Friday, February 5, 2016

ப்ளாஸ்ட்டிக் பாக்ட்டீரியா

இன்றைய இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை பற்றி அறிவியல் அறிஞர்கள், தத்துவ ஞாநிகள், சினிமா இயக்குநர்கள், நாவலாசிரியர்கள் & ப்ளாக் எழுதும் வெட்டி இஞ்சினியர்கள் என பலரும் பலத்தரப்பட்ட கற்பனை கதைகளை 84ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியிருந்திருக்கின்றனர்.

மற்றும்,

ஒரு வருடத்திக்குமேயான தினக்கிழி காலண்டரின்
மேஷம்-மேன்மை,
ரிஷபம்-சல்ப்பான்ஸி,
மிதுனம்-கில்பான்ஸா என அத்தனை பலன்களையும் கச்சிதமாக கணித்துவிடும்
ஜோதிட கலாமணி கோயிந்தகுமார்
2100ல் இந்த உலகம் ப்ளாஸ்ட்டிக்கால் தான் நிரம்பியிருக்கும் என்ற உண்மையை
2016ம் ஆண்டே கணித்து கூறியிருக்கிறார்
என்பதை Pre.Pre.KG
(அதுஒரு பிறந்த ஒன்றரை வயதேயான குழந்தைகளுக்கான பள்ளி கல்வி வகுப்பு) படிக்கும் அக்கா பையனின் ஆண்ட்ராய்டு ஃபோனில் எதேர்ச்சையாக அவன் முகநூல் Appஐ ஓப்பன் செய்கையில்,
லைக்கப்பட்டிருந்த
"தமிழன் உலகின் அறிவியல் முன்னோடி" & "உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்" என்ற பக்கங்களில் பகிரப்பட்டிருந்த சில பதிவுகளில் காண நேர்ந்து வியந்தேன்.
(ஏர்டெல் 437ஜி பயன்படுத்துகிறான் போல.. கொஞ்சம் ஸ்லோவாக தான் லோட் ஆனது)

மேதை கோயிந்தகுமார் சொன்னதை காட்சிப்படுத்தியதைப் போலவே தான் இன்றைய அண்ணா நகரும், மெரினா பீச்சும்,
திண்டிவனம் பைப்பாஸும்,
திருச்சி சத்திரம் பஸ்டாண்டும்
பாண்டிச்சேரி சரக்கு கடைகளும் & இதர தமிழக மாவட்டங்களும் இந்திய மாநிலங்களும் ப்ளாஸ்ட்டிக்கால் ஆட்க்கொள்ளப்பட்டிருக்கின்றன.

குளம் குட்டை நீர்நிலைகள், விவசாய நிலங்கள்,
சென்னைக்கு மிகமிக அருகாண்மையில் உள்ள சேலம் திண்டுக்கல் & திருச்செந்தூரில் போடப்பட்ட விலைக்குறைவான வீட்டுமனைகள், பழம்பெரும் நடிகர் மாதவனால் விற்கப்பட்ட ஒரகடம் வீட்டு ஏரியாக்கள், பழமைவாய்ந்த IPL CCL போட்டிகள் நடத்தப்பட்ட ஸ்டேடியங்கள் என
எங்கு காணினும் ப்ளாஸ்ட்டிக்.


ரீஸைக்ளிங் வேஸ்ட்டேஜஸ் என வெளிநாடுகளுக்காவது ஏற்றுமதி செய்து தொலைத்து விடலாமென்றாலும் கூட எந்த இளிச்சவாய் நாடுகளும் அதை ஏற்க தயாரில்லை.



லேயர் லேயர்களாக ப்ளாஸ்டிக்குகளே பூமியின் பயோஸ்பியரில் படிந்திருக்க,
விவசாயத்திற்காக சுரங்கங்கள் தோண்டப்பட்டு பலநூறடிகள் கீழே போய் ஓரளவு நல்ல மண் கொண்டு வரப்பட்டு
(அதே ப்ளாஸ்டிக் பைகளில் நிரப்பப்பட்டு தான்) அந்த மண்ணில் விவசாயம் செய்து தான் உணவு தாணியங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.


(பிரபல தொலைக்காட்சி ஒன்று போன வாரம் "உங்களில் யார் பெரிய ப்ளாஸ்டிக் பொறுக்கி சீசன் 673" என்ற போட்டியின் க்ராண்ட் ஃபினாலேவை நடத்தி வெற்றி பெற்றோருக்கு அரை மூட்டை அரிசியை பரிசாயளித்ததை இந்நேரத்தில் நினைவுக்கூற வேண்டியிருக்கிறது)

அதே சமயம் இந்திய அரசு இயந்திரமும் சும்மாயில்லை.
இந்த ப்ளாஸ்டிக்குகளை அப்புறப்படுத்தவும் முழுமையாக அழிக்கவும் இந்தியாவில் படித்து அமெரிக்கா ஓடிப்போகாமலிருந்த மிச்சசொச்ச விஞ்ஞானிகளை வைத்து கடந்த 2080ம் ஆண்டிலிருந்தே பல கெமிக்கல், பயோலாஜிக்கல் ஆராய்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறது.

பெரம்பலூரை அடுத்த லாடாபுரத்தில் அமைந்துள்ள சர்வதேச கெமிக்கல் லெபாரட்டரியில் நடத்தப்பட்ட அப்படியொரு ஆராய்ச்சியில்
ப்ளாஸ்ட்டிக்கை வாயுவாக்கும் முயற்சியில் வெளியான புதிய காம்பினேஷனை சுவாசித்து இரண்டு விஞ்ஞானிகள் ஸோம்பிஸானதாகவும்
மதியவேளையில் டீ கொண்டு வந்த பக்கத்து டீக்கடையை சேர்ந்த 8வயது சர்வர் பையன் உட்பட
4பேரை கடித்து வைத்ததாகவும்
பிறகு அவர்கள் உள்ளேயே இராணுவத்தினரால் சுடப்பட்டு பாதுகாப்பாக புதைக்கப்பட்டதாகவும் 2மாதம் முன்பு வெளியான செய்தி எங்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியிருந்தது!

இப்படியாயிருக்க அதன் மற்றுமொரு பிரிவான பயோ-டெக்னாலஜி ஆராய்ச்சி குழுவில் தான் என் மச்சான் பையனும் வெகுநாட்களாக ஈடுபட்டிருந்தான்.

(குறிப்பு - பயோ டெக்னாலஜி என்பதை பற்றி விவரிக்க வேண்டுமானால், பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தில் நீலநிற தண்ணீர் தொட்டியில் ஹீரோவை 16நாட்கள் ஊறவைத்து ஊசிப்போட்டு ஒரே நாளில் குங்ஃபூ கராத்தேவெல்லாம் வரவழைப்பார்களல்லவா!? அதுபோன்ற ஒரு ஆராய்ச்சி தான்.
இந்த ஆராய்ச்சியின்படி ஒரு உயிரினத்தின் உடல் வெளிப்புற/உட்புற தோற்றம் & செயல்பாடுகளை கூட மாற்ற முடியுமாம்.)

பொதுவாக பேக்டீரியாக்களானது குப்பைகளை தின்று செரித்து கக்கும்.
அதே ஃபார்முலாவின் படி நிட்ரோஜீனிக் பாக்டீரியாக்களை போல ப்ளாஸ்ட்டிக்கை தின்று செரிக்கும் பாலிமைரடைஸ்டு பாக்டீரியாக்களை உருவாக்கும் முயற்சியில் பல பயோ இஞ்சினியர்ஸும், டெக்னிக்கல் ஸைன்ட்டிஸ்ட்டுகளும் ஈடுபட்டிருந்தனர்.

இறுதிக்கட்டத்தை நெருங்கியிருந்த அந்த ஆய்வில் கிட்டத்தட்ட வெற்றி அடைந்திருந்த நிலையில்,
மக்களுக்கு உதவுமாறு இந்த பாக்ட்டீரியா வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த ஆண்டின் இறுதியில் இது சந்தைக்கு வந்துவிடுமென்றும்
முகப்பில் முதல்வர் புகைப்படம் ஒட்டப்பட்ட மர டின்களில் அடைக்கப்பட்டு
(ப்ளாஸ்ட்டிக்கை தின்றுவிடும் பாக்ட்டீரியாதலால் ப்ளாஸ்ட்டிக்கிலேயே அடைத்தால் அதையும் தின்றுவிடுமென்பதால் மர டின்களில் அடைக்கப்படுகிறது) நியாயவிலைக் கடைகளிலேயே ஒரு ரேஷன் கார்டுக்கு மூன்று டின்களெனும் வீதத்தில் விநியோகிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதெனவும் செய்தி சானல்கள் வாயிலாக மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்திருந்தார் சீனியர் விஞ்ஞானி.

இதன்படி போன வாரம் இந்த பாக்ட்டீரியாக்களின் வெளிப்புற ஆய்வு முதன்முதலாக தூத்துக்குடி துறைமுகத்தில் நடத்தப்பட்டது.
(அதென்ன எல்லா ஆராய்ச்சியும் தமிழ்நாட்டுலயே நடக்குதுனு கேக்காதீங்க.. பூமியில எவ்வளவோ நாடுகள் இருந்தும் ஹாலிவுட் படங்கள்ல வர எல்லா ஏலியன்ஸும் அமெரிக்காவுலயே தரையிறங்குறதில்லையா.!? அது போல தான்)

ஒரு மலைப்போல குவிக்கப்பட்டிருந்த ப்ளாஸ்ட்டிக் மேட்டை சுற்றி பல்லாயிரம் காவலர்களும் ராணுவவீரர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

வைன் பேரல்கள் அளவிலான நான்கு பேரல்கள் கொண்டு வரப்பட்டு பச்சைநிற தண்ணீர் ஆங்காங்கே பீய்ச்சி அடிக்கப்பட்டது.
ஆம்.. அது லிக்விட் பாக்டீரியாக்களாம்..

என்ன அதிசயம்.!

கொட்டிய பத்து நிமிடங்களில் ப்ளாஸ்ட்டிக்குகள் கொஞ்சம் கொஞ்சமாக மக்க தொடங்கின.
டிவி சேனல்களில் நேரடியாக நாடு முழுவதும் இதை கண்ட மக்கள் சந்தோஷத்தில் ஆழ்ந்தனர்.

வழக்கமான மக்கும் குப்பைகளில் வரும் துர்நாற்றம் இதில் வரவேயில்லை.
அதற்கு பதிலாக ரோஸ்மில்க் மணம் காற்றெங்கும் வீசியது!

(நாடெங்கும் ப்ளாஸ்ட்டிக் நிரம்பியிருப்பதால் இந்த பாக்டீரியாக்களை எல்லோருமே எல்லா இடங்களிலுமே பயன்படுத்த வேண்டிய நிலை வரும்.
எனவே துர்நாற்றத்திற்கு பதிலாக நல்ல வாசனைகள் வர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டதால் தான் 3மாதம் ரிசல்ட் தாமதமானதாம்.
மட்டுமின்றி அவரவர்க்கு பிடித்தமான ரோஸ்மில்க், பனானா, பைனாப்பிள், க்ரேப்ஸ், ஜாஸ்மின் & ரோஸ் ஃப்ளேவர்களுடனான பாக்ட்டீரியாக்களை கடைகளில் நம்மால் கேட்டும் வாங்க முடியும்.)

கொஞ்சமாக கொஞ்சமாக மக்கியவை கொஞ்ச நேரத்தில் கொஞ்சமும் பாக்கியில்லாமல் காணாமல் போனது..
அதாவது திருச்சி மலைக்கோட்டை அளவிளான ஒரு குப்பைமேடு
3-4மணிநேரத்திலென்றால் பாருங்களேன்!!!!

பட்டிக்காட்டான் மிட்டாய்கடையை பார்த்தாற்போல் என்ற சொலவடையும் இந்த சம்பவத்தின் பிறகு பாக்ட்டீரியாக்கள் ப்ளாஸ்ட்டிக்கை பார்த்தாற்போல் என மாறினால் சொல்வதற்க்கில்லை.

அச்சமயத்தில் தான் விஞ்ஞானிகள், அதிகாரிகள், பொதுமக்களென யாருமே எதிர்பார்க்காத ஒரு விபரீத சம்பவம் நடந்தேறியது.
அந்த ப்ளாஸ்ட்டிக் பாக்ட்டீரியாக்கள் எவ்வளவு தின்றும் பசியடங்காமல் கொஞ்ச கொஞ்சமாக மற்ற பொருட்களையும்
நோக்கி தின்றபடியே நகரத் தொடங்கியது.
நகரை நோக்கி என்பது இன்னும் சரியாக இருக்கும்.


கட்டுக்கடங்காமல் போன பாக்ட்டீரியாக்கள் எல்லா பக்கங்களிலும் பரவ தொடங்கின.
ப்ளாஸ்ட்டிக்கை தின்னும் பாக்ட்டீரியா தான்.
ஆனால் அது ப்ளாஸ்ட்டிக்கை மட்டுமே தின்னுவதாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம் தானே!!


கண்களில் தோண்றியவையையெல்லாம்
(அவற்றிற்கு தான் கண்களில்லையேயென கேள்வி எழுப்பும் அறிவியல் Phdகள் உணர்வதையெல்லாமென படித்துக்கொள்ளுங்கள்)
உண்ணத் தொடங்கின.

காங்க்ரீட் வீடுகள், காம்ப்பவுண்டு சுவர்கள்,
ஆம்னி பஸ்கள், ஷேராட்டோக்கள்,
மாமியார் வீட்டிலிருந்து சீதனமாய் வந்த டூவீலர் வண்டி,
16வகையாக பயன்படுத்தப்படும் டேபிள் மேட்கள்,
ப்ரீத்தி இன்டக்ஷன் ஸ்டவ்கள்,
தீபாவளிக்கு எடுத்த புதிய பேண்ட்டு சட்டை, சோட்டாபீம் பொம்மைகள்,
பணக்கார குழந்தைகள் சாப்பிட வைத்திருந்த கிண்டர்ஜாய்கள்,
ஹைஹீல்ஸ் செருப்புகள்,
இளம்பெண்கள் கட்டியுறங்கும் டெடிபெர்கள் என எதையும் விட்டு வைக்காமல் பாரபட்சமின்றி மெல்லத் தொடங்கின..
மெல்லமாய் மெல்லவில்லை மிகவேகமாக மென்றடன.

அதிக உணவுகளை உட்கொண்ட பாக்ட்டீரியாக்கள் அதே அதிவேகத்தில் இனப்பெருக்கம் செய்யவும் ஆரம்பித்தன.

இப்படியாக அதிவேகமாக நகரமெங்கும் பரவிய பாக்ட்டீரியாக்கள் ஸ்விஸ் பேங்க்கின் தமிழ்நாடு கிளை கட்டிடத்தையும் விட்டு வைக்காமல் உள்நுழைந்து எல்லா அரசியல்வாதிகளின் கருப்பு பணங்களையும் கொரித்தெடுத்தது.

பெரிய பெரிய பங்களாக்கள் அனைத்தும் ரோஸ்மில்க வாசம் வீசும் எலும்புக்கூடுகளாய் மாறிப்போயின.
மக்களை துண்புறுத்தவில்லை என்றாலும் ஆடைகளை தின்று பப்பிஷேம் ஆக்கிவிடுமோ என்ற பயத்தில் அங்குமிங்கும் மக்கள் ஓடி ஒளியத்தொடங்கினர்.
பிறர் கண்களில் தெரியாதவாறு ஒளிந்துக்கொள்வது சுலபம்.
கண்களுக்கு தெரியாதவைகளிடம் இருந்து எப்படி ஒளிந்துக் கொள்வது!!?

சிலர் மரங்களில் ஏறி அமர்ந்தனர்.
மரம் ஏறத் தெரியாதோர் என்ன செய்து தப்பித்திருப்பாரோ பாவம்..!

இப்படிப்பட்ட பெரும்சேதங்கள் நேர்களையில் பாக்ட்டீரியாக்களையே அழிக்கும் அழிவு மருந்தினையும் விஞ்ஞானிகள் கூடவே கண்டு பிடித்திருந்தனர்.
ஆனால் இப்போது பிரச்சனையெல்லாம் ஊரெங்கெங்கும் எல்லா திசைகளிலும் பரவிக்கொண்டிருக்கும் பாக்ட்டீரியாக்களின் மீதெல்லாம் ஒரே நேரத்தில் இந்த மருந்துகளை பிரயோகிக்க வேண்டுமென்பது தான்.

இந்த நேரத்தில் தான் என் மச்சான் பையன் இந்த பாக்ட்டீரியாக்கள்
மின்சார ஒலிப்பெருக்கிகளின் வழியாக "கிங்கினிமிங்கினி" என கத்தும்போது அவை அந்த சத்தத்துக்கு அஞ்சி வந்த வழியே திரும்பி ஓடும் என்ற ஒரு உக்தியை ப்ளாஸ்ட்டிக் அழிப்பு ஆராய்ச்சியின் போதே கண்டுபிடித்திருக்கிறான் என்பது தெரியவந்தது.

இந்த கிங்கினிமிங்கினி என்பது பெரிய மந்திரச்சொல்லெல்லாம் அல்ல.
நாம் பேசும் எல்லா வார்த்தைகளுக்குமே தனித்தனி வெவ்வேறு ஒலிஅலைவரிசைகள் உண்டு.
அவை மின்சார சமிஞைகளாகி ஒலிப்பெருக்கிகளில் பயனித்து கோஷங்களாக எழும்பும்போது பிரத்யேகமான அந்த வார்த்தை மட்டும் பாக்ட்டீரியாக்களை அதிரச்செய்து பயமுறுத்துவதாக இருக்கிறது.

(உண்மையிலேயே இந்த கண்டுபிடிப்பு எதேர்ச்சையாக நிகழ்ந்ததென்பதை பற்றி ஒரு சுவாரஸ்யமான நிகழ்வும் விஞ்ஞானக்குழுக்களிடையே உண்டு - மதிய உணவாக கிச்சடியும் கடப்பா சட்னியும் சாப்பிட்ட என் மச்சான் பையன்,
சட்னி கொண்டு வந்த சின்ன டப்பாவை பெரிய டப்பாவினுள் போட்டு வைத்திருக்கின்றான் - சில்வர் டப்பாவாதலால் அதை உளுக்கும்போது எழுந்த சத்தத்தை கேட்ட மற்றுமொரு ஜூனியர் விஞ்ஞானி,
என்னப்பா உன் சாப்பாட்டு டப்பா கிங்கினிமிங்கினு சத்தம் போடுது என நக்கலடிக்க,
அந்த கிங்கின்மிங்கினி எனும்போது பாக்ட்டீரியாக்கள் வைப்ரேட் ஆனதை மைக்ரோஸ்கோப்பில் எதேர்ச்சையாக கண்டானாம்)

இதன்படி போர்கால அடிப்படையில் தூத்துக்குடியை சுற்றியுள்ள லுங்கி கட்டிய அங்கிள்கள்,
நைட்டி போட்ட ஆண்ட்டிகள், காலேஜ் பெண்கள், புதிதாக திருமணமான இளம் தம்பதியர்,
அடுத்த வாரம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதவிருக்கும் மாணவ மாணவிகள்
& பிரேமம் பட தமிழக ரசிகர்கள் என எல்லா தரப்பட்ட ஜனங்களுக்கும் உடனடியாக ஒலிப்பெருக்கிகள் விநியோகிக்கப்பட்டு கிங்கினிமிங்கினி என கத்திக்கொண்டே குறிப்பிட்ட திசையை நோக்கி நடக்க அறிவுறுத்தப்பட்டனர்.

சில நிமிடங்களிலேயே முகநூல் மற்றும் டவிட்டர்களில் ஒன்று திரண்ட வாலண்ட்டியர்கள் ஒலிப்பெருக்கி மற்றும் செல்ஃபி ஸ்டிக்குகளோடு தூத்துக்குடியை நோக்கி பறந்தனர்.

அதிகமாக கிங்கினிமிங்கினியென கத்தியோரின் புகைப்படங்கள்
"உதவிக்கரம்(கரம் என்பதை விட உதவி"வாய்" என்பது இன்னும் பொருத்தமாக இருக்கலாம்)நீட்டிய இந்த தோழருக்கு எத்தனை லைக்குகள் நண்பர்களே" என்ற டேகுகளுடன் முகநூலில் பதிவிடப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டனர்.

எல்லா திசைகளில் சிதறிப் பரவிய பாக்ட்டீரியாக்களும் மக்களின் பேருதவியால் கொஞ்ச நேரத்திலேயே ஒரு இடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டன.

பின் தடுப்புமருந்துகள் ஹெலிகாப்டர்களிலிருந்து
(பக்கெட்டிலேயே மோந்து தெளித்திருக்கலாம் தான் ஆனால் ஸைன்ஸ் ஃபிக்ஷன் கதையென்பதால் ஒரு பிரம்மாண்ட கிளைமேக்ஸுக்காக இத்தகைய ஹெலிகாப்டர்கள் தேவையாயிற்று)
தெளிக்கப்பட்டு ப்ளாஸ்ட்டிக் பாக்ட்டீரியாக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.
(ப்ளாஸ்ட்டிக்குகள் அல்ல)


இச்சம்பவம் நடந்து ஒரு வாரமாகிறது.

தங்கள் வீடுவாசல் உடைமைகள் இழந்து மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் இந்நிலையில் முதல்வர் இன்று வாட்சப்பில் அளித்த ஊக்கத்தின் உற்சாகத்தில்
மக்களுக்கு எங்களாலான பர்கர் பொட்டலங்கள், பெட்ஷீட்கள், உட்லேன்டு ஷூக்கள், ரேபான் க்ளாஸுகள், பழைய டெர்பி ஜீன்ஸ் ஷாட்ஸ் & லெகிங்ஸுகள் என பல அத்தியாவசிய பொருட்களையும் சேகரித்துக்கொண்டு
தூத்துக்குடியை நோக்கி நண்பர்களோடு சென்றுக்கொண்டிருக்கிறேன்.


இத்தருணத்தில் இந்த பேரழிவை விட
எம் முன்னோர் செய்த பெருங்குற்றங்களின் பிரதிபலன்களை இன்று நாங்கள் அனுபவிக்கிறோம் என்ற நினைப்பே பெரிதும் வருத்துகிறது.

இந்த பாக்ட்டீரியாக்களின் உயிரியில் கட்டமைப்புகளில் சிலமாற்றங்களை ஏற்படுத்தி கொஞ்ச நாட்களிலேயே திரும்பவும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிடுவோமென அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
உண்மையில் திரும்பவும் பயமுறுத்தியிருக்கிறதென்றே சொல்ல வேண்டும்.

திரும்பவும் கிங்கினிமிங்கினியென கூச்சலிட்டுக்கொண்டு தெருக்களெங்கும் திரியும் சந்தர்ப்பம் ஏற்பட தான் போகிறது என கொஞ்சம் படபடப்பாய் தான் இருக்கிறது!!

பின்குறிப்பு - ப்ளாஸ்ட்டிக்கை தவிர்ப்போம் மஞ்சப்பை தூக்குவோம்னா கேக்கவா போறிங்க போங்க பாஸ்!!



posted from Bloggeroid

5 comments:

  1. லாடபுரமெல்லாம் தெரியுது? நீ சீர்காழியா இல்ல பெரம்பலூரா மேன்?

    ReplyDelete
    Replies
    1. படிச்சது பெரம்பலூர் பாவா... திருச்சி ஆத்தூர் அரியலூர்லாம் நம்ம ஏரியாங்கற ரேஞ்சுல சுத்திருக்கேன் :-D

      Delete
  2. லாடபுரமெல்லாம் தெரியுது? நீ சீர்காழியா இல்ல பெரம்பலூரா மேன்?

    ReplyDelete
  3. Great stuff bro 👌👌👌 selfie stick, premam fans 😂😂

    ReplyDelete
  4. Great stuff bro 👌👌👌 selfie stick, premam fans 😂😂

    ReplyDelete