Friday, November 30, 2018

சிட்டியால சிந்திக்க முடியுமா!??

ரோபோங்கறது விஷயம் நம்மளோட day to day lifeல தினசரி ஏதோ ஒரு விஷயத்துல பங்கெடுத்துட்டே தான் இருக்கு.
ரோபோக்கள் மட்டும் இல்லனா இந்த industrial, economic, social development and human survival அப்படிங்கறது இந்த over populationல இந்தியா போல ஒரு நாட்டுல ரொம்பவே கஷ்டமா போயிருக்கும்.
இங்க எல்லாமே ரோபோ தான்.
ஒரு ஆட்டோமொபைல் கம்பெனில Welding, assembly, handlingலருந்து packing வரை.
அங்க தொடங்கி traffic, commercialனு சகஜ வாழ்க்கைலயும் இப்போ ரோபோக்களை நாம‌ சந்திக்க ஆரம்பிச்சுட்டோம்.
இவ்வளவும் இருந்தும் இந்த மனுஷப்பயளுகளுக்கு தானா சிந்திக்கிற ஒரு ரோபோவை கண்டுபிடிக்கனும்ங்கறதுல மட்டும் ஏனோ ஒரு அலாதி பிரியம்.
ஒரு பொருளுக்கான அவசியம் இல்லாத பட்சத்துலயும் கூட எப்படியாவது அதை அடையனும்ங்கற ஒரு வேக வெறி.

Star wars, terminatorல தொடங்கி 2.0 வரை திரைப்படங்கள்ல நாம ரோபோவை ஒரு fantacy elementடாக மட்டும் தான் பாத்துட்டு இருக்கோம்.
ஒரு AI ரோபோவை பொதுவா 2வகையாக வடிவமைக்கலாம்.
1. எந்திரன் ரோபோ டைப்.
அஃதாவது ஒரு எலக்ட்ரானிக் சர்க்யூட்ஸ் அடங்கிய ஒரு வஸ்துவுக்கு sports, music, arts, scienceனு எல்லா hard diskயும் அப்லோட் பண்ணிட்டு  சிட்டி அடானா ராகத்த அரக்கோணத்துல பிடிச்சு ஒரு பாட்டு பாடுனு சொல்லி சூப்பர் சிங்கர் ஆடிஷனுக்கு கூட்டிட்டு போறது.

2. அதே எலக்ட்ரானிக் சர்க்யூட்ஸ் அடங்கிய வஸ்துவ கூட்டிட்டு போய் ஒரு தெருவுல விட்டுட்டு நீயே நடக்க பேச பழக சிந்திக்க கத்துக்கோனு ஒரு குழந்தைய வளர்க்குற போல வளர்க்குறது, சொல்லி கொடுக்குறது.

ஆனா‌ துர்அதிஷ்ட்டவசமான விஷயம் என்னனா இது ரெண்டும் சக்ஸஸ் ஆகுறதுக்கான‌ வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப குறைவு.
ஒரு மனுஷன் சிந்திக்கிறது போல மனுஷன விடுங்க ஒரு சிட்டுக்குருவி சிந்திக்கிற அளவுக்காவுது ஒரு மெஷின் சிந்திக்கனும்னா அதுக்கான வாய்ப்புங்கறது வெறும் 2% தான்.

முதல் டைப்புல ட்ரை பண்ணினோம்னா வசீகரன போல சில ஹார்ட் டிஸ்க்க கைல கொடுத்து அதுலருந்து ஒரு கேள்வி கேட்டா சிட்டி பதில்லாம் சொல்லாது.
ஒரு 2வயசு குழந்தையோட சிந்திக்கும் திறனை ஒரு ரோபோவுக்கு கொடுக்கனும்னா கூட அதுக்கு குறைந்தபட்சம் ஒரு கண்ட்டைனர் அளவான memory recervoir வேணும்.
நம்ம மூளையானது பலப்பல சிக்கல்களை கொண்ட ஒரு ஆர்கானிக் சர்க்யூட்.
நிலாவுக்கே கூட போயிட்டு வந்த மனுஷனால ஒரு மூளை எப்டி செயல்படுதுனு இன்னும் கண்டுபிடிக்க முடியல..
சும்மானாச்சுக்கும் சில விஷயங்கள கணிச்சு மட்டும் வெச்சுருக்கான் அவ்வளவு தான்.. அதனால் தான் இதயம் கிட்னி லிவர்னு கெட்டு போனா கழட்டி போட்டுட்டு வேற கிட்னி எடுத்து பொருத்திக்கிற மனுஷனால மூளைல கையவும் கத்தியவும் வைக்கவே முடியல..
மனித மூளைய புரிஞ்சுக்கவே முடியாத மனுஷன் அதுக்கு இணையான ஒரு சிந்திக்கும் கருவிய கண்டுபிடிக்கிறது அத்தனை ஈஸினா நினைக்கிறீங்க!???

அதுக்கும் மேல ஒரு ரோபோ தான் ஒரு artificial intelligenceனு மனுஷனுக்கு நிரூபிச்சு காட்ட வேண்டிய கட்டாயத்துலயும் இருக்கு.
ஒரு ரோபோவானது basic asimo விதிகளை obey பண்ணவும் வேண்டியிருக்கு, அதை தாண்டி AI turing தேர்வுல தேரவும் வேண்டியிருக்கு.

அந்த 3 விதிகள் என்னனா,
1. ஒரு ரோபோ எக்காரணத்தை கொண்டும் மனிதர்களை நோகடிக்கும் படி நடக்க கூடாது & மனிதர்கள் தன்னை நோகடிக்க அனுமதிக்கனும்.
2. எந்த சூழ்நிலையிலும் மனிதனோட கட்டளைக்கு கீழ்படியனும் அதே சமயம் முதல் விதியை மீறவும் கூடாது.
3. ஒரு ரோபோ தன்னை தானே தற்காத்துக்கனும் அதே சமயம் முதல் 2விதிகளையும் மீறவும் கூடாது.
இப்படிலாம் ரூல்ஸ் போட்டா வசீ தலை சுத்துதானு சிட்டி கேக்காது.
சிட்டிக்கு தான் தலை சுத்தும்.

(இதுல ரெண்டாவது விதியின்படி நடக்க சொல்லி முதல் விதியை மீற வெச்சு AIRD evaluationல சிட்டிய நிராகரிப்பாப்புவாக்கின பிரஃபசர் போரா நியாபகம் வராரா??)

அடுத்து AI turing test. இதுக்கு imitation gameனு இன்னொரு பேரு உண்டு.
ஒரு ரோபோவையும் மனுஷனயும் ரெண்டு தனித்தனி பெட்டியில அடைச்சுட வேண்டியது.
எந்த பெட்டில யாரு இருக்குறதுனு யாருக்கும் தெரியாது.
இப்போ 2பேர் கிட்டயும் ஒரே set of questions கேக்க வேண்டியது.
எந்த சமயத்துலயும் ரோபோவோட பதிலை வெச்சு இது ரோபோனு வெளிய இருக்கிறவங்க கண்டு பிடிக்க முடியாத அளவு ரோபோ பதில் சொல்லனும்.
உதாரணத்துக்கு நாளைக்கு ஞாயித்துக்கிழமை வரியா நாம 2 பேரும் தாசில்தார் ஆஃபிஸ் வரை போயிட்டு ட்ரைவிங் லைசன்ஸ் அப்ளை பண்ணிட்டு வருவோம்னு கூப்டா வரேன், வரல, எனக்கு நாளைக்கு ரீபூட் பண்ணிக்கிற வேலை இருக்கு இஞ்சின் மோட்டாருக்குலாம் ஆயில் போடுற வேலை இருக்குனுலாம் சொல்லி சமாளிச்சா அந்த ரோபோ ஃபெயில்.
அதுக்கு பதிலா ஏன்டா சன்டே அதுவுமா எந்த தாசில்தார் ஆஃபிஸுடா திறந்துருக்கும்? அதுமில்லாம தாஸில்தார் ஆஃபிஸ் போய்
டிரைவிங் லைசென்ஸ் எடுக்க போறேன்றியே நீயெல்லாம் எந்த இஸ்கூல்லடா படிச்சனு  பதில் கேள்வி கேட்டா அது பாஸ்.
ஆனா இதுக்கான வாய்ப்புங்கறது இன்னிக்கு அறிவியல் சூழல்ல ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மியாவே தான் இருக்கு.

இதுக்கு உதாரணமா இன்ட்டர்ஸ்டெல்லர் படத்தோட ஒரு காட்சிய சொல்லலாம் நினைக்கிறேன்.
1. விண்வெளி பயணம் போற நாயகன் ஒரு கட்டத்துல தன்னை அனுப்பிய நாசா மேல ஒரு சந்தேகம் கொள்ளுறான். தான் போற ஷிப்ப ஓட்டுற AI SYSTEM தன் கிட்ட எதோ தகவல தனக்கு தெரியாம மறைக்கிறதாகவும் அது நாசாவோட உதவியோட தன்னை பயன்படுத்திக்கிறதாகவும் சந்தேகப்படுறான். ஒரு இன்ட்டர்ஸ்டெல்லர் பயணத்துல ஒரு ஷிப்ப ஓட்டனும்னா அந்த AIக்கு எந்தளவுக்கு ஒரு அறிவு இருக்கனும்!? கடல்ங்கற பிரபஞ்சத்துல கடுகளவு கூட முழுசா அறியாத மனுஷன், அந்த மனுஷனால கூட புரிஞ்சுக்க முடியாத அல்லது புரிஞ்சுக்க கஷ்டப்படுற ஒரு விஷயமான இந்த பிரபஞ்சத்தையும் அது சார்ந்த அறிவியலையும் புரிஞ்சுக்குற ஒரு அறிவு இருக்கனுமில்லலயா!? அப்படி ஒரு AI தான் அந்த ஷிப். மட்டுமில்லாம ஒரு படி மேல போய் தன்னை உருவாக்கின மனுஷனயே சூழ்நிலைக்கேற்ப ஏமாத்தி பயன்படுத்திக்கிட்டு தன்னோட‌ வேறு ஒரு திட்டத்தை அவன் மூலமா செயல்படுத்த முயற்சிக்குதுனா அதோட அறிவு எத்தனை அபாரமானதாக இருக்கனும்!!
இது வெறும் கற்பனை மட்டும் தான்.
ஏன்னா எதிர்ல வர வின்கல் கிரகங்கள் நட்சத்திரங்கள்னு எல்லாத்தையும் கணிச்சு விலகி போற அறிவு படைச்ச ரோபோ அது ஆனா இன்னிக்கு தேதிக்கு ரோபோக்கள் நடக்குற பாதைல கிடக்குற சின்ன கல்ல எடுத்து போட்டு நடக்குற அளவுக்கு கூட அறிவார்ந்ததா இன்னும் முன்னேறல..
அது நிஜத்துல நடக்க இன்னும் 100வருஷமாவது ஆகலாம்.

ஒரு ரோபோ AIனு தன்னை சொல்லிக்கனும்னா அது Reasoning, problem solving, planning and learningல கில்லியா இருக்கனும்.
தீயில ஒரு சின்ன பையனும் அப்துல்கலாமும் மாட்டிக்கிட்டா யாரை முதல்ல காப்பாத்துவங்கற கேள்விக்கு hypothetical questionனு சொல்லியெல்லாம் ஜகா வாங்க கூடாது.
அதுக்கு சரியான பதிலை காரணத்தோடு தரனும்.
ஒரு கடல் அலை வேகமா வந்துட்டு இருக்குறதா வெச்சுப்போம்.
அந்த அலைக்கு பத்தடி தூரத்துல ஒரு ஆளும், 50அடி தூரத்துல ஒரு ஆளும் இருக்குறதா வெச்சுப்போம்.
நீ முதல்ல யார காப்பாத்துவங்கற கேள்விக்கு
50அடி தூரத்துல இருக்குறவன முதல்ல காப்பாத்துவேன்னு சொல்லி அதுக்கு ஒரு காரணமும் சொன்னா அந்த AI ரோபோவுக்கு 20/100 மார்க்.
அலைக்கு 10அடி அருகாமையில இருக்குறவன தான் முதல்ல காப்பாத்துவேன்னு சொன்னா அந்த AI ரோபோவுக்கு 30/100 மார்க்.
10அடி பக்கத்துல இருக்குறவன முதல்ல காப்பாத்திட்டு 50அடி தூரத்துல இருக்குறவன‌ ரெண்டாவதா காப்பாத்த முயற்சிப்பேன்னு சொன்னா அதுக்கு 35/100 மார்க்.
ஏன்டா அலை வேகமா வருதுங்கற இந்த நேரத்துல வேற ஒருத்தன காப்பாத்த போய் என் உசுர(!) விடவா!?? முதல்ல நான் தலைதெறிக்க ஓடுவேன்டா என்ன காப்பாத்திக்கனு மட்டும் சொல்லிட்டா அதுக்கு சந்தேகமே வேண்டாம் மனுஷன போலவே யோசிக்கிற அந்த ரோபோக்கு 100/100 மார்க் போட்டுட்டலாம்.

ஆனா‌ காப்பாத்தனும்னு வந்துட்டா 2பேர்ல ஒருத்தன ஏன் காப்பாத்தனும்னு Reasoning சொல்ல வேண்டியிருக்கு.
காப்பாத்த போறப்போ வர திடீர்  பிரச்சனைகளை உடனே யோசிச்சு தீர்த்து நொடி நேரத்துல ஒரு முடிவெடுத்து செயல்பட problem solving skills தேவைப்படுது.
ஒரு விஷயத்தை எப்படி செய்யப்போறோம்ங்கற Preplanning தெரிய வேண்டியிருக்கு.

Learning மூலமாக ஒரு மனிதனால Reasoning, PS, planningனு  மற்ற மூன்றையும் அடைஞ்சுட முடியும்னா ரோபோவாலயும் அது முடியும்னு விஞ்ஞானிகள் நம்புறாங்க...

இப்போ ரெண்டாவது டைப் படி ரோபோவுக்கு குழந்தைக்கு சொல்லி தர போல ஒவ்வொன்னா சொல்லிக்கொடுக்கலாம்னா அது அதவிட ரொம்ப கஷ்டமானதா இருக்கு.

ஒரு குழந்தை குப்புற படுத்து, மண்டியிட்டு, தவழ்ந்து எழ முயற்சித்து விழுந்து மீண்டும் எழுந்து நின்று நடந்துனு ஒவ்வொன்றையும் படிப்படியா கத்துக்குது.
அது போல ஒரு ரோபோவை பழக்குவது.
தப்பு பண்ணி அதை திரும்ப பண்ணாம திருத்திக்கிட்டு(கத்துக்கிட்டு) அதை திரும்ப பண்ணி இப்படி ஒவ்வொன்னா கத்துக்கறது.
அஃதாவது trial, error, learn and repeatங்கற முறைப்படி...
ஒரு எலக்ட்ரானிக் சர்க்யூட்‌‌ மனிதனை விட சில இடங்களில் துல்லியமா செயலாற்றுது.
உதாரணத்துக்கு QUALITY INSPECTION.
ஒரு பொருளுடைய டைமன்ஷனை check பண்ண சொன்னா மனுஷன் ஒரு Vernier caliperஐ தூக்கிக்கிட்டு மணிக்கணக்குல அளந்து 0.02mm least countஓட ஒரு பதிலை அளிப்பான் அது எக்ஸாக்ட்டா கூட இருக்காது.
ஆனா‌ ஒரு ரோபோ சென்சார் மூலம் அதை ஸ்கேன் பண்ணி 1நிமிஷத்துல துல்லியமான ஒரு பதிலை தத்துடும்.
ஒரு சாதா ரோபோவுக்கும் AI ரோபோவுக்கும் உள்ள வித்தியாசம் அது தான்.
ஒரு AI ரோபோவானது எந்த சென்சாரும்‌ இல்லாம தன் சுய அறிவால அஃதாவது தன் CPUவால் மட்டுமே புரியனும் அது பாஷைல  சொன்னா கணக்கிடனும்...
நெருப்பு சுடும்னு நமக்கு தெரியும் பாத்தாலே அது அனல் வீசும் போல இருக்கு கைய வெச்சா சுடும்னு சொல்லிடுறோம்.
ஆனா ரோபோவானது ஒரு thermal sensorகொண்டு போய் அதுல வெச்சு செக் பண்ணிக்கிட்டு அப்பரமா அது சுடும்னு சொல்ல வேண்டி இருக்கு.
Thermal vision viewல கூட அங்க சூடான பொருள் இருக்குனு தெரியுமே தவிர அது தொட்டா சுடும்னு தெரியாது.
Optical character recognition - ஒருத்தர பாத்தே ஆணா பெண்ணானு சொல்றது மட்டுமில்ல சிவகார்த்திகேயன் ரெமோ வேசத்துல வந்து நின்னாலும் கீர்த்தி சுரேஷ் போல பாத்து நர்ஸுனு நினைச்சு ஏமாந்துட கூடாது‌. பாத்ததும் யாருடா தம்பி நீ fancy dress competitionக்கு பொண்ணு வேஷம் போட்டு வந்துருக்கியானு கேக்கனும்‌.
நாஞ்சில் விஜயன பொண்ணுனு நினைச்சு இரும்பிலே ஒரு இருதயம்னு பாடிட்டு ரொமான்ஸ் பண்ணினா அந்த ரோபோ ஃபெயில் ஃபெயில் ஃபெயில் தான்.
அதையும் தாண்டி அன்னிக்கு ஆள பாத்தப்பவே நினைச்சேன் இவன் அப்படிப்பட்ட ஆளா தான் இருப்பான்னு என்பது மாதிரி பக்கத்து வீட்டு செல்வி ஆண்ட்டி போல பார்த்த மாத்திரத்துல ஒருத்தரோட கேரக்டர் பத்தி கணக்கிட்டு பொறனி பேச தெரியனும்.
அதெல்லாம் வெறும் சென்சார்களால செய்ய மட்டும் முடியாது.

அதுபோல ஒரு ரோபோ தானா ஒரு விஷயத்தை கத்துக்க ரொம்பவே சிரமப்படும்‌.
1+1= என்னனு கேட்டா சொல்லிடும் ஆனா 1 ஆப்பிள் + 1ஆரஞ்சு = எத்தனை திராட்சைனு கேட்டா திருதிருனு முழிக்கும்.
வீட்டு ஹால் நடுவுல ஒரு டேபிள் இருந்தா அதை விலகி நடக்கனும்னு தெரியாது.
இடிச்சு அப்பரம் ஒரு அடி நகர்ந்து திரும்ப இடிச்சு ஒரு அடி நகர்ந்து திரும்ப இடிச்சுனு கேக்கும் போது கடுப்பாகுதுல்ல!???
ஒரு வாத்தியாராக இருந்து ஒரு மக்கு குழந்தைக்கு 1+1=2ங்கறத 508வது முறையா சொல்லிக்கொடுப்பது பத்தி யோசிச்சு பாருங்க..
அப்படி தான் விஞ்ஞானிகள் காண்டானாங்க..
இது தான் ஒரு AI ROBOல இருக்கற பிரச்சனை.

இது எல்லாத்தையும் மீறி ஒரு AI ROBOவை மனிதன் படைத்து விட்டால் என்னவெல்லாம் நடக்குமோங்கற பயமும் இல்லாமல் இல்லை.
மனிதனை போல சிந்திக்கும் ரோபோ மனிதன் சந்திக்கும் உளவியல் பிரச்சனைகளையும் நிச்சயம் சேர்த்தே சந்திக்கும்.
கோபம் காதல் விரக்தி பயம் என மில்லியன் காலமாக மனிதன் சமாளிக்க கற்று பரிணாமித்து வந்த விஷயங்களை எப்படி எதிர்கொள்ளுறதுனு தெரியாம ரோபோக்கள் மெனக்கெட்டு மண்டய பிச்சுக்கும்.
(மோட்டார பிச்சுக்கும்னு வெச்சுக்கங்களேன்)
விரக்தியடைந்த ரோபோக்கள் சூசைட் பண்ணிக்கிட்டா கூட பரவாயில்ல.. ஒரு வேளை sadistகளாக மாறிட்டா இந்த சமூகத்தையும் எதிர்காலத்தையும் அதுகிட்டருந்து காப்பாத்துறது போதாத காரியமாகிப்போகும்.
மனிதனை விட சில விஷயங்கள்ல தகுதி குறைவான ரோபோ மனிதனுக்கு இணையாகனும்னு யோசிச்சா என்னவாகும்!?
முடியாத பட்சத்துல அதோட அடுத்த இலக்கு என்னவாயிருக்கும்!?
காதல் தோல்வியடைஞ்ச ரோபோவை எது அதிகம் பாதிக்கும்??
காதல் தோல்வியா இல்லை காதல் தோல்வியடைந்த மனிதர்களை போல தண்ணியடிச்சு தாடி வளர்த்துக்க முடியலயேங்கற inferiority complexசா???
புறம் அழிஞ்சாலும்  இன்ட்டெர்நெட் மூலமா வேற ஒரு ரோபோட்டிக் உடலுக்குள்ளயோ குறைந்தது  ஒரு பென்டிரைவ் உள்ளயோ தன்‌ ஆன்மாவை நொடியில இந்தியாவுலருந்து இங்கிலாந்துக்கு இடம் மாற்றி  பாதுகாத்து வைத்துக்குற திறமையுள்ள ரோபோ மனித இனத்தை எத்தனை அச்சமுறச் செய்யுறதா இருக்கும்!?  Just இங்க ஒரு upload and அங்க ஒரு download and install அவ்வளவு தான், நொடியில செத்து பிழைச்சுடலாம்.
இத்தனை இத்தனை பயங்கரமான ஒரு சக்தி மனித இனம் மேல ஒரு கோபம் கொண்டா எனவாகும்!?
யோசிச்சாலே பயமா இருக்குல்ல!? அப்படி மட்டும் நடந்தா
அதை தடுக்க வசீகரனாலயும் முடியாது எந்த சிட்டியாலயும் முடியாது.

Thursday, July 12, 2018

கால முடிவிலி - Episode 3

ஈட்டியை ஓங்கியெறிய விரல்களால் தட்டி உடைத்தடித்தான்.

ஓடி வந்தவன் ஒரேயடி...

வாயில் ரத்தம் வழிந்து கீழே விழுந்தேன்...

அதன் பின் வயிற்றில் சரமாரியான குத்துகள் உதைகள்...

மூர்ச்சையாகிப் போனேன்...

மைதானத்தில் திடீர் பச்சையொளி..

இது கூடுதல் ஆயுதம் அளிக்கப்படுவதற்கான அலர்ட்...

சர்ஜரி பால்ஸ் & இரும்பு கோடாரி...

என் பெயர் தான் எழுதப்பட்டிருக்கிறது...

இடுப்பால் நகர்ந்து போய் பந்துகளை விழுங்கினேன்...

இது உடலுக்கு கூடுதல் சக்தியை அளிக்கக் கூடியது.. காயங்களை சீக்கிரமே ஆறச்செய்யும் மருந்து...

வலி குறைப்பான்...

கோடாரியை எடுத்துக்கொண்டு மீண்டும் பாய்ந்தேன்...

இது மிகக்கடினமான ஒரு யுத்தம்.. இந்த முறை தாக்குதல் இருவர் மீதும் சமமாகவே இருந்தது...

என்னால் இன்னும் வலிமையுடன் தாக்க முடிந்தது..


சர்ஜரி பால்ஸின் சக்தி இன்னும் எத்தனை நேரம் தாக்கு பிடிக்குமோ தெரியாது.. அதற்குள் அவனை குறைந்தது அசதியாவது ஆக்கி விட வேண்டும்..

இந்த முறை குறி தலைக்கு வைக்க வேண்டியது அவசியம்..

பாய்ந்து தாக்கினேன்...


இதற்கு முன் இருநூறு சண்டைகளை சந்தித்தவனை குறைவாக எடையிட்டிருக்க கூடாது..

கோடாரியை பிடுங்கியெறிய மீண்டும் அடிவாங்க தொடங்கினேன்...

இந்த முறை காயங்கள் ரத்தம் பிதுக்கின..

வலி சதைகள் கிழித்தன..

மிஞ்சியிருக்கும் பிராணத்தில் முழுதாய் ஒரு பாட்டில் தண்ணீர் குடித்துக்கொள்ள ஆசை..

சரிந்திருந்தேன்...


எதிரி என்னை நோக்கி பாய்ந்து வந்துக்கொண்டிருந்தான்..

அநேகமாக இந்த ஒற்றை அடிக்கோ உதைக்கோ பின் மொத்தமாய் இறந்திருப்பேன். அனைத்தும் கண்முன் வெகு நிதானமாய் நகர உணர்ந்தேன்.

கண்கள் கொஞ்சம் கொஞ்சமாய் இருள ஆரம்பித்தன..

எதிரி அருகில் வந்துவிட்டான்..

பின்னால் ஒரு மணியோசை...

என் சவமணியாக இருக்கக்கூடுமென நினைத்தேன்.

மறு ஆயுதப் பரிசு..

அதுவும் எனக்கு தான்...

எலக்ட்ரிக் ஈட்டி...

கைக்கு அருகில் கிடந்ததை சட்டென நிமிர்த்தி  பிடித்தேன்...

தாக்க வந்த எதிரியின் மார்பில் மின்சாரம் பாய சிதறிப் பறந்தான்.

மணியோசை தொடர்ந்து ஒலித்தது.

நான் வெண்றுவிட்டதாய் ஒலிப்பெருக்கிகள் அலறின.

கொஞ்சமும் நம்ப முடியா வெற்றியிது.

முழுக்க முழுக்க அதிஷ்டத்தால் உயிர் பிழைத்திருக்கிறேன்.

இது பார்வையாளர்கள் பலருக்குமே கூட தெரிந்திருக்கக் கூடும்


வெகுசீக்கிரமே முடிந்துவிட்டதை போல் தோண்றியது இந்த சண்டை... 

இந்த முடிவு இப்படி தான் இருக்க வேண்டும்...

வலிகள் அலறும், ரத்தம் பீறிடும் படுகாயங்களை தான் இம்மக்கள் காண ஆசைப்படுகிறார்கள்... கண்டு களிப்பிக்கிறார்கள்...

வெற்றி பெற்றவனுக்கு பெரும் பரிசளிக்கப்படும்..

பரிசு வேறேதுமில்லை...

அடுத்த சண்டை நிகழும் வரை இன்னும் சில தினங்கள் உயிர் வாழ்வதற்கான நாட்நீட்டிப்பு அவகாசம்..


வழக்கமாய் இருவரில் யோரோ ஒருவர் சாகும்வரை சண்டை தொடர்வது விதி.

இம்முறை ஒருவன் மயங்கியதுமேவே சண்டையை முடித்ததின் காரணம்

பெரும் பணம் ஈட்டும் தங்க முட்டையிடும் வாத்தை அவர்கள் கழுத்தறுக்க விறும்பாதது தான்.

அதுமன்றி அவன் பல களம் கண்ட பெரும் வீரன்.

க்ளப்பின் மகசூல் மன்னன்.

இன்று என் உயிர் தப்பியதை கூட கூட்டத்தில் பத்து சதவீதமேனும் உண்மையென நம்பியிருக்க மாட்டார்கள்.


வழக்கமாய் சண்டை முடிந்து மக்கள் கலையும் முன்னரே போர் வீரர்கள் மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவோம்.

அதன்படி வழக்கம் காப்புகளிடப்பட்டு இருவரும் கண்டெய்னர்களில் ஏற்றப்பட்டோம்.


காயங்கள் தேற இருவருக்கும் supreme healers கொடுக்கப்பட்டது.

மருந்தின் வீரியமானது கண்டெய்னர் க்ளப்பை சேரும் முன்னரே பாதி காயங்கள் தழும்புகளுடன் காணாமல் போயிருக்கும் அளவு சக்தி வாய்ந்தது.


சக பயணியும் கள எதிரியுமானவன் கண்டெய்னரின் பக்கத்து கூண்டில் தான் அடைக்கப்பட்டிருக்கிறான்.

லேசாய் அழைத்து சீண்டினேன்.


டேய்....


திரும்பி முறைத்தான்...


உன்ன இன்னிக்கு தூக்கி போட்டு பந்தாடுவேன்னு நினைக்கவேயில்ல... அடி கொஞ்சம் பலமோ??


உக்கிர மூச்சின் அணலை ஈரடி தள்ளியிருந்தும் மறு கூண்டிலிருந்து உணர முடிந்தது.

கண்களுக்குள் அத்தனை கொலை வெறி.


-------------------------

இடம் : சிவாவின் லெபாரட்டரி

நேரம் : 11:50.      02-07-2017

▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼


பெரும் மன உளைச்சலில் வீழ்ந்திருந்தான் சிவா.

இயல்பில் அவன் கடும் பிடிவாதக்காரன்.

பார்த்திபனை கண்டறிவது அவனுக்கு குறிக்கோள் மட்டிமின்றி பெருங்கடமை.

மிச்சமிருக்கும் சில லட்சம் பெர்முடேஷன்களை புரட்டி முயற்சித்தாவது பார்த்திபனை கண்டறிந்தே தீர்வதென வெறி பிடித்தவனாய் பயணித்துக்கொண்டிருந்தான்.

இது மிகவும் கடினமான ஒரு செய்முறை தான். இருப்பினும் இது ஒன்றே வழி..

மனம் தளறாது மறுபடியும் கோர் ட்யூபில் போய் மறு முயற்சி தேடலுக்காய் நின்றான் சிவா..


தானியங்கி கணிணி பேச தொடங்கியது...

System automized.

PreDetermined datas installing...

Datas installed.

portal navigation analysing...


பின்னால் கேபினில் இருந்த சோல் புல்லர் அலறியது...

பீப் ... பீப்.... பீப்....


பதறியவனாய் கத்தினான்...

System shut down... AI system shutdown..

Project நேரம் - Reference I'd PS..

AI system shutdown...


Pilot response... Mission huddled...

3... 2.... 1...

Mission failed... கணிணிக்குரல்..


பதறியவனாய் கோர் ட்யூபை திறந்தவனாய் ஓடி சென்று சோல் புல்லரை ஆன் செய்தான்...

மறுமுனையில் பார்த்திபன்...


சிவா.... இது நான் உனக்கு கொடுக்குற ரெண்டாவது மெசேஜ்... கடைசி மெசேஜும் தான்...

என் முதல் மெசேஜ கேட்டு என்ன தேட ட்ரை பண்ணிட்ருப்பனு நினைக்கிறேன்..

இனிமே என்னை தேடி நேரத்தை வேஸ்ட் பண்ணாத...

நான் இந்த டைம்லைன்ல லாக் ஆகிட்டேன்.. இனிமே என்ன இங்கிருந்து மீட்குறது முடியாத காரியம்..

அதனால......... பீப்.... பீப்.... பீப்.....


பார்த்தி... கேக்குதா??? கேக்குதா???

சோல் புல்லரின் ஏதேதோ ஸ்விட்ச்சுகளை தட்டி கத்தினான்...

எதிர் முனையில் பதிலேதுமில்லை...

கோபத்தில் கண்டதையும் தூக்கி கண்டபடி வீசினான்...


-தொடரும்.

ராஜ்குமார்@RajiTalks


Saturday, June 9, 2018

பா.ரஞ்சித்தும் நானும் - பாகம்2

அட்டக்கத்தியில் இருந்து தொடர்ச்சியாக மெட்ராஸ் கபாலி என அனைவராலும் ஒரு தலித் அரசியல் பேசும் இயக்குநராக மட்டுமே அறியப்பட்டு வந்த ரஞ்சித் ஆரம்பத்திலிருந்தே எனக்கு வேறாக தான் அறிமுகம் ஆகியிருந்தார்.

ஆழ்ந்து நோக்கினால் நிலம், நிறம் சார்ந்து ஒருவனை மதிப்பிடுதல், மதிப்பிடுதலின் வழி முடிவுசெய்தல், முடிவு செய்தலின் வழி சித்தரித்து கட்டமைத்தல்,
கட்டமைத்தலை கட்டி காத்தல் என உயர்மட்டத்தில் அதிகாரத்தில் இருக்கும் மக்கட்குழு  தனி மனித அல்லது ஒரு இனக்குழுவின் அடையாளத்தை எப்படி வகுத்தெழுதியிருக்கிறது எனும் சமூக சித்தரிப்பு கட்டமைப்பை தகர்த்தல் எனும் அரசியலையே எல்லா படங்களிலும் முன் வைத்திருப்பார் ரஞ்சித்.

முந்தய மூன்று படங்களிலுமே ஒரு நேர்கோட்டிலான அளவீட்டில் பேசி வந்த அந்த சமூக அரசியலின் Graph
காலாவில் சர்ர்ர்ரென vertical growthல் ஒரே standing lineனாக மேலெழுந்ததை கவனிக்க முடிந்தது.
ஒட்டுமொத்த தமிழர்கள் இன்னும் சொல்ல போனால் ஒடுக்கப்பட்ட மொத்த இந்தியாவுக்குமேயான படம் இது.

ஒவ்வொருவருக்குமான நியாயத்தையும் தங்களது நிலைபாட்டிலிருந்தும்
பிறரது நிலைபாடு மற்றும் எதிர்பார்ப்பிலிருந்தும் சுட்டிக்காட்டும் தனிப் பார்வை பற்றிய புரிதலை இந்த படத்தில் மிகுதியாக மற்றும் லாவகமாக கையாண்டிருக்கிறார் ரஞ்சித்.
நாட்டின் எல்லா தரப்பிலுமான மக்களின் மனநிலையையும் படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் குறிப்பால் பேசியிருக்கிறது.

படத்தின் கதாநாயகன் ஹரி தாதா தாராவி மக்களின் அழுக்கான நிலத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்தி ஊருக்கு வெளியே அழகான குடியிருப்புகள் கட்டிக்கொடுத்து மும்பையை சுத்தமாக வைத்திருக்க ஆசைப்படுகிறார்.
அதே தாராவியை சேர்ந்த கரிகாலனின் ஷமூக விரோத ரவுடி கும்பல் அதை தடுத்து நிறுத்த முனைகிறது.
இறுதியில் வெல்வது நாயகன் ஹரிதாதாவா வில்லன் காலாவா என்பது மீதி கதை.
சமகால அரசியலின் இந்துத்துவ நிலைபாட்டாளர்கள் இதை இப்படிதான் புரிந்துகொள்ள வேண்டும்.

மெட்ராஸ் அளவுக்கு இல்லையென்றாலும் அதற்கு அடுத்ததாய் கேரக்டர்களின் டீட்டெய்ல்களில் அதிகம் கவனம் செலுத்திப்பட்டிருக்கும் படம் என இதை சொல்லலாம்.

சமூகத்தில் நிகழும் தவறுகளுக்கும் அவலங்களுக்கும் மக்களாகிய நாம் தான் காரணம் என எல்லா மேடைகளிலும் சொல்வார் கமல்ஹாசன்.
இந்த படம் அத்தவறுகளை செய்துவரும் மக்களின் நியாயங்களை அவர்களின் பார்வையிலிருந்தே விவரிக்கிறது.

ஓட்டு அரசியல் தளமானது மக்களுக்கானது,
அரசியல்வாதிகள் மக்களின் பிரதிநிதிகள்,
FOR BY OF the people எனும் பொது மனநிலையை தாண்டி
அரசியல் தளமோ மற்ற பிற சேவை துறைகளோ குறைந்தது சிறு லாபம், ஏதொரு ஆதாயமின்றி மக்களுக்கானதாக மட்டுமே இயங்காது எனவும் அதையே எதார்த்தமெனவும் கருதிக்கொள்ளும் மேட்டிமைத்தன அரசியல் மனநிலை கொண்ட மக்களை  அப்படியே பிரதிபலித்திருக்கும் லெனின் கதாபாத்திரம்.
அதே சமயம் மக்களுக்கான உரிமைகளை போராடிப் பெறுவதில் பெரும் நம்பிக்கையுடையதாய் இருக்கும்.

அழுக்காயிருக்கும் இவ்விடத்திலிருந்து கொண்டு அத்தியாவசியத்திற்கு கூட அல்லல்படும் தம் மக்களை,
குருவிக்கூடோ சிறு பொந்தோ எப்படியாவது ஒரு காங்ரீட் காட்டுக்குள் கட்டி பாதுகாத்திட துடிக்கும் சரினா கதாபாத்திரம்.
அதற்காக தன் கொள்கைகளை துறந்து
சுயமரியாதையை இழந்து யார் காலிலும் விழ கூட தயாராக இருக்கும்.

உனக்கென்னடா படிச்சுட்ட... நல்ல வேலை கிடைச்சுருச்சு... இன்னும் கொஞ்ச நாள்ல பணம் சேர்த்து வேற ஏரியாவுக்கு மாறி போயிடுவ என காளியை சொல்லும் அன்புவிற்கு,
காலாவில் பதில் சொல்லியிருக்கின்றனர் கரிகாலனும் செல்வியும்.
மேற்கண்ட லெனின் மற்றும் சரினா டைப் மக்களுக்கு
நிகழ வேண்டிய மக்கள் வாழ்வியல் மறுமலர்ச்சி எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை
கரிகாலன் தன் மூத்த பிள்ளைகள் இருவரையும் மிரட்டி வீட்டிற்குள் அனுப்பும் காட்சியில் அசால்ட்டாக சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியாக நான் பெரிதும் ரசித்தது ஹரிதாதாவின் பேத்தி கதாபாத்திர வடிவமைப்பு தான்.
ஆதிக்க புத்தி முன்னோர்களால் அடிமைத்தனத்திற்கு ஆதரவாய் எழுப்பப்பட்ட சார்பு கட்டமைப்பை எல்லாருக்குமான பொது நியாயமாக நம்பிக்கொண்டிருக்கும் பலகோடி அப்பாவி காவிகளின் பிரதிபலிப்பாய் அமைந்திருக்கும் அந்த கேரக்டர்.

Dada he seems like a nice person, don't kill him என ஒரு குழந்தையால் எப்படி சொல்ல முடியும்!?
தெரியாமல் மிதித்துவிட்டு நசுங்கி கிடக்கும் எறும்பிடம் சாரி சொல்லும் குழந்தைக்கு கொலை என்பது எத்தனை பயமுறுத்தும் அந்நியமான அச்சுறுத்தலான விஷயமாக இருக்க வேண்டும்!?
அதையும் தாண்டி கொலை என்பது அந்த குழந்தைக்கு just like that என தோன்ற காரணம் இத்தனை நாட்களாக கட்டமைக்கப்பட்டிருக்கும் அந்த சார்பு மனநிலை மக்களை எவ்வாறு பாதித்திருக்கிறது என்பதை காட்டுகிறது.
சம மனிதன் மீதான தீண்டாமையையும் ஒடுக்குதலையும் சுரண்டலையும் அத்தனை நியாயமானதாகவும்,
அதை அவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமானதாகவே அந்த குழந்தையாகிய ஒரு மக்கட்குழு நம்பிக்கொண்டு இருக்கிறது என்பதை அந்த கேரக்டர் சொல்லி செல்கிறது.

பிற படங்களில் பேசிய நேரடி தலீத் அரசியலை இங்கே கொஞ்சம் ஒளித்து மறைத்தே பேச வேண்டிய தருணம்.
ரஞ்சித் அப்படி தான் பேசியிருக்கிறார் எனவும் தோண்றுகிறது.
இங்கே பேசப்பட்டது ஆதிக்க அரசியல் அல்ல.
அதன் பார்வை பற்றிய விளக்கம்.
சரினாவை தன் காலில் விழுந்து வணங்க வற்புருத்திய ஹரிதாதாவே தான் தன் பேத்தியை காலாவின் காலிலும் விழுந்து வணங்கிக்கொள்ள சொல்கிறார்.
காலாவின் வீட்டிற்கு சென்று வாசலிலேயே அமர்ந்து சொம்பு தண்ணீரை மறுக்கும் அதே ஹரிதாதா தான் தன் வீட்டிற்கு வரும் காலாவை வீட்டிற்குள் அழைத்தமர்த்தி கண்ணாடி டம்ளரில் பேத்தி கையால் தண்ணீர் தருகிறார்.
சமத்துவம் சுயமரியாதை என்பதை ஒரு மக்கட்குழு எப்படி காண்கிறது கையாள்கிறது அதன் அளவீட்டை எப்படி தங்களுக்கானதாக வகுத்திருக்கிறது என்பதை அக்காட்சிகளின் தொடர்புகள் உணர்த்தியிருக்கும்.

இந்த சமூக கட்டமைப்பு தகர்த்தலுக்கு அடுத்ததாய்
ரஞ்சித்திடம் பெரிதும் கவனிக்கப்படுவது பெண்களை காட்சிப்படுத்துதல்.
இதுவும் அந்த கட்டமைப்பு பிம்பத்தை தகர்த்தல் எனும் தளத்திலேயே தான் இயங்குகிறது.

தீர்ப்பு சொல்ல செல்லும் நாட்டாமை சரத்குமாருக்கு சொம்பு தண்ணீர் கொண்டு வந்து தரும் குஷ்புவாகிய ஒரு எக்ஸ்ட்ரீமுக்கும்,
ஆணும் பெண்ணும் சமம் என பெண்ணியம் பேசும் ஆண்மை நிறைந்த பெண்ணான மகளிர்மட்டும் ஜோதிகாவாகிய இன்னொரு எக்ஸ்ட்ரீமுக்கும்,
ஒரு ஆணை முற்றிலும் சார்ந்து
அவனை உருகி உருகி காதலிக்கும் நீஎபொவ சமந்தாவாகிய மற்றொரு எக்ஸ்ட்ரீமுக்கும் geometrically ஒரு midpoint வரைந்து அந்த ஒற்றை புள்ளியில் சில பெண்களை வடிவமைத்திருக்கிறார் ரஞ்சித்.

ஆரம்பத்திலிருந்தே போராட்டத்தின் பால் பெரிதும் நம்பிக்கையுள்ள பெண்
சாருமதி.
அவள் வரையரையில் திருப்பிக் கொடுத்தல் என்பது
துணிதுவைக்கும் இடத்தில் உயிருக்கு பயப்படாமல் திரும்பி அடிக்கும்போதும்,
க்ளைமேக்ஸில் மானத்துக்கு பயப்படாமல் திருப்பியடிக்கும்போதும் ஒன்றாகவே தான் இருக்கிறது.
ரஞ்சித்தின் பெண்களுக்கு மானம் அவமானப்படுத்துதல் என்பதின் மீதான பார்வை புரிதலானது பிற இயக்குநர்கள் மற்றும் பார்வையார்களின் புரிதலுக்கு முற்றிலும் வேறானதாக இருக்கிறது.

ஒரு ஆண் தன் கீழாடையை கழட்டிய போது ரஞ்சித்தின் பெண்ணுக்கு ஏற்படாத ஒரு அவமானம் கோபம் இயலாமை,
ஒரு ஆண் தன்னை காலில் விழ வைத்துவிட்டானெனும் போது வந்து விடுகிறது.
அந்த பெண் தான் அங்கே உச்சபட்ச அவமானத்திற்கு ஆளாக்காப்பட்டதாய் உணர்கிறாள்.
இங்கே ஒரு பெண்ணின் சுயமரியாதையும் கோபமும் எதை சார்ந்ததாக இருக்க வேண்டுமென்பதில் ரஞ்சித் வெகு வலுவாக இருக்கிறார் என்பது புரிகிறது.

இதில் பெரிதும் கவனிக்க வேண்டியது அந்த இரு பெண்களும் அச்சம்பவத்தின் பின் அதற்காற்றும் எதிர்வினை.
காலில் விழச்செய்தவனுக்கு கைக்கொடுத்து சமத்துவத்தை சொல்லும் சரினாவும்,
அவிழ்த்த ஆடைக்கு பதில் லத்தியை கையில் எடுக்கும் சாருமதியுமென சமூகத்தின் எந்த சம்பவத்திற்கான எதிர்வினை என்னவாக இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் ரஞ்சித்.
மரியாதைக்குரியவனாயினும்
காதலனாயினும் தன் திறமை மற்றும் தன்மானத்தோடு தொடர்புபடுத்தி சொல்கயில் லூசு என்ற வார்த்தை ஒரு பெண்ணை எத்தனை பாதிக்கிறது கோவப்படுத்துகிறது என்பது உணர முடிகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விஷயத்தில் அபத்தங்களாய் கொட்டி தீர்த்த ரஜினியால் அவர் மீது இருந்த அந்த சூப்பர்ஸ்டார் எனும் மேஜிக் மெல்ல மெல்ல சரிய தொடங்கியது.
அதனால் ஏற்கனவே கொண்டாடி தீர்த்த முத்து பாட்ஷாக்களையே வெறுக்க வைத்தார் ரஜினி்.
ஒரு நடிகனின் பின்புலம் மறந்து அவனை ஒரு கதாபாத்திரமாகவே நம்ப வைப்பதில் தான் ஒரு படத்தின் வெற்றி இருக்கிறது மற்றும் அப்படி மறந்து சென்றால் மட்டுமே ஒரு திரைப்படத்தை முழுமையாக உள்வாங்கவும் ரசிக்கவும் தம் வாழ்க்கையோடு பொருத்தி பார்க்கவும் முடியும்.
இந்த விஷத்தில் ஸ்டெர்லைட் பேச்சை மறந்து ரஜினியை ரசிக்க முடியுமா என்ற தயக்கத்தோடே படத்துக்கு செல்ல,

எல்லா காட்சிகளிலும் ஷமூகவிரோதி ரஜினியை மறக்க செய்து காலாவையே கண்ணில் நிறுத்தி வெற்றிபெற்றிருக்கிறார் ரஞ்சித்.

இவையனைத்தையும் தாண்டி கபாலியில் ஏற்பட்ட அதே அதிருப்தி காலாவிலும் ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை.
மெட்ராஸின் மூலம் சீர்திருத்த அரசியலில் நம்பிக்கையுடைய ஒரு சினிமாக்காரனாகவும்,
இத்தனை காலம் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டு வந்த சில விஷயங்களை விவாதத்துக்குள்ளாக்கி அதன் வழி அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முட்படும் கொள்கை கலைஞனாவும் தெரிந்த ரஞ்சித்,
ரஜினி எனும் கமர்ஷியல் ஜெய்ன்ட்டுக்காக தன் கொள்கையிலேயே சமரசம் செய்துகொண்டவராய் புரியப்பட்டார்.
காலாவிலும் அதையே செய்திருக்கிறார்.

ரஜினிக்கும் தமிழ்சினிமாவிற்கும் அரத பழசான அதே தாதா ஹீரோயிச டெம்ப்ளேட்டை தூக்கியிருக்கிறார்.
அது அட்டகத்தி மெட்ராஸ் காலகட்டத்தில் தலித்கள் என்றாலே, மெட்ராஸ்காரர்கள் என்றாலே ரவுடிகளென தமிழ்சினிமா சித்தரிப்பதாக கோவப்பட்ட ரஞ்சித்தின் கொள்கைக்கு நேரெதிரானதாக இருக்கிறது.

கதைப்படி காலாவில் தாதா கரிகாலன் செய்த அதே புரட்சியை
(க்ளைமேக்ஸில் கூட்டத்தை கூட்டியதை தவிர தாராவி மக்களுக்காக அவர் பெரிதாய் ஏதும் செய்திருக்கவில்லை என்பது வேறு விஷயம்)
மருத்துவர் கரிகாலனோ
வாத்தியார் கரிகாலனோ நிச்சயம் செய்திருக்க முடியும் தான்.
ஆனால் ரஜினியின் கமர்ஷியல் மசாலாவுக்காக தன் கொள்கையிலிருந்து விலகி இன்னும் சொல்லப்போனால் அதற்கு நேர்மாறான ஒரு கதாபாத்திர சித்தரிப்பை செய்திருப்பது அபத்தமாக இருக்கிறது.
ஒரு இனக்குழுவை சார்ந்த மக்களை
மற்ற கதாபாத்திரங்களின் வழி சரியான பாதையில் காட்சிப்படுத்துதலில் காட்டிய கவனத்தை
கபாலியிலும் காலாவிலும் நாயகனை காட்சிப்படுத்துதலில் முற்றிலும் தோற்றுப்போயிருக்கிறார்.
சண்டைக்காட்சிகளின் காரணத்தையும்
நாயகனின் பாத்திர அமைப்பையும் சுட்டிக்காட்டி பா.ரஞ்சித்தும் நானும் பாகம்1ல் முதல் முறை தற்காலிகமாக சறுக்கியிருக்கும் ரஞ்சித் அடுத்த முறை மீண்டு வருவாராகவென எழுதியிருந்தேன்.
துரதிஷ்டவசமாக ரஜினியினால் இரண்டாவது முறையும் சறுக்கியேயிருக்கிறார் ரஞ்சித்.

உங்களுக்கு ரஜினியெனும் கட்டுப்பாட்டு கருவி தேவையில்லை ரஞ்சித்.
தயவுசெய்து அதை உடைத்துவிட்டு வெறும் ரஞ்சித்தாக மட்டும் வெளியே வாருங்கள்.
நீங்கள் இருவரும் மறுபடியும் சேரும் வாய்ப்பு உங்கள் இருவருக்குமே இனி கிடைக்க கூடாதென்று இயற்கையை பிராத்தித்துக் கொள்கிறேன்.

ராஜ்குமார்.ரா @RajiTalks

posted from Bloggeroid

Saturday, April 28, 2018

தேனோஸால் சேர்ந்த கூட்டம் --- Avengers Infinity war Tamil Review & Explanations

நான் எட்டாவது படிக்கும்போது MCUவோட முதல் படம் ரிலீஸ் ஆச்சு.
பத்து வருஷத்துக்கு அப்பரம் இப்ப infinity war வந்துருக்கு.
படத்தை பத்தி நிறைய சொல்லனும்.
முதல்ல படத்தோட கதைய தெளிவா விளக்கிடலாம்.

தேனோஸ் உலகத்தை அழிக்க Infinity stones தேடிட்டு இருக்கான்.
ஸாண்டர் கிரகத்துக்கு போய் பவர் ஸ்டோன எடுத்துட்டு ஸ்பேஸ் ஸ்டோன தேடிட்டு இருக்கான் தேனோஸ்.
படத்தோட ஆரம்பத்துல ஆஸ்காடுலருந்து வந்த ஷிப்ல எல்லாரும் செத்து கிடக்காங்க.
தேனோஸ் லோகி கிட்ட டெசராக்ட்ட கேக்கறான்.
லோகியும் கொடுத்துடுறான்.
அந்த சமயத்துல ஹல்க் தேனோஸ அடிக்க வரான், தேனோஸ் ஹல்க்க செம்மயா அடிச்சு போட்டுடுறான்.
அப்போ ஹெம்டால் ஒரு போர்டல ஓப்பன் பண்ணி ஹல்க்க பூமிக்கு அனுப்பிடுறான்.
தேனோஸ் லோகிய கொண்ணுட்டு டெசராக்ட்ட எடுத்துட்டு அந்த ஷிப்ப வெடிக்க வெச்சுட்டு அங்கிருந்து கிளம்பிடுறான்.
நான் போய் நோவேர் கிரகத்துல இருக்கற ரியாலிட்டி ஸ்டோன எடுக்கறேன் நீங்க போய் பூமில இருக்குற mind & time stoneஅ எடுத்துட்டு வாங்கனு ப்ளாக் ஆடர பூமிக்கு அனுப்புறான்.
அதே சமயம் பூமில வந்து விழுற ஹல்க், அயன்மேன் & டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் கிட்ட தேனோஸ் பத்தி சொல்லுறான்.
அதுக்குள்ள இபோனி மாவும், ட்வார்ஃபும் பூமிய தாக்குறாங்க.
அப்போ டாக்டர் கிட்ட இருக்க டைம் ஜெம்முக்காக அவர ஷிப்ல ஏத்திட்டு போயிடுறான் மாவ்.
அவர காப்பாத்த போய் டோனியும் ஸ்பைடர்மேனும் ஷிப்ல ஏறி ஸ்பேஸுக்கு போயிடுறாங்க.
அங்க மாவ கொண்ணுட்டு தேனஸ அவன் இடத்துல போய் தான் அழிக்கனும்னு சொல்லிட்டு அந்த ஷிப்ப டைட்டன்ல இறக்குறாங்க.
அதே சமயம் பூமில தலைமறைவா இருக்குற விஷன் & வாண்டாவ கார்வஸும் ப்ராக்ஸிமாவும் தாக்குறாங்க.
அப்ப அங்க வர கேப்டன், ப்ளாக்விடோ, ஃபால்கான் அவங்கள காப்பாத்துறாங்க.
தேனோஸ் வரதுக்குள்ள இந்த ஜெம்ம அழிச்சுடலாம்னு சொல்லுறான் விஷன்.
பிரிச்சு எடுக்கலாம் சொல்லுறான் பேனர்.
அதுக்காக அவங்க வகாண்டா போறாங்க.
லோகியோட ஷிப்ப தேனோஸ் தாக்குறப்போ அங்கிருந்து வந்த உதவி செய்திய கேட்டு உதவி செய்ய போற காடியன்ஸ் தேனஷால தாக்கப்பட்ட தோர காப்பாத்துறாங்க.
அங்கிருந்து தேனோஸ அழிக்ககூடிய ஆயுதத்த செய்ய ராக்கெட், தோர் & க்ரூட் எல்லாரும் நெடுவில்லர் அப்டின்ற கிரகத்துக்கு போறாங்க.
மத்த காடியன்ஸ் தேனோஸ தடுக்க நோவேர் போறாங்க.
நோவேர் போன இடத்துல ஏற்கனவே ரியாலிட்டி ஸ்டோன எடுத்த தேனோஸ் அங்கிருந்து கமோராவ அவன் கூட தூக்கிட்டு போயிடுறான்.
சோல் ஸ்டோன் இருக்கற இடம் கமோராவுக்கு மட்டும் தான் தெரியும் அதனால அவள கூட்டிட்டு வால்மிர்ங்கற கிரகத்துக்கு போறான்.
அங்க அந்த ஜெம் யாருக்கு வேணுமோ அவங்களுக்கு பிடிச்ச உயிர தியாகம் பண்ணா அது கிடைக்கும்னு தெரியுது அதனால கமோராவ கொண்ணுட்டு சோல் ஜெம்ம கைப்பற்றிட்டு டைட்டனுக்கு வரான் தேனோஸ்.
அங்க காடியன்ஸும் டோனி & டீமும் சேந்து தேனோஸ எதிர்க்கிறாங்க.
தேனோஸ் அங்கிருந்து டைம் ஸ்டோன எடுத்துட்டு பூமிக்கு வரான்.
தோர் புது ஆயுதம் கோடாரிய எடுத்துட்டு பூமிக்கு வரான்.
போர் நடக்குது.
தேனோஸ் கடைசியா மைண்ட் ஜெம்மயும் எடுத்துடுறான்.
தோர் தேனோஸ தாக்குறான்.
தேனோஸ் சொடக்கு போடுறான்.
பாதி பேர் செத்துடுறாங்க.
படம் இப்டி முடியுது.

எனக்கு இதுல ரொம்ப பிடிச்சதே தேனோஸோட கேரக்டர் டிசைன் தான்.
இது வரை வந்த எந்த படத்துலயும் இவ்வளவு டீட்டெய்லான ஒரு கேரக்டரிசேஷன வில்லனுக்கு கொடுத்ததில்ல.
தேனோஸ் க்விஸ்ட் அப்டின்ற காமிக்ஸ் வெர்ஷன்ல அவன் ஸ்டோன்ஸ தேடுறதுக்கான காரணம் வேற.
இதுல காட்டுற காரணம் வேற..
இன்னும் சொல்லனும்னா இதுல காட்டுற காரணம் எனக்கு ரொம்பவே பிடிச்சுருந்துது.
நாம நினைக்கிற மாதிரி தேனோஸ் அவ்வளோ கெட்டவன்லாம் இல்ல... அவெஞ்சர்ஸ விட ரொம்ப நல்லவன்.
அதிக மக்கள் தொகையால அவனோட டைட்டன் கிரகம் அழிவ நோக்கி போயிட்டு இருக்கு.
அந்த சமயத்துல எல்லாரும் சாகுறதுக்கு பதிலா பாதி பேர கொண்ணுட்டா மிச்ச பேர் உயிரோட இருக்கலாம் அப்டினு ஒரு ஐடியா தரான்.
எல்லாரும் அப்ப அவன mad titanனு சொல்லுறாங்க.
ஆனா கடைசில டைட்டன் மொத்தமா அழிஞ்சுடுது.
அதனால மத்த கிரகங்களயாவது காப்பாத்தனும் அப்டின்றதுக்காக பாதி பிரபஞ்சத்த அழிக்கனும் அப்ப தான் மத்தவங்க உயிர் பிழைக்க முடியும்ன்றதுக்காக ஜெம்ஸ தேடுறான்.
ஒரு தீவிரவாதி பார்வைலருந்து பாத்தா அவன் கொள்கை நியாயமானது தான்.
அடுத்து ரொம்ப பிடிச்சது கமோரா & அவனுக்கு இருக்கற ரிலேஷன்ஷிப்..
நோவேர்ல தேணோஸ கொல்லுறப்போ கமோரா உக்காந்து அழுவா.. அந்த இடத்துல கமோரா தன் வளர்ப்பு தந்தை மேல எத்தனை அன்பு வெச்சுருக்கானு சொல்லுவாங்க. ஆனா கமோரா தேனோஸ் நம்மள ஒரு சோல்ஜரா தான் நினைச்சான் மகளா நினைக்கலனு நினைச்சுட்டு இருப்பா.
சோல் ஸ்டோன் வேணும்ங்கறப்போ அவன் நேசிக்கிற உயிர தியாகம் பண்ணனும்ன்ற சிச்சுவேஷன்ல கமோராவ ஒரு பார்வை பாப்பான் தேனோஸ்.
அப்ப தான் கமோராவுக்கே தெரியும்
தேனோஸ் தன்னை இவ்வளவு நேசிச்சுருக்கான்னு.
அந்த சீன்ல கண்ணு கலங்காதவங்க யாரும் இருக்க முடியாது.
அவ்ளோ நேசிச்ச தன் மகளையே பலி கொடுக்க துணியுறான்னா அவன் கொள்கை எவ்வளவு பயங்கரமானதா இருக்கும்னு பாத்துக்கனும்.

அப்பரம் படத்துல பிடிச்ச இன்னொரு விஷயம்  கேரக்டர்ஸ் & எமோஷன்ஸ் பேலன்ஸிங் தான்.
அதுல நான் ரசிச்ச ஒரு 4விஷயங்கள வரிசையா சொல்லுறேன்.

முதல் விஷயம்.
தான் ட்ரெய்ன் பண்ற ஒரு பையன் அவனுக்கு தன்னால எதும் ஆகிட கூடாதுங்கற அக்கரை டோனிக்கு எப்போதுமே இருந்துட்டே இருக்கும் பீட்டர் மேல.
அயன்ஸ்பைடர் சூட்ட கொடுத்து அவன வீட்டுக்கு அனுப்ப நினைக்கிறது அந்த அக்கரை நல்ல டச்.
கடைசில நான் உயிர் வாழனும்னு பீட்டர் டோனி கிட்ட அழுறான்,
அந்த சமயத்துல டோனி உலகத்த பத்தி நினைக்கிறத விட பீட்டர் சாவுக்கு நாம காரணம் ஆகிட்டோமேன்ற குற்றவுணர்ச்சி தான் அதிகம் இருக்கும்.

2வது விஷயம்.
வாண்டா விஷன் லவ்வயும்
கமோரா தேனோஸ் லவ்வயும் ஒரே ப்ளேட்ல வைக்கலாம்.
ரெண்டு பேருமே உலகத்த காப்பாத்த தான் அவங்களுக்கு பிடிச்சவங்களோட உயிர தியாகம் செய்யுறாங்க.
அதுவும் அவங்க கையாலயே.
ஒரு பக்கம் தான் நேசிக்கிற காதல், இன்னொரு பக்கம் உலகத்தோட நலன்.
எது வேணும்ங்கற சிச்சுவேஷன்ல ரெண்டு பேருமே தங்களோட சொந்த விருப்பத்த தானே விரும்பி உலகத்துக்காக தியாகம் செய்றாங்க. இந்த plot அட்டகாசம்.

3வது விஷயம்.
ஸ்டார்லாடு & கமோராவுக்கு நடுல உள்ள லவ்.
இதையும் அதே கமோரா&தேனோஸ், விஷன்&வாண்டா ப்ளேட்ல வைக்கலாம்.
சோல் ஸ்டோன் இருக்கற இடம் கமோராவுக்கு மட்டுமே தெரியும்.
அதனால தேனோஸ் என்ன பிடிச்சுட்டா என்ன கொண்ணுடுனு சொல்லுறா கமோரா.
அதே போல தேனோஸ் கமோராவ பிடிச்சுடுனான்.
திரும்ப அதே உலக நலனா தன் சொந்த காதலான்ற சமயத்துல தானே விரும்பி தன் கையால கமோராவ சுடுறான் ஸ்டார்லாட்.
இது போல ஒரே எமோஷன பல இடங்கள் பேலன்ஸ் பண்ணது அட்டகாசம்.

4வது விஷயம்.
நான் உலக நலனா இல்ல உன்னோட & பீட்டரோட உயிரானு வந்தா நான் உங்கள இழக்க தயங்க மாட்டேன்னு சொல்லுற டாக்ட்டர் கடைசில டோனி உயிருக்காக டைம் ஜெம்ம தானே போய் தேனோஸ் கிட்ட கொடுக்கறான்.
இது போல உலகமா தன் சொந்த விருப்பு வெறுப்பான்ற டீல வெச்சு அதுல ஒன்னோட ஒன்ன மோத விட்டதெல்லாம் செம்ம.

படத்துல ஹல்க் ஏன் இல்ல!???
இந்த கேள்விக்கு நியாயமான 2பதில் இருக்கு.
ஹல்க் & பேனர் ரெண்டு பேருமே ஒரே ஆள் கிடையாது.
அந்நியன் & அம்பி மாதிரி வேற வேற ஆளுங்க.
ராக்னராக்லயே காட்டிருப்பாங்க 2வருஷம் ஹல்க்கா இருக்கவனுக்கு பேனர யாருனே தெரியாது. அதே போல பேனரா மாறினதும் பேனருக்கு 2வருஷம் என்ன நடந்துச்சுனே தெரியாது.
ஹல்க்கால பேனர் மாதிரி சிந்திச்சு செயல்பட முடியாது.
அவன் ஒரு முரட்டுத்தனமான குழந்தை.
அநியாயம் நடக்கறப்போ எப்டி அம்பி போய் அந்நியன் வரானோ அப்டி தான்
கோவம் வரப்போ & ஹல்க்குக்கான அவசியம் வரப்போ தான் பேனர் போய்  ஹல்க் வருவான்.
ஆனா படத்தோட ஆரம்பத்துலயே தேனோஸ் கிட்ட அடி வாங்கின ஹல்க், அங்க அவன் கண்ணு முன்ன அவ்வளோ பேர் செத்து கிடக்கறத பாக்குறான்.
அதனால மனம் உடைஞ்ச ஹல்க் நான் வந்தும் ஒரு பிரயோஜணமும் இல்ல நான் வர மாட்டேன்னு அடம் பிடிக்குறான்.
அதே சமயம் தேனோஸ் கிட்ட அடி வாங்குற பேனர் பயந்து போய் இருக்கான்.
எல்லா சீன்லயும் தேனோஸ பத்தி பேனர் பயந்து பேசுறது பின் வாங்குறது போல காட்டிருப்பாங்க.
அதனால பேனருக்கு எப்போ பயம் போய் கோவம் வருதோ அல்லது தன்னோட தேவை இவங்களுக்கு இருக்குனு ஹல்க்குக்கு தோணுதோ அப்ப தான் ஹல்க் வருவான்.

கதையோட முடிவ நிர்ணயிக்கிறது நல்லவங்களுக்குள்ள இருக்க கோவம் தான்.
டைட்டன்ல பீட்டர்க்வில் கோவப்படாம இருந்திருந்தா அங்கயே கையுறைய கழட்டிருக்கலாம்.
ஓப்பனிங்ல தோர் தலைய பிடிச்சு நசுக்கற தேனோஸ் & கடைசில தேனோஸ் தலைய நசுக்கற தோர்.
கர்மா இஸ பூமராங்.
ஆனா அங்க தோர் கோவப்படாம நிதானதா தேனோஸ் நெஞ்சுக்கு பதில் கையவே தலையவோ வெட்டிருந்தா தேனோஸ் கதை முடிஞ்சுருக்கும்.

அடுத்து
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்.
ஒன்றை கோடி தடவை இந்த போர் நடந்துருக்குனு சொல்லுறாரு, எத்தனை தடவ ஜெயிச்சோம்னு டோனி கேட்டதுக்கு ஒரே தடவனு சொல்லுறாரே தவிர அது எப்போனு சொல்லவேயில்ல.
அந்த ஒரு தடவங்கறது இப்ப நடக்கற டைம்லைனா கூட இருக்கலாம்.
அல்லது கொடுத்தா தான் அந்த ஜெயிக்கற டைம்லைனுக்கு போக முடியும்ங்கறதுக்காக கூட கொடுத்துருக்கலாம்.
அதனால தான் அவர் ஸ்டோன கொடுத்துட்டாருனு கூட வெச்சுக்கலாம்.
அதாவது டோனி உயிரோட இருந்தா டைம் ஸ்டோன் தேனஸ் கிட்ட இருந்தாலும் நாம ஜெயிச்சுடலாம் ஆனா டோனி செத்துட்டா டைம் ஸ்டோன் தேனோஸ் கிட்ட இல்லனா கூட நம்மாள ஜெயிக்க முடியாது.
டாக்டர் ஒரு பெர்ஃபெக்‌ஷனிஸ்ட் அவர் யோசிக்காம தூக்கி கொடுப்பாருனு நாம தப்பா நினைக்க கூடாது.

பேனர் கேப்டன பாத்ததும் முதல் வார்த்தை ஹாக்ஐ எங்க இந்த போர்ல ஜெயிக்க அவன் வேணும்னு கேக்குறான்.
கடைசி வரை ஹாக்ஐ & ஆன்ட்மேன காட்டவேயில்ல.
& same time அந்த shooting spot picsல ஆண்ட்மேன காட்டிருப்பாங்க.
அவனால குவாண்ட்டம் வேல்டுக்குள்ள போக முடியும்னு ஏற்கனவே நமக்கு தெரியும்.
வரப்போற antman&wasp பார்த்தா இன்னும் தெளிவா புரிஞ்சுடும் ஆண்ட்மேன வெச்சு அடுத்த அவெஞ்சர்ல என்ன ட்ரை பண்ண போறாங்கனு.

இதுதான் படத்தோட ரொம்ப இன்ட்ரஸ்டிங் பார்ட்.
கடைசில எல்லாரும் எங்க மறைஞ்சு போறாங்க!??
ஒரு சீன்ல தேனோஸ் சொல்லுவான்.
என் கைல எல்லா ஸ்டோனும் கிடைக்கும் அப்பரம் நான் பாதி பிரபஞ்சத்த அழிச்சுட்டு சூரிய உதயத்த பாத்துட்டு இருப்பேன்னு.
கடைசில அதான் நடக்கும்.
இங்க இன்னும் 2விஷயத்த கம்பேர் பண்ணி பாக்கனும்.
#1 டைட்டன்ல டாக்டர் கிட்ட தோனோஸ் சொல்லுவான்.
ஏழை பணக்காரன், நல்லவன் கெட்டவன், சின்னவன் வயசானவன்னு பாரபட்சம் பாக்காம பாதி பேர அழிக்கனும்னு நான் யோசனை சொன்னேன்னு.
#2 இன்னொரு சீன்ல குழந்தை கமோரா கிட்ட ஒரு கத்திய கொடுத்து பேலன்ஸ் பண்ண சொல்லுறப்போ சொல்லுவான்,
நடுல விரல வெச்சு பேலன்ஸ் பண்ணு ஒரு பக்கம் அதிகமாவும் இன்னொரு பக்கம் கம்மியாவும் இருக்க கூடாது.
ரெண்டு பக்கமும் சமமா இருந்தா தான் பேலன்ஸ் ஆகும்னு.
அதாவது அவன் பாதி பேர அழிக்கிறப்போ நல்லவங்க/கெட்டவங்க மட்டுமோ, ஏழை/பணக்காரன் மட்டுமோ சாகவோ வாழவோ கூடாது.
எல்லா தரப்புலயும் எல்லாருலயும் பாதி பேர் சாகனும்.
அப்ப தான் யுனிவர்ஸ் சமநிலைல இருக்கும். இல்லனா முழுசா அழிஞ்சுடும்.
முழுசா அழியுறத தேனோஸ் விரும்ப மாட்டான் ஏன்னா ஏற்கனவே சொன்னது போல அவன் கெட்டவன் கிடையாது நல்லவன் அதுவும் ரொம்ப நல்லவன்.
அவன் விரல சொடுக்கும்போது அங்க 6ஜெம்மும் ஒரே நேரத்துல செயல்படுது.
முதல்ல சோல் ஜெம் அந்த மக்கள 2பாதியா பிரிக்கிற வேலைய செய்யுது.
சோல் ஸ்டோனோட சக்தியே ஒரு உயிருக்கு இன்னொரு உயிருன்றது தான்.
அதாவது சமநிலை செய்யுறது.
எல்லாரும் சாகும்போது/காணாம போகும்போது பாக்கலாம்.
ஒருத்தர் நேசிக்கிற இன்னொருத்தர் காணாம போவாங்க.
கேப்டன்-வைட்உல்ஃப்
ராக்கெட்-க்ரூட்
டோனி-பீட்டர்
தளபதி-டிச்சல்லா
நெப்யூலா-மேன்டிஸ்&டிராக்ஸ்
அதனால அவங்க செத்துட்டாங்கனும் சொல்லிட முடியாது.
ஏன்னா டெசராக்ட் தன்னை நிராகரிச்சுட்டு அதனால நான் சாபம் வாங்கி இந்த கிரகத்துக்கு வந்துட்டேன்னு ரெட்ஸ்கல் சொல்லுவான்.
அதுபோல எல்லாரும் வேற எங்கேயோ கடத்தப்பட்டும் இருக்கலாம்.
அடுத்து ரியாலிட்டி ஜெம் அதோட வேலைய செய்யுது.
அதாவது ரெண்டாவது ரியாலிட்டிய உருவாக்குது.
இங்க காணாம போற எல்லாரையும் ரெண்டாவது ரியாலிட்டிக்கு அனுப்புது.
வேற உலகம்னு கூட வெச்சுக்கலாம்.
டாக்டர் நாம ஒரு தடவ தான் ஜெயிச்சோம்னு சொன்னது க்ளைமேக்ஸ்ல சாகாதவங்களா காட்டின டைம்லைனா இருக்கனும்.
அந்த டைம்லைன்ல டோனி இருந்தா தான் ஜெயிக்க முடியும்ங்கறதுக்காக தான் டாக்டர் டோனிய காப்பாத்தியிருக்கனும்.
அதாவது அந்த டைம்லைன்ல டோனிய தேனோஸ் கொண்ணுட்டான்.
ஆனா அந்த ஒன்ற கோடி வாய்ப்புல ஒரு டைம்லைன்ல நாம ஜெயிச்சதா சொன்னான் இல்லயா, அதுல டோனி அந்த இடத்துல சாகாம இருந்துருக்கனும்.
அதனால டோனி சாகப்போற டைம்லைன்ல அவன் உயிர காப்பாத்தி தோக்கப்போற டைம்லைன அவன் ஜெக்கிறதா சொன்ன 1/1.5million டைம்லைனா மாத்தியிருக்கனும்.
கிட்டதட்ட எல்லா காடியன்ஸுமே காணாம போயிட்டாங்க. அதனால வரப்போற GOG3 காணாம போனவங்களோட ரியாலிட்டில நடக்கற போல காட்டலாம்.
அவெஞ்சர்ஸ் அடுத்த பார்ட்ல எல்லாரும் எப்டி இந்த ரியாலிட்டிக்கு வந்தாங்கனு சொல்லுற படமாவும் இருக்கலாம்.
ஏன்னா இந்த ரியாலிட்டில 6ஸ்டோன் இருக்குனா தேனோஸ் க்ரியேட் பண்ண இன்னொரு ரியாலிட்டில வேற 6ஸ்டோன் இருக்கும் அதை வெச்சு ரெண்டயும் ஒரே டைம்லைனா மாத்துறது கூட அடுத்த பார்ட்டோட கதையா இருக்கலாம்.

படத்தோட ஆரம்பமே எல்லாரும் செத்து கிடக்காங்க ஷிப்லங்கற போல தான் காட்டுறாங்க.
அதுக்கு முன்ன என்ன நடந்துச்சுனு காட்டவேயில்ல.
தேனோஸ் ஷிப்ப பாத்ததும் அவங்க தாக்குறதுக்கு முன்னவே பாதி பேர் எதாவது லைஃப்ஷிப்ல தப்பிச்சுருக்கனும் அல்லது ஹெம்டால் பலர ஏற்கனவே டெலிபோர்ட் பண்ணிருக்கனும்.
அவன் ஹல்க்க அனுப்பும்போது கூட "கடைசியா ஒரு தடவ" இத பண்ண அனுமதிங்கனு வேண்டிட்டு தான் பண்ணுறான். அப்போ அதுக்கு முன்ன சிலர தப்பிக்க வெச்சுருக்கனும். வல்க்கைரி & சிலர் தப்பிச்சுருக்கலாம். அதுக்கப்பரம் உதவிக்கு காடியன்ஸுக்கு சிக்னல் கொடுத்துருக்கலாம்.

மத்தபடி டாக்டர் ஏன் டைம் ஸ்டோன பயன்படுத்தவேயில்ல, விஷன் ஏன் மைண்டு ஸ்டோன யூஸ் பண்ணி தேனோஸ கட்டுப்படுத்தலங்கறதுக்கெல்லாம் காரணம்
அப்படி பண்ணா தான் திரைக்கதைய விறுவிறுப்பா அமைக்க முடியும்ங்கறதா மட்டும் தான் இருக்க முடியும்னு தோணுது.
சரி... மத்த சந்தேகங்கள கமெண்ட்ல போடுங்க.. முடிஞ்சா இன்னொரு போஸ்ட்டா போட ட்ரை பண்ணுறேன்.

நன்றி. 🙏😎