அட்டக்கத்தியில் இருந்து தொடர்ச்சியாக மெட்ராஸ் கபாலி என அனைவராலும் ஒரு தலித் அரசியல் பேசும் இயக்குநராக மட்டுமே அறியப்பட்டு வந்த ரஞ்சித் ஆரம்பத்திலிருந்தே எனக்கு வேறாக தான் அறிமுகம் ஆகியிருந்தார்.
ஆழ்ந்து நோக்கினால் நிலம், நிறம் சார்ந்து ஒருவனை மதிப்பிடுதல், மதிப்பிடுதலின் வழி முடிவுசெய்தல், முடிவு செய்தலின் வழி சித்தரித்து கட்டமைத்தல்,
கட்டமைத்தலை கட்டி காத்தல் என உயர்மட்டத்தில் அதிகாரத்தில் இருக்கும் மக்கட்குழு தனி மனித அல்லது ஒரு இனக்குழுவின் அடையாளத்தை எப்படி வகுத்தெழுதியிருக்கிறது எனும் சமூக சித்தரிப்பு கட்டமைப்பை தகர்த்தல் எனும் அரசியலையே எல்லா படங்களிலும் முன் வைத்திருப்பார் ரஞ்சித்.
முந்தய மூன்று படங்களிலுமே ஒரு நேர்கோட்டிலான அளவீட்டில் பேசி வந்த அந்த சமூக அரசியலின் Graph
காலாவில் சர்ர்ர்ரென vertical growthல் ஒரே standing lineனாக மேலெழுந்ததை கவனிக்க முடிந்தது.
ஒட்டுமொத்த தமிழர்கள் இன்னும் சொல்ல போனால் ஒடுக்கப்பட்ட மொத்த இந்தியாவுக்குமேயான படம் இது.
ஒவ்வொருவருக்குமான நியாயத்தையும் தங்களது நிலைபாட்டிலிருந்தும்
பிறரது நிலைபாடு மற்றும் எதிர்பார்ப்பிலிருந்தும் சுட்டிக்காட்டும் தனிப் பார்வை பற்றிய புரிதலை இந்த படத்தில் மிகுதியாக மற்றும் லாவகமாக கையாண்டிருக்கிறார் ரஞ்சித்.
நாட்டின் எல்லா தரப்பிலுமான மக்களின் மனநிலையையும் படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் குறிப்பால் பேசியிருக்கிறது.
படத்தின் கதாநாயகன் ஹரி தாதா தாராவி மக்களின் அழுக்கான நிலத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்தி ஊருக்கு வெளியே அழகான குடியிருப்புகள் கட்டிக்கொடுத்து மும்பையை சுத்தமாக வைத்திருக்க ஆசைப்படுகிறார்.
அதே தாராவியை சேர்ந்த கரிகாலனின் ஷமூக விரோத ரவுடி கும்பல் அதை தடுத்து நிறுத்த முனைகிறது.
இறுதியில் வெல்வது நாயகன் ஹரிதாதாவா வில்லன் காலாவா என்பது மீதி கதை.
சமகால அரசியலின் இந்துத்துவ நிலைபாட்டாளர்கள் இதை இப்படிதான் புரிந்துகொள்ள வேண்டும்.
மெட்ராஸ் அளவுக்கு இல்லையென்றாலும் அதற்கு அடுத்ததாய் கேரக்டர்களின் டீட்டெய்ல்களில் அதிகம் கவனம் செலுத்திப்பட்டிருக்கும் படம் என இதை சொல்லலாம்.
சமூகத்தில் நிகழும் தவறுகளுக்கும் அவலங்களுக்கும் மக்களாகிய நாம் தான் காரணம் என எல்லா மேடைகளிலும் சொல்வார் கமல்ஹாசன்.
இந்த படம் அத்தவறுகளை செய்துவரும் மக்களின் நியாயங்களை அவர்களின் பார்வையிலிருந்தே விவரிக்கிறது.
ஓட்டு அரசியல் தளமானது மக்களுக்கானது,
அரசியல்வாதிகள் மக்களின் பிரதிநிதிகள்,
FOR BY OF the people எனும் பொது மனநிலையை தாண்டி
அரசியல் தளமோ மற்ற பிற சேவை துறைகளோ குறைந்தது சிறு லாபம், ஏதொரு ஆதாயமின்றி மக்களுக்கானதாக மட்டுமே இயங்காது எனவும் அதையே எதார்த்தமெனவும் கருதிக்கொள்ளும் மேட்டிமைத்தன அரசியல் மனநிலை கொண்ட மக்களை அப்படியே பிரதிபலித்திருக்கும் லெனின் கதாபாத்திரம்.
அதே சமயம் மக்களுக்கான உரிமைகளை போராடிப் பெறுவதில் பெரும் நம்பிக்கையுடையதாய் இருக்கும்.
அழுக்காயிருக்கும் இவ்விடத்திலிருந்து கொண்டு அத்தியாவசியத்திற்கு கூட அல்லல்படும் தம் மக்களை,
குருவிக்கூடோ சிறு பொந்தோ எப்படியாவது ஒரு காங்ரீட் காட்டுக்குள் கட்டி பாதுகாத்திட துடிக்கும் சரினா கதாபாத்திரம்.
அதற்காக தன் கொள்கைகளை துறந்து
சுயமரியாதையை இழந்து யார் காலிலும் விழ கூட தயாராக இருக்கும்.
உனக்கென்னடா படிச்சுட்ட... நல்ல வேலை கிடைச்சுருச்சு... இன்னும் கொஞ்ச நாள்ல பணம் சேர்த்து வேற ஏரியாவுக்கு மாறி போயிடுவ என காளியை சொல்லும் அன்புவிற்கு,
காலாவில் பதில் சொல்லியிருக்கின்றனர் கரிகாலனும் செல்வியும்.
மேற்கண்ட லெனின் மற்றும் சரினா டைப் மக்களுக்கு
நிகழ வேண்டிய மக்கள் வாழ்வியல் மறுமலர்ச்சி எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை
கரிகாலன் தன் மூத்த பிள்ளைகள் இருவரையும் மிரட்டி வீட்டிற்குள் அனுப்பும் காட்சியில் அசால்ட்டாக சொல்லப்பட்டிருக்கிறது.
படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியாக நான் பெரிதும் ரசித்தது ஹரிதாதாவின் பேத்தி கதாபாத்திர வடிவமைப்பு தான்.
ஆதிக்க புத்தி முன்னோர்களால் அடிமைத்தனத்திற்கு ஆதரவாய் எழுப்பப்பட்ட சார்பு கட்டமைப்பை எல்லாருக்குமான பொது நியாயமாக நம்பிக்கொண்டிருக்கும் பலகோடி அப்பாவி காவிகளின் பிரதிபலிப்பாய் அமைந்திருக்கும் அந்த கேரக்டர்.
Dada he seems like a nice person, don't kill him என ஒரு குழந்தையால் எப்படி சொல்ல முடியும்!?
தெரியாமல் மிதித்துவிட்டு நசுங்கி கிடக்கும் எறும்பிடம் சாரி சொல்லும் குழந்தைக்கு கொலை என்பது எத்தனை பயமுறுத்தும் அந்நியமான அச்சுறுத்தலான விஷயமாக இருக்க வேண்டும்!?
அதையும் தாண்டி கொலை என்பது அந்த குழந்தைக்கு just like that என தோன்ற காரணம் இத்தனை நாட்களாக கட்டமைக்கப்பட்டிருக்கும் அந்த சார்பு மனநிலை மக்களை எவ்வாறு பாதித்திருக்கிறது என்பதை காட்டுகிறது.
சம மனிதன் மீதான தீண்டாமையையும் ஒடுக்குதலையும் சுரண்டலையும் அத்தனை நியாயமானதாகவும்,
அதை அவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமானதாகவே அந்த குழந்தையாகிய ஒரு மக்கட்குழு நம்பிக்கொண்டு இருக்கிறது என்பதை அந்த கேரக்டர் சொல்லி செல்கிறது.
பிற படங்களில் பேசிய நேரடி தலீத் அரசியலை இங்கே கொஞ்சம் ஒளித்து மறைத்தே பேச வேண்டிய தருணம்.
ரஞ்சித் அப்படி தான் பேசியிருக்கிறார் எனவும் தோண்றுகிறது.
இங்கே பேசப்பட்டது ஆதிக்க அரசியல் அல்ல.
அதன் பார்வை பற்றிய விளக்கம்.
சரினாவை தன் காலில் விழுந்து வணங்க வற்புருத்திய ஹரிதாதாவே தான் தன் பேத்தியை காலாவின் காலிலும் விழுந்து வணங்கிக்கொள்ள சொல்கிறார்.
காலாவின் வீட்டிற்கு சென்று வாசலிலேயே அமர்ந்து சொம்பு தண்ணீரை மறுக்கும் அதே ஹரிதாதா தான் தன் வீட்டிற்கு வரும் காலாவை வீட்டிற்குள் அழைத்தமர்த்தி கண்ணாடி டம்ளரில் பேத்தி கையால் தண்ணீர் தருகிறார்.
சமத்துவம் சுயமரியாதை என்பதை ஒரு மக்கட்குழு எப்படி காண்கிறது கையாள்கிறது அதன் அளவீட்டை எப்படி தங்களுக்கானதாக வகுத்திருக்கிறது என்பதை அக்காட்சிகளின் தொடர்புகள் உணர்த்தியிருக்கும்.
இந்த சமூக கட்டமைப்பு தகர்த்தலுக்கு அடுத்ததாய்
ரஞ்சித்திடம் பெரிதும் கவனிக்கப்படுவது பெண்களை காட்சிப்படுத்துதல்.
இதுவும் அந்த கட்டமைப்பு பிம்பத்தை தகர்த்தல் எனும் தளத்திலேயே தான் இயங்குகிறது.
தீர்ப்பு சொல்ல செல்லும் நாட்டாமை சரத்குமாருக்கு சொம்பு தண்ணீர் கொண்டு வந்து தரும் குஷ்புவாகிய ஒரு எக்ஸ்ட்ரீமுக்கும்,
ஆணும் பெண்ணும் சமம் என பெண்ணியம் பேசும் ஆண்மை நிறைந்த பெண்ணான மகளிர்மட்டும் ஜோதிகாவாகிய இன்னொரு எக்ஸ்ட்ரீமுக்கும்,
ஒரு ஆணை முற்றிலும் சார்ந்து
அவனை உருகி உருகி காதலிக்கும் நீஎபொவ சமந்தாவாகிய மற்றொரு எக்ஸ்ட்ரீமுக்கும் geometrically ஒரு midpoint வரைந்து அந்த ஒற்றை புள்ளியில் சில பெண்களை வடிவமைத்திருக்கிறார் ரஞ்சித்.
ஆரம்பத்திலிருந்தே போராட்டத்தின் பால் பெரிதும் நம்பிக்கையுள்ள பெண்
சாருமதி.
அவள் வரையரையில் திருப்பிக் கொடுத்தல் என்பது
துணிதுவைக்கும் இடத்தில் உயிருக்கு பயப்படாமல் திரும்பி அடிக்கும்போதும்,
க்ளைமேக்ஸில் மானத்துக்கு பயப்படாமல் திருப்பியடிக்கும்போதும் ஒன்றாகவே தான் இருக்கிறது.
ரஞ்சித்தின் பெண்களுக்கு மானம் அவமானப்படுத்துதல் என்பதின் மீதான பார்வை புரிதலானது பிற இயக்குநர்கள் மற்றும் பார்வையார்களின் புரிதலுக்கு முற்றிலும் வேறானதாக இருக்கிறது.
ஒரு ஆண் தன் கீழாடையை கழட்டிய போது ரஞ்சித்தின் பெண்ணுக்கு ஏற்படாத ஒரு அவமானம் கோபம் இயலாமை,
ஒரு ஆண் தன்னை காலில் விழ வைத்துவிட்டானெனும் போது வந்து விடுகிறது.
அந்த பெண் தான் அங்கே உச்சபட்ச அவமானத்திற்கு ஆளாக்காப்பட்டதாய் உணர்கிறாள்.
இங்கே ஒரு பெண்ணின் சுயமரியாதையும் கோபமும் எதை சார்ந்ததாக இருக்க வேண்டுமென்பதில் ரஞ்சித் வெகு வலுவாக இருக்கிறார் என்பது புரிகிறது.
இதில் பெரிதும் கவனிக்க வேண்டியது அந்த இரு பெண்களும் அச்சம்பவத்தின் பின் அதற்காற்றும் எதிர்வினை.
காலில் விழச்செய்தவனுக்கு கைக்கொடுத்து சமத்துவத்தை சொல்லும் சரினாவும்,
அவிழ்த்த ஆடைக்கு பதில் லத்தியை கையில் எடுக்கும் சாருமதியுமென சமூகத்தின் எந்த சம்பவத்திற்கான எதிர்வினை என்னவாக இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் ரஞ்சித்.
மரியாதைக்குரியவனாயினும்
காதலனாயினும் தன் திறமை மற்றும் தன்மானத்தோடு தொடர்புபடுத்தி சொல்கயில் லூசு என்ற வார்த்தை ஒரு பெண்ணை எத்தனை பாதிக்கிறது கோவப்படுத்துகிறது என்பது உணர முடிகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விஷயத்தில் அபத்தங்களாய் கொட்டி தீர்த்த ரஜினியால் அவர் மீது இருந்த அந்த சூப்பர்ஸ்டார் எனும் மேஜிக் மெல்ல மெல்ல சரிய தொடங்கியது.
அதனால் ஏற்கனவே கொண்டாடி தீர்த்த முத்து பாட்ஷாக்களையே வெறுக்க வைத்தார் ரஜினி்.
ஒரு நடிகனின் பின்புலம் மறந்து அவனை ஒரு கதாபாத்திரமாகவே நம்ப வைப்பதில் தான் ஒரு படத்தின் வெற்றி இருக்கிறது மற்றும் அப்படி மறந்து சென்றால் மட்டுமே ஒரு திரைப்படத்தை முழுமையாக உள்வாங்கவும் ரசிக்கவும் தம் வாழ்க்கையோடு பொருத்தி பார்க்கவும் முடியும்.
இந்த விஷத்தில் ஸ்டெர்லைட் பேச்சை மறந்து ரஜினியை ரசிக்க முடியுமா என்ற தயக்கத்தோடே படத்துக்கு செல்ல,

எல்லா காட்சிகளிலும் ஷமூகவிரோதி ரஜினியை மறக்க செய்து காலாவையே கண்ணில் நிறுத்தி வெற்றிபெற்றிருக்கிறார் ரஞ்சித்.
இவையனைத்தையும் தாண்டி கபாலியில் ஏற்பட்ட அதே அதிருப்தி காலாவிலும் ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை.
மெட்ராஸின் மூலம் சீர்திருத்த அரசியலில் நம்பிக்கையுடைய ஒரு சினிமாக்காரனாகவும்,
இத்தனை காலம் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டு வந்த சில விஷயங்களை விவாதத்துக்குள்ளாக்கி அதன் வழி அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முட்படும் கொள்கை கலைஞனாவும் தெரிந்த ரஞ்சித்,
ரஜினி எனும் கமர்ஷியல் ஜெய்ன்ட்டுக்காக தன் கொள்கையிலேயே சமரசம் செய்துகொண்டவராய் புரியப்பட்டார்.
காலாவிலும் அதையே செய்திருக்கிறார்.
ரஜினிக்கும் தமிழ்சினிமாவிற்கும் அரத பழசான அதே தாதா ஹீரோயிச டெம்ப்ளேட்டை தூக்கியிருக்கிறார்.
அது அட்டகத்தி மெட்ராஸ் காலகட்டத்தில் தலித்கள் என்றாலே, மெட்ராஸ்காரர்கள் என்றாலே ரவுடிகளென தமிழ்சினிமா சித்தரிப்பதாக கோவப்பட்ட ரஞ்சித்தின் கொள்கைக்கு நேரெதிரானதாக இருக்கிறது.
கதைப்படி காலாவில் தாதா கரிகாலன் செய்த அதே புரட்சியை
(க்ளைமேக்ஸில் கூட்டத்தை கூட்டியதை தவிர தாராவி மக்களுக்காக அவர் பெரிதாய் ஏதும் செய்திருக்கவில்லை என்பது வேறு விஷயம்)
மருத்துவர் கரிகாலனோ
வாத்தியார் கரிகாலனோ நிச்சயம் செய்திருக்க முடியும் தான்.
ஆனால் ரஜினியின் கமர்ஷியல் மசாலாவுக்காக தன் கொள்கையிலிருந்து விலகி இன்னும் சொல்லப்போனால் அதற்கு நேர்மாறான ஒரு கதாபாத்திர சித்தரிப்பை செய்திருப்பது அபத்தமாக இருக்கிறது.
ஒரு இனக்குழுவை சார்ந்த மக்களை
மற்ற கதாபாத்திரங்களின் வழி சரியான பாதையில் காட்சிப்படுத்துதலில் காட்டிய கவனத்தை
கபாலியிலும் காலாவிலும் நாயகனை காட்சிப்படுத்துதலில் முற்றிலும் தோற்றுப்போயிருக்கிறார்.
சண்டைக்காட்சிகளின் காரணத்தையும்
நாயகனின் பாத்திர அமைப்பையும் சுட்டிக்காட்டி பா.ரஞ்சித்தும் நானும் பாகம்1ல் முதல் முறை தற்காலிகமாக சறுக்கியிருக்கும் ரஞ்சித் அடுத்த முறை மீண்டு வருவாராகவென எழுதியிருந்தேன்.
துரதிஷ்டவசமாக ரஜினியினால் இரண்டாவது முறையும் சறுக்கியேயிருக்கிறார் ரஞ்சித்.
உங்களுக்கு ரஜினியெனும் கட்டுப்பாட்டு கருவி தேவையில்லை ரஞ்சித்.
தயவுசெய்து அதை உடைத்துவிட்டு வெறும் ரஞ்சித்தாக மட்டும் வெளியே வாருங்கள்.
நீங்கள் இருவரும் மறுபடியும் சேரும் வாய்ப்பு உங்கள் இருவருக்குமே இனி கிடைக்க கூடாதென்று இயற்கையை பிராத்தித்துக் கொள்கிறேன்.
ராஜ்குமார்.ரா @RajiTalks
ஆழ்ந்து நோக்கினால் நிலம், நிறம் சார்ந்து ஒருவனை மதிப்பிடுதல், மதிப்பிடுதலின் வழி முடிவுசெய்தல், முடிவு செய்தலின் வழி சித்தரித்து கட்டமைத்தல்,
கட்டமைத்தலை கட்டி காத்தல் என உயர்மட்டத்தில் அதிகாரத்தில் இருக்கும் மக்கட்குழு தனி மனித அல்லது ஒரு இனக்குழுவின் அடையாளத்தை எப்படி வகுத்தெழுதியிருக்கிறது எனும் சமூக சித்தரிப்பு கட்டமைப்பை தகர்த்தல் எனும் அரசியலையே எல்லா படங்களிலும் முன் வைத்திருப்பார் ரஞ்சித்.
முந்தய மூன்று படங்களிலுமே ஒரு நேர்கோட்டிலான அளவீட்டில் பேசி வந்த அந்த சமூக அரசியலின் Graph
காலாவில் சர்ர்ர்ரென vertical growthல் ஒரே standing lineனாக மேலெழுந்ததை கவனிக்க முடிந்தது.
ஒட்டுமொத்த தமிழர்கள் இன்னும் சொல்ல போனால் ஒடுக்கப்பட்ட மொத்த இந்தியாவுக்குமேயான படம் இது.
ஒவ்வொருவருக்குமான நியாயத்தையும் தங்களது நிலைபாட்டிலிருந்தும்
பிறரது நிலைபாடு மற்றும் எதிர்பார்ப்பிலிருந்தும் சுட்டிக்காட்டும் தனிப் பார்வை பற்றிய புரிதலை இந்த படத்தில் மிகுதியாக மற்றும் லாவகமாக கையாண்டிருக்கிறார் ரஞ்சித்.
நாட்டின் எல்லா தரப்பிலுமான மக்களின் மனநிலையையும் படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் குறிப்பால் பேசியிருக்கிறது.
படத்தின் கதாநாயகன் ஹரி தாதா தாராவி மக்களின் அழுக்கான நிலத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்தி ஊருக்கு வெளியே அழகான குடியிருப்புகள் கட்டிக்கொடுத்து மும்பையை சுத்தமாக வைத்திருக்க ஆசைப்படுகிறார்.
அதே தாராவியை சேர்ந்த கரிகாலனின் ஷமூக விரோத ரவுடி கும்பல் அதை தடுத்து நிறுத்த முனைகிறது.
இறுதியில் வெல்வது நாயகன் ஹரிதாதாவா வில்லன் காலாவா என்பது மீதி கதை.
சமகால அரசியலின் இந்துத்துவ நிலைபாட்டாளர்கள் இதை இப்படிதான் புரிந்துகொள்ள வேண்டும்.
மெட்ராஸ் அளவுக்கு இல்லையென்றாலும் அதற்கு அடுத்ததாய் கேரக்டர்களின் டீட்டெய்ல்களில் அதிகம் கவனம் செலுத்திப்பட்டிருக்கும் படம் என இதை சொல்லலாம்.
சமூகத்தில் நிகழும் தவறுகளுக்கும் அவலங்களுக்கும் மக்களாகிய நாம் தான் காரணம் என எல்லா மேடைகளிலும் சொல்வார் கமல்ஹாசன்.
இந்த படம் அத்தவறுகளை செய்துவரும் மக்களின் நியாயங்களை அவர்களின் பார்வையிலிருந்தே விவரிக்கிறது.
ஓட்டு அரசியல் தளமானது மக்களுக்கானது,
அரசியல்வாதிகள் மக்களின் பிரதிநிதிகள்,
FOR BY OF the people எனும் பொது மனநிலையை தாண்டி
அரசியல் தளமோ மற்ற பிற சேவை துறைகளோ குறைந்தது சிறு லாபம், ஏதொரு ஆதாயமின்றி மக்களுக்கானதாக மட்டுமே இயங்காது எனவும் அதையே எதார்த்தமெனவும் கருதிக்கொள்ளும் மேட்டிமைத்தன அரசியல் மனநிலை கொண்ட மக்களை அப்படியே பிரதிபலித்திருக்கும் லெனின் கதாபாத்திரம்.
அதே சமயம் மக்களுக்கான உரிமைகளை போராடிப் பெறுவதில் பெரும் நம்பிக்கையுடையதாய் இருக்கும்.
அழுக்காயிருக்கும் இவ்விடத்திலிருந்து கொண்டு அத்தியாவசியத்திற்கு கூட அல்லல்படும் தம் மக்களை,
குருவிக்கூடோ சிறு பொந்தோ எப்படியாவது ஒரு காங்ரீட் காட்டுக்குள் கட்டி பாதுகாத்திட துடிக்கும் சரினா கதாபாத்திரம்.
அதற்காக தன் கொள்கைகளை துறந்து
சுயமரியாதையை இழந்து யார் காலிலும் விழ கூட தயாராக இருக்கும்.
உனக்கென்னடா படிச்சுட்ட... நல்ல வேலை கிடைச்சுருச்சு... இன்னும் கொஞ்ச நாள்ல பணம் சேர்த்து வேற ஏரியாவுக்கு மாறி போயிடுவ என காளியை சொல்லும் அன்புவிற்கு,
காலாவில் பதில் சொல்லியிருக்கின்றனர் கரிகாலனும் செல்வியும்.
மேற்கண்ட லெனின் மற்றும் சரினா டைப் மக்களுக்கு
நிகழ வேண்டிய மக்கள் வாழ்வியல் மறுமலர்ச்சி எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை
கரிகாலன் தன் மூத்த பிள்ளைகள் இருவரையும் மிரட்டி வீட்டிற்குள் அனுப்பும் காட்சியில் அசால்ட்டாக சொல்லப்பட்டிருக்கிறது.
படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியாக நான் பெரிதும் ரசித்தது ஹரிதாதாவின் பேத்தி கதாபாத்திர வடிவமைப்பு தான்.
ஆதிக்க புத்தி முன்னோர்களால் அடிமைத்தனத்திற்கு ஆதரவாய் எழுப்பப்பட்ட சார்பு கட்டமைப்பை எல்லாருக்குமான பொது நியாயமாக நம்பிக்கொண்டிருக்கும் பலகோடி அப்பாவி காவிகளின் பிரதிபலிப்பாய் அமைந்திருக்கும் அந்த கேரக்டர்.
Dada he seems like a nice person, don't kill him என ஒரு குழந்தையால் எப்படி சொல்ல முடியும்!?
தெரியாமல் மிதித்துவிட்டு நசுங்கி கிடக்கும் எறும்பிடம் சாரி சொல்லும் குழந்தைக்கு கொலை என்பது எத்தனை பயமுறுத்தும் அந்நியமான அச்சுறுத்தலான விஷயமாக இருக்க வேண்டும்!?
அதையும் தாண்டி கொலை என்பது அந்த குழந்தைக்கு just like that என தோன்ற காரணம் இத்தனை நாட்களாக கட்டமைக்கப்பட்டிருக்கும் அந்த சார்பு மனநிலை மக்களை எவ்வாறு பாதித்திருக்கிறது என்பதை காட்டுகிறது.
சம மனிதன் மீதான தீண்டாமையையும் ஒடுக்குதலையும் சுரண்டலையும் அத்தனை நியாயமானதாகவும்,
அதை அவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமானதாகவே அந்த குழந்தையாகிய ஒரு மக்கட்குழு நம்பிக்கொண்டு இருக்கிறது என்பதை அந்த கேரக்டர் சொல்லி செல்கிறது.
பிற படங்களில் பேசிய நேரடி தலீத் அரசியலை இங்கே கொஞ்சம் ஒளித்து மறைத்தே பேச வேண்டிய தருணம்.
ரஞ்சித் அப்படி தான் பேசியிருக்கிறார் எனவும் தோண்றுகிறது.
இங்கே பேசப்பட்டது ஆதிக்க அரசியல் அல்ல.
அதன் பார்வை பற்றிய விளக்கம்.
சரினாவை தன் காலில் விழுந்து வணங்க வற்புருத்திய ஹரிதாதாவே தான் தன் பேத்தியை காலாவின் காலிலும் விழுந்து வணங்கிக்கொள்ள சொல்கிறார்.
காலாவின் வீட்டிற்கு சென்று வாசலிலேயே அமர்ந்து சொம்பு தண்ணீரை மறுக்கும் அதே ஹரிதாதா தான் தன் வீட்டிற்கு வரும் காலாவை வீட்டிற்குள் அழைத்தமர்த்தி கண்ணாடி டம்ளரில் பேத்தி கையால் தண்ணீர் தருகிறார்.
சமத்துவம் சுயமரியாதை என்பதை ஒரு மக்கட்குழு எப்படி காண்கிறது கையாள்கிறது அதன் அளவீட்டை எப்படி தங்களுக்கானதாக வகுத்திருக்கிறது என்பதை அக்காட்சிகளின் தொடர்புகள் உணர்த்தியிருக்கும்.
இந்த சமூக கட்டமைப்பு தகர்த்தலுக்கு அடுத்ததாய்
ரஞ்சித்திடம் பெரிதும் கவனிக்கப்படுவது பெண்களை காட்சிப்படுத்துதல்.
இதுவும் அந்த கட்டமைப்பு பிம்பத்தை தகர்த்தல் எனும் தளத்திலேயே தான் இயங்குகிறது.
தீர்ப்பு சொல்ல செல்லும் நாட்டாமை சரத்குமாருக்கு சொம்பு தண்ணீர் கொண்டு வந்து தரும் குஷ்புவாகிய ஒரு எக்ஸ்ட்ரீமுக்கும்,
ஆணும் பெண்ணும் சமம் என பெண்ணியம் பேசும் ஆண்மை நிறைந்த பெண்ணான மகளிர்மட்டும் ஜோதிகாவாகிய இன்னொரு எக்ஸ்ட்ரீமுக்கும்,
ஒரு ஆணை முற்றிலும் சார்ந்து
அவனை உருகி உருகி காதலிக்கும் நீஎபொவ சமந்தாவாகிய மற்றொரு எக்ஸ்ட்ரீமுக்கும் geometrically ஒரு midpoint வரைந்து அந்த ஒற்றை புள்ளியில் சில பெண்களை வடிவமைத்திருக்கிறார் ரஞ்சித்.
ஆரம்பத்திலிருந்தே போராட்டத்தின் பால் பெரிதும் நம்பிக்கையுள்ள பெண்
சாருமதி.
அவள் வரையரையில் திருப்பிக் கொடுத்தல் என்பது
துணிதுவைக்கும் இடத்தில் உயிருக்கு பயப்படாமல் திரும்பி அடிக்கும்போதும்,
க்ளைமேக்ஸில் மானத்துக்கு பயப்படாமல் திருப்பியடிக்கும்போதும் ஒன்றாகவே தான் இருக்கிறது.
ரஞ்சித்தின் பெண்களுக்கு மானம் அவமானப்படுத்துதல் என்பதின் மீதான பார்வை புரிதலானது பிற இயக்குநர்கள் மற்றும் பார்வையார்களின் புரிதலுக்கு முற்றிலும் வேறானதாக இருக்கிறது.
ஒரு ஆண் தன் கீழாடையை கழட்டிய போது ரஞ்சித்தின் பெண்ணுக்கு ஏற்படாத ஒரு அவமானம் கோபம் இயலாமை,
ஒரு ஆண் தன்னை காலில் விழ வைத்துவிட்டானெனும் போது வந்து விடுகிறது.
அந்த பெண் தான் அங்கே உச்சபட்ச அவமானத்திற்கு ஆளாக்காப்பட்டதாய் உணர்கிறாள்.
இங்கே ஒரு பெண்ணின் சுயமரியாதையும் கோபமும் எதை சார்ந்ததாக இருக்க வேண்டுமென்பதில் ரஞ்சித் வெகு வலுவாக இருக்கிறார் என்பது புரிகிறது.
இதில் பெரிதும் கவனிக்க வேண்டியது அந்த இரு பெண்களும் அச்சம்பவத்தின் பின் அதற்காற்றும் எதிர்வினை.
காலில் விழச்செய்தவனுக்கு கைக்கொடுத்து சமத்துவத்தை சொல்லும் சரினாவும்,
அவிழ்த்த ஆடைக்கு பதில் லத்தியை கையில் எடுக்கும் சாருமதியுமென சமூகத்தின் எந்த சம்பவத்திற்கான எதிர்வினை என்னவாக இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் ரஞ்சித்.
மரியாதைக்குரியவனாயினும்
காதலனாயினும் தன் திறமை மற்றும் தன்மானத்தோடு தொடர்புபடுத்தி சொல்கயில் லூசு என்ற வார்த்தை ஒரு பெண்ணை எத்தனை பாதிக்கிறது கோவப்படுத்துகிறது என்பது உணர முடிகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விஷயத்தில் அபத்தங்களாய் கொட்டி தீர்த்த ரஜினியால் அவர் மீது இருந்த அந்த சூப்பர்ஸ்டார் எனும் மேஜிக் மெல்ல மெல்ல சரிய தொடங்கியது.
அதனால் ஏற்கனவே கொண்டாடி தீர்த்த முத்து பாட்ஷாக்களையே வெறுக்க வைத்தார் ரஜினி்.
ஒரு நடிகனின் பின்புலம் மறந்து அவனை ஒரு கதாபாத்திரமாகவே நம்ப வைப்பதில் தான் ஒரு படத்தின் வெற்றி இருக்கிறது மற்றும் அப்படி மறந்து சென்றால் மட்டுமே ஒரு திரைப்படத்தை முழுமையாக உள்வாங்கவும் ரசிக்கவும் தம் வாழ்க்கையோடு பொருத்தி பார்க்கவும் முடியும்.
இந்த விஷத்தில் ஸ்டெர்லைட் பேச்சை மறந்து ரஜினியை ரசிக்க முடியுமா என்ற தயக்கத்தோடே படத்துக்கு செல்ல,
எல்லா காட்சிகளிலும் ஷமூகவிரோதி ரஜினியை மறக்க செய்து காலாவையே கண்ணில் நிறுத்தி வெற்றிபெற்றிருக்கிறார் ரஞ்சித்.
இவையனைத்தையும் தாண்டி கபாலியில் ஏற்பட்ட அதே அதிருப்தி காலாவிலும் ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை.
மெட்ராஸின் மூலம் சீர்திருத்த அரசியலில் நம்பிக்கையுடைய ஒரு சினிமாக்காரனாகவும்,
இத்தனை காலம் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டு வந்த சில விஷயங்களை விவாதத்துக்குள்ளாக்கி அதன் வழி அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முட்படும் கொள்கை கலைஞனாவும் தெரிந்த ரஞ்சித்,
ரஜினி எனும் கமர்ஷியல் ஜெய்ன்ட்டுக்காக தன் கொள்கையிலேயே சமரசம் செய்துகொண்டவராய் புரியப்பட்டார்.
காலாவிலும் அதையே செய்திருக்கிறார்.
ரஜினிக்கும் தமிழ்சினிமாவிற்கும் அரத பழசான அதே தாதா ஹீரோயிச டெம்ப்ளேட்டை தூக்கியிருக்கிறார்.
அது அட்டகத்தி மெட்ராஸ் காலகட்டத்தில் தலித்கள் என்றாலே, மெட்ராஸ்காரர்கள் என்றாலே ரவுடிகளென தமிழ்சினிமா சித்தரிப்பதாக கோவப்பட்ட ரஞ்சித்தின் கொள்கைக்கு நேரெதிரானதாக இருக்கிறது.
கதைப்படி காலாவில் தாதா கரிகாலன் செய்த அதே புரட்சியை
(க்ளைமேக்ஸில் கூட்டத்தை கூட்டியதை தவிர தாராவி மக்களுக்காக அவர் பெரிதாய் ஏதும் செய்திருக்கவில்லை என்பது வேறு விஷயம்)
மருத்துவர் கரிகாலனோ
வாத்தியார் கரிகாலனோ நிச்சயம் செய்திருக்க முடியும் தான்.
ஆனால் ரஜினியின் கமர்ஷியல் மசாலாவுக்காக தன் கொள்கையிலிருந்து விலகி இன்னும் சொல்லப்போனால் அதற்கு நேர்மாறான ஒரு கதாபாத்திர சித்தரிப்பை செய்திருப்பது அபத்தமாக இருக்கிறது.
ஒரு இனக்குழுவை சார்ந்த மக்களை
மற்ற கதாபாத்திரங்களின் வழி சரியான பாதையில் காட்சிப்படுத்துதலில் காட்டிய கவனத்தை
கபாலியிலும் காலாவிலும் நாயகனை காட்சிப்படுத்துதலில் முற்றிலும் தோற்றுப்போயிருக்கிறார்.
சண்டைக்காட்சிகளின் காரணத்தையும்
நாயகனின் பாத்திர அமைப்பையும் சுட்டிக்காட்டி பா.ரஞ்சித்தும் நானும் பாகம்1ல் முதல் முறை தற்காலிகமாக சறுக்கியிருக்கும் ரஞ்சித் அடுத்த முறை மீண்டு வருவாராகவென எழுதியிருந்தேன்.
துரதிஷ்டவசமாக ரஜினியினால் இரண்டாவது முறையும் சறுக்கியேயிருக்கிறார் ரஞ்சித்.
உங்களுக்கு ரஜினியெனும் கட்டுப்பாட்டு கருவி தேவையில்லை ரஞ்சித்.
தயவுசெய்து அதை உடைத்துவிட்டு வெறும் ரஞ்சித்தாக மட்டும் வெளியே வாருங்கள்.
நீங்கள் இருவரும் மறுபடியும் சேரும் வாய்ப்பு உங்கள் இருவருக்குமே இனி கிடைக்க கூடாதென்று இயற்கையை பிராத்தித்துக் கொள்கிறேன்.
ராஜ்குமார்.ரா @RajiTalks
posted from Bloggeroid
No comments:
Post a Comment