிந்தனையலைய உயர்த்தனும்னும் நினைக்கிறாங்க.
ஆணை யாரும் ஒரு ஆண் விஞ்ஞானி, ஆண் பிரதமர், ஆண் மருத்துவர்னு குறிப்பிடுறதில்ல..
ஆனா ஒரு பெண்ணுக்கு மட்டும் பரவலாக
பெண் பிரதமர், பெண் விஞ்ஞானி, பெண் மருத்துவர்ங்கற ஒரு மேற்கோள் புழக்கத்தில் உண்டு.
அதை ஒரு பெண்ணாக இருந்தே, தன் பெண்மையாலேயே உடைக்கனும்ங்கறது தான் இந்த ரக பெண்களோட அதிகபட்ச இலக்கு.
அது ஒரு சகோதரியால சகோதரனுக்கும், காதலியால காதலனுக்கும், மனைவியால கனவனுக்கும், அம்மாவால மகனுக்கும்,
பாட்டியால பேரனுக்கும் மட்டுமே கடத்தப்பட முடிகிற உணர்வு.
பெண்ணியத்துல பல ஸ்டேஜஸ் உண்டு, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு.
ஒவ்வொருத்தரும் அதை ஒவ்வொரு மாதிரி அணுகுறாங்க.
அவ்வனைத்துலயும் இவங்க மட்டும் கொஞ்சம் ஸ்பெஷலா எனக்கு தோண்ற காரணம்
இந்த பெண்கள் தங்கள விட உயர்ந்ததாக காலாகாலமாக சித்தரிக்கப்படும் ஆண்மையை வாளாக ஏந்தாமல்,
தங்களுக்கே உரித்தான பெண்மையை கேடயமா கொண்டு அந்த வாளை எதிர் கொள்ளுறாங்க அப்டிங்கறதால தான்.
-ராஜி
No comments:
Post a Comment