Wednesday, December 21, 2016

இந்த பெண்கள் ஏன் இவ்வளவு அழகா இருக்காங்க தெரியுமா!?

நீயா நானா பாக்குறத நிறுத்தி ரொம்ப நாளாச்சு.
எதேர்ச்சையா போன வாரம் சேனல மாத்திட்டு வரப்போ
இரு பக்கத்திலும் உட்கார்ந்திருந்த அழகிங்க ரிமோட்ட ஆப்ரேட் செய்ய விடாம விரல்களை செயலிக்க செய்திட்டாங்க.

ஷோ முடியும் போது அவங்க எல்லாரும் பேசின மொத்தமும் என்னை ஒரு விஷயத்தை நோக்கி மட்டும் தான் சிந்திக்க செஞ்சுது.
நிறைய யோசிச்சேன்.... எனக்குள்ளேயே புன்னகைச்சுக்கிட்டேன்.

முழுக்க முழுக்க பெண்களுக்காக ஆணுக்குள்ளிருக்கும் பெண்மையால் கட்டமைக்கப்பட்ட ஒரு உலகம் எப்படி இருக்கும்ங்கற  அழகியல் சார்ந்த விசாலமான ஒரு கற்பனை.
அந்த கற்பனைல ரொம்ப வருஷமா அடிக்கடி நான் ஆழ்வதுண்டு.
பெண்கள்னாவே அழகு தானே!

தனக்குள் இருக்குற பெண்ண உணராம ஒரு கவிஞனால ஒரு சிறந்த கவிதைய படைக்க முடியாது.
தனக்குள்ள இருக்குற ஒரு பெண்ண உணராம ஒரு சிற்பியால வடிவான ஒரு சிற்றச்சை வடிக்க முடியாது.
சமையலில் ஆணுக்குள் இருக்குற ஒரு பெண்மை அந்த உணவ எப்படி, எந்தளவுக்கு சுவை மிகுந்ததாக்குதுங்கற ஒரு கற்பனை அது.

ஆண் இஞ்சினியர் வடிவமைக்கிற ஒரு மின்விசிறில பெண்மை புகுத்தப்பட்டா எப்படி இருக்கும்,
ஒரு ஆண் விஞ்ஞானி தனக்குள் இருக்குற பெண்மையின் விழியால ஒரு அனுக்கரு சிதைவை எப்படி பார்க்குறான்,
பீச்ல ப்ளாஸ்டிக் பாட்டில் பொறுக்குறவன் நெழிகளுடனான அவன் உரையாடல் எப்படி இருக்கும்,
ஒரு 14வயசு மாணவன் தனக்குள்ளிருக்கும் பெண்மையால அல்ஜீப்ராவ எப்படி அனுகுவான்,
ஒரு விவாகரத்து வழக்கை தனக்குள் இருக்கும் பெண்மையால ஒரு நீதியரசர் எப்படி அனுகுவார்னு ஒவ்வொரு விஷயத்தையும் கற்பனை செய்து பாத்தா அது அத்தனை அழகு.!

இந்த அழகியலை தாண்டி ஆணுக்குள் இருக்கும்
அந்த பெண்மை சமூகத்துல ஏற்படுத்துற மாற்றம் எத்தகையானதா இருக்கும்ங்கற கற்பனை அதுக்கும் ஒரு படி மேலானது.

ஒரு குழந்தைய கொஞ்சுறப்போ, தன் கவலைய பிரச்சனைய வெளிப்படையா சொல்லி புலம்புறப்போ, புல்லாங்குழல் இசைக்கிறப்போ, அவ்விடத்துல தன் கோபத்தை  வெளிப்படுத்த முடியலங்கற ஆதங்கத்துல இயலாமைல பேசுறப்போ ஒரு ஆண் கிட்ட எக்ஸ்ட்ரீமான ஒரு பெண்மைய உணர முடியும்.
ஒரு பெண்ணாலயே பெண்ணுக்கு செய்திட முடியாத பல நல்ல விஷயங்கள, ஆணுக்குள் இருக்குற அந்த பெண்மை செய்யும்ங்கற ஒரு கற்பனை, நம்பிக்கை அது.

கலப்பு திருமணம் செஞ்சுக்கிட்டு குடும்பத்த விட்டு பிரிஞ்சு, ஒரு குழந்தையும் பிறந்துட்ட நிலைல,
அவர்களை ஒதுக்கிய இரு தரப்பு இல்ல பெரிய ஆண்களும் தனக்குள்ளருக்குற பெண்மையை உணரும் பட்சத்துல அந்த பேரக்குழந்தைய, பிரிஞ்சு போன தங்கள் பிள்ளைகளை எப்படி பாப்பாங்க!
அந்த பெண்மை அவங்கள எந்த மாதிரியான சிந்தனைக்கு இழுத்து செல்லும்ங்கறது ஒரு கற்பனை.

முன் கோபத்துல பல தவறுகள் செஞ்சுட்டு குடும்பத்தை வீதியில நிறுத்துற ஆண்கள் நிறைய உண்டு.
ஒரு முன்கோபி ஆணை அவனுக்குள்ள இருக்குற பெண்மை எப்படி கட்டுப்படுத்தி வழிநடந்தும்ங்கறது ஒரு கற்பனை.

"ஒரு பொம்பள தானே இவ"ங்கற சிந்தனைல பெண்களை அணுகுற பல ஆண்களுக்குள்ள, இந்த பெண்மை எட்டி பாத்தா என்ன மாதிரியான உளவியல் மாற்றம் அந்த ஆணுக்குள்ள நிகழும்ங்கறது ஒரு கற்பனை.

மனைவி இறந்து போக தன் 2வயசு குழந்தையை கைல வெச்சுட்டு மருமணத்திற்கு திட்டமிடுற ஒரு ஆணுக்குள்ள இந்த பெண்மை எட்டி பாத்தா என்ன மாதிரியான விஷயங்கள் நடக்கும்னு யோசிக்கிறது ஒரு கற்பனை.

குடிகார கனவனுக்குள்ளிருந்தும், காமத்தை மட்டுமே இலக்காக எண்ணி காதலியை அணுகும் காதலனுக்குள்ளிருந்தும் வெளிப்படுற பெண்மை எத்தகைய ஒரு உறவுமுறை மாற்றத்தை ஏற்படுத்தும்னு சிந்திக்கிறது ஒரு கற்பனை.

இது மாதியான கற்பனைகளையெல்லாம் பாஸிட்டாவாவும் அழகியலாவும் ஒரு பெண் பார்க்கிறாள் அப்டினாவே, அவ அந்த பெண்மையை மனதளவுல கொண்டாடுகிறாள் ஆத்மாத்மாக அனுபவிக்கிறாள்னு தான் அர்த்தம்.
இந்த ரக பெண்கள் ஆண்மையோடு ஈடுகட்டவோ அவர்களை விட அதிகமாக ஆண்மையை அனுபவிக்கனும்னோ விரும்புறதில்ல.
தனக்குள் இருக்கும் பெண்மையை
மட்டுமே மேம்படுத்தனும்னும், அந்த பெண்மையை பெண்மையாக மட்டுமே கொண்டு சமுதாய சிந்தனையலைய  உயர்த்தனும்னும் நினைக்கிறாங்க.

ஆணை யாரும் ஒரு ஆண் விஞ்ஞானி, ஆண் பிரதமர், ஆண் மருத்துவர்னு குறிப்பிடுறதில்ல..
ஆனா ஒரு பெண்ணுக்கு மட்டும் பரவலாக
பெண் பிரதமர், பெண் விஞ்ஞானி, பெண் மருத்துவர்ங்கற ஒரு மேற்கோள் புழக்கத்தில் உண்டு.
அதை ஒரு பெண்ணாக இருந்தே, தன் பெண்மையாலேயே உடைக்கனும்ங்கறது தான் இந்த ரக பெண்களோட அதிகபட்ச இலக்கு.
அது ஒரு சகோதரியால சகோதரனுக்கும், காதலியால காதலனுக்கும், மனைவியால கனவனுக்கும், அம்மாவால மகனுக்கும்,
பாட்டியால பேரனுக்கும் மட்டுமே கடத்தப்பட முடிகிற உணர்வு.
பெண்ணியத்துல பல ஸ்டேஜஸ் உண்டு, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு.
ஒவ்வொருத்தரும் அதை ஒவ்வொரு மாதிரி அணுகுறாங்க.
அவ்வனைத்துலயும் இவங்க மட்டும் கொஞ்சம் ஸ்பெஷலா எனக்கு தோண்ற காரணம்
இந்த பெண்கள் தங்கள விட உயர்ந்ததாக காலாகாலமாக சித்தரிக்கப்படும் ஆண்மையை வாளாக ஏந்தாமல்,
தங்களுக்கே உரித்தான பெண்மையை கேடயமா கொண்டு அந்த வாளை எதிர் கொள்ளுறாங்க அப்டிங்கறதால தான்.��������

-ராஜி

Wednesday, November 23, 2016

மிருதம்

அன்று காலை முதலே ஒரு மொழியறியா எண்ணம் மனதை  அலைக்கழைத்து ஊசலாயாட்டிக் கொண்டிருக்க,
அதை பிறருக்கு விவரிக்கவோ, ஏன்! தனக்குள் இன்னதென இனமறியவோ கூட முடியவில்லை!
ஆனால் ஓரளவிற்கு அதை எதிர்காலம் பற்றிய ஏதோர் பயமென கருத முடிந்தது.

இன்னும் கொஞ்ச நேரத்தில் இதெல்லாம் நடக்கப் போகிறதெனும் முன்கூட்டிய இறையறிவுருத்தலாக இருந்திருக்கலாமென்பது அந்த விபத்து நடந்து முடிந்து விட்ட பிறகே புரிந்தது.
கொஞ்சம் சுதாரிப்பாக இருந்திருக்கலாம் தான்!

குளியலறை தண்ணீர் குழாய் லேசாய் உடைந்திருந்ததும்,
கசிந்த நீர் சொட்டு சொட்டாய் வாட்டர் ஹீட்டர் வயரை நனைத்திருந்ததும்,
வயரில் ஒரு முழு ஆளையே கொல்லுமளவு மின்சாரம் பாய்ந்துக்கொண்டிருந்ததும் தற்செயலாய் நடந்த ஒரு விஷயம்.

முன்னதே சொன்னது போல் நான் தான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்!

ஸ்விட்ச்சை தீண்டிய நான் வீசியெறிப்பட, தலை பலத்த காயத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
ம்ம்மாவென ஒரு குரல் எழுப்பியதை தவிர அப்போது என்னால் வேறேதும் செய்திருக்க முடியவில்லை.
யாராவது காப்பாத்துங்களேன் வாங்களேன் யாராவதென முணக முயற்சித்ததாய் ஞாபகம்.
உடனடியாக யாரோ கண்டு உதவியளித்திருந்தால் நான் ஒருவேளை உயிர் பிழைத்திருக்கவும் வாய்ப்புண்டு.

கையில் பேனா மட்டும் பிடிக்க முடிந்திருந்தால் என்னிந்த மரண அனுபவங்களை சந்ததிகளுக்கு எழுதி கடத்தியிருப்பேன்!

கைவிரல் மட்டுமின்றி கால்விரல் நகக்கண்களுக்குள்ளும் ஊசி நுழைத்தாற்போலொரு வலி.
அடையாளமறியா பெண்ணொருத்தி தலைமாட்டில் அமர்ந்து என் முகத்தில் ஊசிகளால் குத்தியபடி, வெளிய வா வெளிய வா நேரமாச்சு, போக வேண்டிய சமயம் வந்துடுச்சு வாவென கத்திக்கொண்டே இருந்தாள்.
இந்த குரலில் தான் எத்தனை ஆக்ரோஷம்!!
நெற்றியை துளைத்து ஆணியிறக்கி தரையோடு சேர்த்து அரைந்ததை போலும்,
நெஞ்சிற்க்குள் கையை விட்டு கசக்குவதை போலுமொரு உணர்வு.
உயரிய அழுத்தத்தில் ரத்தம் பாய்ச்சும் சதையுறுப்பு சுவாசிக்கவே கொஞ்சம் சிரமப்பட்டது.
இரு கை மற்றும் கால்களிலும் பல கிலோ இரும்பு குண்டுகளை கட்டி விட்டதை போன்ற கணத்தில்,
எத்தனை முயற்சித்தும் உடலை காலிஞ்ச் கூட நகர்த்த முடியவில்லை.

கொஞ்ச நேரத்தில் தலையை சுற்றியோர் இருள் சூழ,
எனக்கு மட்டுமே சொந்தமான இந்த
உடலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் தன் உயிர் வெளியேறுவதை என்னால் முற்றிலும் உணர முடிந்தது.
ஒரு வாளி குளிர் காற்றை முகர்ந்து அப்படியே குடித்து விழுங்கியதை போல் உடல் முழுவதுமோர் மைணஸ் டிகிரி உறைநிலை.

அதன் பின் இவ்வுடலை மருத்துவர் பரிசோதித்து ஆயிரத்தெட்டு ஆக்ஸிஜன் ட்யூபால் கட்டி என்ன பயன்!

என் பெயர் ஜீவா.
அந்த சம்பவம் நடந்து அதாவது நான் இறந்து முழுவதுமாய் இன்றோடு 50நாட்கள் ஆகின்றன.

உயிரோடிருந்திருந்த காலத்தில் நான் ஒன்றும் அத்தனை கொடியவனாய் வாழ்ந்திருக்கவில்லை.
இருப்பினும் என்னிம் மரணம் என்னையும் என் அம்மாவையும் தவிர வேறாரையும் பெரிதாய் பாதிக்காதது ஏனோ.!

எனக்காக சுற்றம் பிறர் அழுததை விட வீட்டின் சுவரில் தொங்கும் என் புகைப்படத்தையும்,
வாசலில் நிற்கும் என் பைக்கையும்,
என் கல்லூரி புத்தகங்களையும்,
அலமாரியில் உடுத்த நானின்றி ஏங்கும் இரு டஜன் ஆடைகளையும் கண்டு நானே புலம்பி அழுதது தான் அதிகம்.
இறந்துவிட்ட பின்னொரு வாரத்தில் வந்த என் பிறந்தநாளன்று
ஃபேஸ்புக் ட்விட்டர் பக்கங்களில் வாழ்த்து சொன்ன ஆட்கள் தான் எத்தனை!

இறந்த பின்னுமிந்த மனத்துன்பங்கள் தாங்கி மோட்சமின்றி நான் அலையவும் ஏதோ ஒரு காரணமிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.!
நான் ஓடியாடி விழுந்தெழுந்து வளர்ந்து வாழ்ந்த இவ்வீட்டில்
இப்போதெல்லாம் ஓர் மூலையில் தங்கி அழுதிருப்பதை தவிர வேறேதும் செய்வதில்லை.

வாசலில் காலிங் பெல் சத்தம்.
அம்மாவிற்கு உதவியாய் என்னால் ஓடிப்போய் கதவைக் கூட திறக்க முடியாது.

ரென்மென் அன்ப்பில் நடீ சோவெ நௌ......
ரென்மென் அன்ப்பில் நடீ சோவெ நௌ..... தொடர்ந்து ஏதோ புரியாத பாஷையில் உளறியபடி ஆரடி வளர்ந்த ஆளொருவன் உள்ளே வந்தான்.

நீண்ட தாடி.... சிவப்பு பர்தா..... கையில் அவனை விட அரையடி உயரமான ஒரு தடி....  தலையில் முண்டாசு...
இப்படியே மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு சென்றால் நிச்சயம் நாய்கள் துரத்தும், அனைவரும் கோமாளியை காண்பதாய் நகைப்பார்கள்.
இவன் பெயர் சூடான்.
உடல் பிரிந்து உலவும் ஆத்மாக்களுடன் தொடர்புக் கொள்பவன்.
அவற்றை மோட்சமடைய செய்ய கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தூதுவன்.
ஆம்.! சில தினங்களுக்கு முன்பு முதன்முறை அந்த பார்க்கில் சந்தித்தபோது இவன் தன்னை அப்படி தான் என்னிடம் அறிமுகப் படுத்திக்கொண்டான்.

யார் கண்களுக்கும் தெரியாத நான் இவன் கண்களுக்கு புலப்பட்டது பெரிய ஆச்சர்யம்!
இன்றிலிருந்து இருபதாம் நாள் பௌர்ணமி இரவன்று தானே வந்தென்னை சந்திப்பதாக சொல்லியிருந்தான்.
நாளை பௌர்ணமி.

உள்ளே வந்தவனை வாங்க சாமியென்று பனிவுடன் வரவேற்று நாற்காலியில் அமர்த்தினார் அம்மா.
இவனை ஏற்கனவே அம்மாவிற்கு தெரிந்திருக்க வேண்டும்.!

உங்க பையனோட ஆத்மா கிட்ட பேசினேன்மா!
ஆசை ஏக்கம் கோபம் பழியெண்ணம் காதல்னு ஏதோ ஒரு விஷயம் அந்த ஆத்மாவ மேலோகம் அடைய விடாம இன்னும் இங்க உலவ விட்டுருக்கு.
நிகழுலக மறுபிறவி அடையும் அத்தனை ஜீவசாத்தியமும் கொண்ட உயிர் அது!
கோடியில ஒருத்தனோட பிறப்பு.
அவனுக்கு ஒரு வரம் கிடைச்சுருக்கு!

மார் விரிந்து விழி செறிந்து
குரலில் வழியும் அந்த கம்பீரமே துஷ்டப் பேர்வழிகளை வார்த்தையில் அடக்கும்.
பேச்சில் அப்படியோர் கரத்த திமிர்.

என்னங்க சாமி அந்த வரம் என்று கைக்கூப்பி கண் கலங்கினாள் ஜீவாவின் தாயாள்!

நான் தான் அந்த வரம் என்றபடி ஓரமாய் நின்றிருந்த என்னை பயமுறுத்தும் நோக்கில் ஒரு சிரிப்பு சிரித்தார்.
அந்த பார்வை!
கொஞ்சம் மிரண்டு தான் போனேன்.

நான் நிறைய துர்சக்திகள விரட்டியிருக்கேன்.
பலதுகள ஒளியில உருக்கியிருக்கேன்.
ஆனா கண்ணுல தெரிஞ்சது சில ஆத்மாக்கள் மட்டும் தான்.
அப்படி நாங்க கண்ணால பாக்குற ஆத்மாக்கள ஜீவ உடல்ல புகுத்தனும்ங்கறது எங்க வம்சத்தோட தொண்டு.

புரியலங்க சாமி!

அதாவது உங்க பையன் திரும்பி உயிரோட வரப்போறான்னு சொல்லுறேன்.
அவனுக்கு நான் உயிர் கொடுக்கப் போறேன்னு சொல்லுறேன்.
பிரேதாத்மா!! நரம்பும் ரத்தமும் எலும்புமா ஒரு சதையுடல அடையப்போகுது!

இதையேயிவன் சில தினங்களுக்கு முன் என்னிடம் சொல்லும் போது நானும் இப்படி தான் விழித்தேன்.
இருப்பினும் கொஞ்சம் நம்பியதற்கு காரணம் யார் பார்வைக்கும் புலப்படாத நான், இவன் கண்களுக்கு தெரிகிறேன் என்பதால் மட்டுமே!

நீங்க இத நம்புறது கொஞ்சம் கஷ்டம் தான்ம்மா!
உங்க மனசுல ஓடுறத என்னால கணிக்க முடியுது.
பணத்துக்காக பொருளுக்காக ஏதோ
ஏமாத்துறேனோனு பயப்படுறிங்களா??
இது என் வம்சத்தோட கடம...
இப்போ சொல்லுறத கவனிங்க....
இத செய்ய உங்க கிட்ட இருந்து எனக்கு ஒரு பைசா வேண்டாமென விரல் சொடுக்கினான் சூடான்.

அதுயில்லங்க சாமி!
இதெல்லாம் எப்படி சாத்தியம்னு பயப்படுறேன்!
அதுயெப்படி செத்தவங்க திரும்பி வர முடியும்?

கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்!
சில விஷயங்களை ஆதாரம் கேக்காம நம்பனும்.
நான் சொல்லப்போற விஷயங்கள் ஏதோ மாயாஜால கதை மாதிரி இருக்கலாம்.
உங்களுக்கு புரியுற மாதிரினா இப்படி தான் சொல்லியாகனும்.
இதுக்கு ஊடு கலைனு பேரு.
ஆப்ரிக்க பூர்வீகம்.
நம்ம உடல்ல பெரிய தேவதை, சின்ன தேவதைனு ரெண்டு தேவதைங்க இருக்கு.
இதுல நல்ல தேவதை சாப்பிடுறது நடக்குறது பேசுறதுனு உடலியக்கத்த கட்டுப்படுத்துது.
பெரிய தேவதைங்கறது மனசு, ஆத்மா.
நல்லது கெட்டது எத செய்யலாம் எத செய்ய வேணாம்னு சிந்தனைய கட்டுப்படுத்துது.
நம்ம உடல்லயிருந்து உயிர்ங்கற ரெண்டு தேவதையும் பிரிஞ்சதும்,
ரெண்டு இல்ல மூனு நிமிஷத்துல பெரிய தேவதை காத்துல உருகிடும்.
ஆனா சின்ன தேவதை எப்படி திரும்பவும் உடலுக்குள்ள போகலாம்னு, மூனு நாள் வரை உடலையே சுத்தி சுத்தி வரும்.
இந்த ஊடு கலை மூலமா பெரிய தேவதைய திரும்ப அந்த உடலுக்குள்ளயே செலுத்த முடியும்.
ஆனா அதுல இருக்க்ற ஒரு பிரச்சனை என்னனா, பெரிய தேவதையில்லாம அந்த உடலால எதையும் சரி தப்புனு சிந்திக்க முடியாது.
சோறு தண்ணி எதுவும் தேவையில்ல.!
வெறிப்பிடிச்சு திரியும்.
வளர்ந்து வர நாடுகள் கட்டமைப்புகளுக்கு ஆட்கள் பெருமளவு தேவப்பட்டதாலும், பெருமளவு ஆட்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாததாலும் உலகத்தோட வெவ்வேறு மூலைலயிருந்தும் எங்கெங்கிருந்தோ வந்து இந்த கலைய கத்துக்கிட்டு போனாங்க.
அப்படி போனவங்க மூனு நாட்களுக்குள்ள இறந்தவர்களோட பிணங்கள உயிர்தெழ வெச்சு சாட்டைலயும் வெள்ளி கூர் ஈட்டிகளாலயும் அதுங்கள கட்டுப்படுத்தி ராத்திரியில சுரங்கங்கள் தோண்டவும் கட்டிடங்கள் கட்டவும் பயன்படுத்திக்கிட்டாங்க.
அங்கிருந்து இந்த கலை ஹைதியன் தீவுல இருக்குற பழங்குடியின மக்களுக்கு பரவுச்சு.
இப்போ இல்ல.... கிபி1200ல...
கோலம்பஸ் கடல்வழி இந்தியாவ கண்டு பிடிக்க எடுத்த முயற்சில கப்பல செலுத்த அவனுக்கு நிறைய அடிமைகள் தேவப்பட்டாங்க.
அந்த அடிமைகள அவனுக்கு கொடுத்தது ஹைதியன் தீவ காலணியா வெச்சு ஆட்சி புரிஞ்சுட்டு இருந்த ஸ்பெய்ன் இளவரசி இஸபெல்லா.
அங்கிருந்து இந்த கலை கொலம்பஸ் தரையிறங்கின இடங்கள் எல்லாத்துக்கும் பரவுச்சு.
பரவுறதுனா சாதாரணமா இல்ல!
ரகசிய கூட்டமைப்புகள் மூலமா நம்பிக்கையானவர்களுக்கு மட்டும்!
அப்படி தான் இப்போதைய பங்களாதேஷா இருக்குற இடத்துல வசிச்சு வந்த என் வம்சாவளி ஜனங்க 400வருஷத்துக்கு முன்ன இத கத்துக்கிட்டாங்க.
உங்க பையனோட பெரிய தேவதை இன்னும் காத்துல கரையாம இருக்குறது அதிசயம்.!
இப்போ அவன உயிர்த்தெழ வைக்க தேவ,
அவன் வயசுல ரெண்டு நாளுக்குள்ள செத்த ஒருத்தனோட உடம்பு அவ்வளவு தான்! என முடித்தார்.

சொல்லித் தொடங்கியது போலவே ஒரு மாயாஜாலக் கதை கேட்டது போல் தான் இருந்தது.

உயிர் மட்டும் வேறனா, என் பையன நான் வேற யாரோ ஒருத்தரோட முகத்துல தான் பாக்கனுமா?

இன்னொரு விஷயம் சொல்லுறேன் புரிஞ்சுக்கங்க!
இந்த தேவதைங்களுக்குள்ளாற நடக்குற சண்டையில எப்போதுமே ஜெயிக்கிறது பெரிய தேவதை தான்.
வேற ஒரு உடல்ல புகுந்துட்டோம்னு உணருற பெரிய தேவதை, உடல கொஞ்ச கொஞ்சமா கட்டுப்படுத்தி அடுத்த பதினோரு நாட்கள்ல தன்னோட புது உடல அழிந்து போன பழய உடலப் போலவே மாத்திடும்.
சாகுறப்போ உடம்புல இருந்த தழும்பு மச்சம் வரை!
கிட்டதட்ட கூடுவிட்டு கூடு பாய வைக்கிறது போல தான்.

ரொம்பவே தயங்கியது போல் நின்றார் ஜீவாவின் அம்மா.
யாரோ ஒரு கதை சொல்லும் மாயாவி பேச்சை கேட்டுக்கொண்டு ஒரு பிணத்தை எப்படி தயார் செய்ய முடியும்!
சில ஆயிரம் பணங்களை வீசி ஏதோ ஒரு மருத்துவமனை பிணவறையிலிருந்து வாங்கிக் கொள்ளலாம் என்றாலும் இதெல்லாம் சட்டத்திற்கு புறம்பானது.
இருப்பினும் இறந்தும் உயிர்தெழும் வாய்ப்புகளுடன் இருக்கும் தன் ஒரே மகனுக்காக இதை கூட செய்ய மறுப்பாளா இந்த தாய்!

தயக்கத்தை கண்ட சூடான்,
நம்பிக்கை இருந்தா மட்டும் ஒரு உடல தயார் படுத்தி வைங்க நாளைக்கு ஒன்பது மணிக்கு இங்க வருவேன் என்றபடி கிளம்பினார்.

இவர் சொன்னதில் எனக்கு முழுமையாக நம்பிக்கை இருக்கிறது.
உடலற்று உலவும் நான் மரணத்தை வென்றவனாவேன்!
கடவுளுக்கு ஈடானவனெனும் கர்வம் கொள்வேன்.
இப்போது தேவையெல்லாம் அம்மா இதை முழுமையாக நம்ப வேண்டும் அவ்வளவு தான்.

சோஃபாவில் அமர்ந்திருந்தவர் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.
முகத்தை பார்த்தால் குழப்பத்தில் இருப்பார் போல் தான் தெரிகிறது.

மெதுவாய் போய் பக்கத்தில் உட்கார்ந்து தோளணைத்தேன்.
ஆளமருமளவு இடத்தில் சோஃபாவின் மேற்தளம் கொஞ்சம் அழுந்தியிருப்பதை கண்டால் காற்றிலிருக்கும் நான் அருகிலமர்ந்திருப்பதை அறியலாம்.

இதெல்லாம் கனவாய் இருக்கக் கூடாதா!
யாராவது சீக்கிரம் எழுப்பி விழித்துப் பார்க்க,
நான் இறந்ததற்கு முந்நாள் போல் எல்லாமே பழையபடி மாறிவிட கூடாதாவெனும் ஆசை ஏக்கம்.

அவர நம்புங்கம்மா.... நான் திரும்ப வர கடவுள் கொடுத்த இன்னொரு வாய்ப்புமா இது.!
உங்க கூட இருக்க நான் திரும்பி வரனும்மா..... உங்க கைய பிடிச்சு தெருவுல நடக்கனும், உங்க கூட திட்டி அடிக்கடி சண்ட போடனும்..... ஆசையா இருக்குமாயென நான் புலம்பி அழுவது அவர் செவிகளில் விழுகிறதாவென தெரியவில்லை!
நான் கதறும் திசை தவிர்த்து வேறெங்கோ நோக்கி அமைதியாய் அமர்ந்திருந்தவர்,
சிறிது நேரத்தில் கண்களை துடைத்து விட்டு எங்கோ எழுந்து சென்றார்.

எனக்கு புரிந்தது.
நான் பேசியது புலம்பியது கதறியதெல்லாம் காதில் விழுந்திருக்க வேண்டும்!
ஒருவேளை விழுந்திருக்கவில்லை என்றாலும் கூட சந்தேகமின்றி என் அம்மா இந்த முடிவை தான் எடுத்திருப்பார்.
நாளை வரை காத்திருக்க வேண்டியவனானேன்.
24மணிநேரம் நகர மறுப்பதாய் விரைந்து விரட்டினேன்.

இன்று பௌர்ணமி நாளிரவு.
நான் உயிர் பெற நோக்கியிருந்த, எனக்கு மறுவாழ்வளிக்க இறைவன் நியமித்த தினம்.

சூடான் வீட்டிற்குள் வந்ததுமேவே எனக்கு பாதி நம்பிக்கை வந்தாகிவிட்டது.

வந்தவர் தாமதிக்காமல் தன் மாந்திரீக வேலையை தொடங்கினார்.
கரிக்கட்டையால் வீட்டின் அறையளவு ஓர் ஐமுக நட்சத்திரம் வரைந்தார்.
அதற்குள்ளிருந்து எல்லா திசைகளுக்கும், நாற்சுவர்களுக்கும், மேற்கூரைக்கும் பல கோடுகள் வரையப்பட்டன.
ஏதோ புரியாத பாஷையின் பல வாசங்கள் சுவரெங்கும் எழுதப்பட்டன.

உத்தரவிட்டபடி அம்மா கொண்டு வந்த ஆளுயரக் கண்ணாடி தெற்கு நோக்கி வைக்கப்பட்டது.
பையிலிருந்து எடுத்த நீலநிற நீண்ட கயிற்றை கண்ணாடியை சுற்றி கட்டினார்.

மொத்த வீடும் இரைத்தேடி பறக்கும் ஈயின் இறக்கை சத்தம் உணருமளவு நிசப்தமானது.
எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டன.
வரையப்பட்ட நட்சத்திரத்தின் நடுவே ஒளியெழுப்பிக்கொண்டிருக்குமோர் சிறு தீபத்தை தவிர.

இப்போ உங்க பையனோட ஆத்மாவ இங்க கூப்பிட போறேன்!
அதுக்கு முன்ன நான் கேட்ட உடலெங்க?வென கர்ஜித்தார் சூடான்.

கைப்பேசியை எடுத்த அம்மா யாரையோ அழைத்த இரண்டு நிமிடங்களில் டிசர்ட் லுங்கியணிந்த இருவர் வெள்ளை துணியால் முழுவதும் சுற்றப்பட்ட ஓர் உடலை தூக்கி வந்து அறை நடுவே வைத்தனர்.

கையளவு இரு மண் பொம்மைகளை எடுத்து முன்னே வைத்தவர் ஆக்ரோஷமாக ஜீவாவென கத்தினார்.

ம்வென் மென்ம் கோமன் நன் ஔ பா நோன் அன் நான் பாண்டுயே ஜீவா....... ம்வென் மென்ம் கோமன் நன் ஔ பா நோன் அன் நான் பாண்டுயே ஜீவா...!!

இப்படியாக அவர் சொல்ல சொல்ல ஏதோ ஒரு சக்தி முதுகை பிடித்து தரதரவென இழுத்து வந்து கண்ணாடி முன்னே அமர்த்தியது.

பிணத்து மேல கை வை என்றார்.
செய்கலானேன்.

பின் கையிலிருந்த ஊசியால் ஒரு பொம்மையையும், நூலின் மறுமுனையில் முடியப்பட்டிருந்த இன்னொரு ஊசியால் மற்றொரு பொம்மையையும் குத்தினார்.

இரண்டாவது பொம்மை ஊசியால் வாங்கும் ஒவ்வொரு குத்திற்கும்
அதேயிடத்தில் என் உயிர் வலிப்பது போல் உணர்ந்தேன்.
கால் மூட்டுகளில், அடிவயிற்றில், மார்பில் கடைசியாய் நடு நெற்றியில்.

பேயொன் கோ லீ...... ஃபே மோன் சா அ விவியன்....
பேயொன் கோ லீ...... ஃபே மோன் சா அ விவியன்....
பேயொன் கோ லீ...... ஃபே மோன் சா அ விவியன்....
ஹைதியன் மொழியில் இந்த உயிரை உடலில் ஏற்றுக்கொள்..... இவனுக்கு உயிருண்டாக்கு என்பது பொருளிதற்கு.

கையிலிருந்த மரக்குச்சியால் தரையில் டக்....... டக்....... டக்...... டக்..... என ஒலியெழுப்பினார்.
ஒவ்வொரு அடியும் காதில் இடியாய் ஒலித்தது.

உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாய் அசைக்க முடியாததை போல் உணர்தேன்.
விரல்கள் மடக்கப்பட்டு ஏதோ கயிற்றாலோ துணியாலோ கட்டப்பட்டிருப்பதாக தோண்றுகிறது.
கண்கள் மூடப்பட்டிருப்பதாகவும், கால்கள் இறுக்கப்பட்டிருப்பதாகவும், கழுத்து வளைய மறுப்பதாகவும், உடல்மேல் யாரோ ஏறி அமர்ந்திருப்பதாகவும், ஆம்!!
எனக்கு உடலிருப்பதாகவே உணர்கிறேன்.

ஏதோ ஒரு சக்தி என்னை அந்த உடலுக்குள் கவ்வி இழுத்துக்கொண்டிருக்கிறது.
தோள்கள் கணக்கின்றன!
இமைகள் மூடியிருப்பதாகவும் திறந்திருப்பதாகவும் மாறி மாறி தோண்றுகிறது.

பேயொன் கோ லீ...... ஃபே மோன் சா அ விவியன்....
பேயொன் கோ லீ...... ஃபே மோன் சா அ விவியன்....

அசதியில் கண்கள் மூட எத்தனிக்கின்றன.!
ஏதோர் குரல் வாவாவாவா உனக்கு உடல் கிடைச்சுட்டு.... வாவாவாவென பாசமாய் அழைத்தது.
குரலில் அத்தனை இனிமை... அத்தனை காதல்....
ஏதேதோ முணகினேன்!
பார்வையை இருள் சூழ்ந்தன.!
ஏதோ பேசுகிறேன்!
தலையில் கைவைத்து யாரோ கேசம் கோதும் உணர்வு!
கண்கள் கூசின.

திடுக்கிட்டு எழ,
சூரிய உதயம்!
விடிந்திருந்தது.
தலைமாட்டில் அமர்ந்திருந்தார் அம்மா.

அம்மா நான் எழுந்துட்டேன்!
எனக்கு உயிர் வந்துடுச்சு!
நான் உயிரோட இருக்கேன் என கத்தியபடி எழுந்து போய் கண்ணாடியை பார்த்தேன்.
இது என்னுடலே தான்.
பதினோரு நாட்கள் ஆகிவிட்டதா!!

அம்மா நான் எழுந்துட்டேன்!
செத்து பொழைச்சு வந்துருக்கேன்!
சூடான் சாமிய கூப்பிடு!
அவருக்கு நன்றி சொல்லனும் என சந்தோஷத்தில் கத்தினேன்.

அமைதியாய் அருகில் வந்தவர் என்னை நிறுத்தி, தான் தொடங்கினார்.
பின் அவர் சொன்ன அத்தனையும் பெரும் அதிர்க்குள்ளாக்குவதாய் இருந்தது.

உளறுறத நிறுத்திட்டு
நான் சொல்லுறத கேளுப்பா முதல்ல,
உண்மையாவே நீ இப்போ செத்து பொழைச்சு தான் வந்திருக்க! என்றபடி கட்டியணைத்துக் கொண்டார்.

உனக்கு பாத்ரூம்ல ஷாக் அடிச்சு ரெண்டு மாசம் ஆச்சு!
பாத்ரூம் கதவ உடைச்சு உன்ன வெளிய தூக்கிட்டு வந்து..........
உடனே உன்ன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம்.
ஆனா சடன் ஹை ஓல்டேஜ் பாஸ் ஆனதுல நீ கோமால போயிட்டதா டாக்டர்ஸ் சொன்னாங்க.
பத்து நாள் ஹாஸ்பிடல்ல தான் வெச்சுருந்தோம்.
நீ இதுக்கு மேல கண்ணு முழிக்கிறது கஷ்டம், ப்ரைன் டெட் ஆகவும் வாய்ப்பிருக்குனே சொல்லிட்டாங்க!
ஒன்ற மாசமா படுத்த படுக்கையா வீட்டுல தான் இருக்க.
டெய்லி டாக்டர் வந்து ஊசி மட்டும் போட்டுட்டு போவாரு...
ரெண்டு நாளா தான் உன் கிட்ட இம்ப்ரூவ்மெண்ட் இருந்துச்சு...
நீயாவே படுத்திருந்தபடி பேசின.... ஏதேதோ இடைல உளறுன... ரெண்டு மாசத்துக்கு அப்பரம் நேத்து தான் தானா எழுந்து நடந்த... ஆனா உனக்கு எங்க யாரையும் ஞாபகமே இல்ல!
இப்போ தான் எழுந்து நல்லபடியா பேசுற என சந்தோஷத்தில் கண் கலங்கினார்.

கோமாவுல இருந்தேனா!!
அப்போ இதெல்லாம் கனவா!
நடந்ததெல்லாம் பொய்யென உணர்ந்திட சில நேரம் எடுத்துக் கொண்டேன்!
யோசித்தேன்.... சில காட்சிகள் மறந்ததை போல் உணர்ந்தேன்!!
வீட்டிற்குள்ளேயே கொஞ்சம் நடந்தேன்.
அரை லிட்டர் தண்ணீர் குடித்தேன்!

இந்த விஞ்ஞான யுகத்துல ஆத்மாவாம் சின்ன தேவதையாம் ஊடு கலையாம்!! ஹாஹா...
நம்ம மூளை நம்மள எந்தளவு ஏமாத்துதுல்ல!
ச்ச!! அத்தனையும் கனவாவென தனக்குள் புன்னகைத்துக் கொண்டேன்!

தூங்கியிருந்தாலும் இந்த கனவு என்னை இறந்துவிட்டதாகவே ரொம்ப தான் பயமுறுத்திவிட்டது.
தெரிந்தோ தெரியாமலோ நான் கோமாவில் இருந்த இரண்டு மாதங்கள் அம்மாவை அதிகம் தனிமைப்படுத்தியிருக்கிறேன்.
நான் எழுவேனா மாட்டேனாயென ரொம்பவே பயந்திருப்பாரென நினைக்கிறேன்!
உன்ன விட்டு நான் இனிமே எங்கேயும் போக மாட்டேன்மா என தழுவிக்கொண்டேன்!

===================================

சில தினங்களுக்கு முன்.....

பார்க் பெஞ்சில் அமர்ந்திருந்த ஜீவாவின் அருகில் போய் அமர்ந்தார் சூடான்.

என்ன ஜீவா?? எப்படி இருக்க??

நான் உங்க கண்ணுக்கு தெரியுறேனா??
சொல்லுங்க சார் நான் உங்க கண்ணுக்கு தெரியுறேனா??

ஆமா ஜீவா... என் பேரு சூடான்...
நீ என் கண்ணுக்கு நல்லாவே தெரியுற!
அழகா தெரியுற ரஜினிகாந்த் போல....
ஏன் தனியா உக்காந்து அழுதுட்டு இருக்க?
என்ன உன் பிரச்சன?
என்கிட்ட சொல்லலாமில்லையா? என்றபடி தன் பூட்ஸ் காலை தரையில் தட்டி தாளமிட்டார்
டக்..... டக்...... டக்..... டக்.... டக்....

போன மாசத்துல ஒரு நாள் வீட்டு பாத்ரூம்ல ஷாக் அடிச்சதுல நான் செத்துட்டேன் சார்....
என்ன பாவம் பண்ணினேனோ தெரியல!
இன்னும் மோட்சம் அடையாம இங்கேயே சுத்திட்டு இருக்கேன்!
என் அம்மா ரொம்ப பாவம்...
நான் இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாங்க....
எனக்கும் ஆசை தான்! அவங்க கையால சாப்பிடனும், அவங்க மடில தூங்கனும்னுலாம்!
இனிமே எங்க நடக்கப்போகுது அதெல்லாம்!
டெய்லி உக்காந்து அழுவாங்க என்ன நினைச்சு.... நானும் பக்கத்துல உக்காந்து ஆறுதல் சொல்லுவேன்...
ஆனா அவங்க காதுக்கு தான் கேக்காது!
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் செத்ததுக்கு அவங்க எனக்கு ஈம காரியங்கள் கூட பண்ணல!!
இவ்வளவு சீக்கிரம் அவங்கள விட்டு போயிட்டேனேனு என் மேல கோவத்துல இருக்காங்க போல!

அதுக்கு அவசியம் இருக்காது ஜீவா!

என்ன சொல்லுறிங்க எனக்கு புரியல!!

எனக்கு இறந்த ஆத்மாக்களுக்கு உயிர் கொடுக்குற சக்தி இருக்கு... சக்தினு சொல்லுறத விட அது ஒரு கலை,
அந்த கலை எனக்கு தெரியும்!
உனக்கு சீக்கிரமே ஒரு உடல தேடி அதுல உன்ன செலுத்தப்போறேன்!
இன்னும் இருபது நாள்.
பௌர்ணமி தினம் வரைக்கும் காத்திரு!
நானே உன்ன தேடி வரேன் அது வரை அமைதியாயிரு என சொல்ல ஜீவா அங்கிருந்து குழப்பத்துடன் கிளம்பினான்.

ஜீவா புரப்பட்ட பிறகும் வெகுநேரமாக
பெஞ்சில் அங்கேயே அமர்நிருந்த சூடான் பையிலிருந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார்.

ஒரு பத்து நிமிடங்கள் இருக்கலாம்.
ஜீவாவின் அம்மா வந்தார்.

பேசுனிங்களா டாக்டர் அவன் கிட்ட??
என்னனு தெரிஞ்சுதா??

நான் பேசினேன்மா.... கொஞ்சம் சமாதானப்படுத்தி ப்ரீஹிப்னட்டைஸ் பண்ணி அனுப்பியிருக்கேன்!
என்ன நடந்துச்சுனு இப்போ நீங்க கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கனா ட்ரீட்மெண்ட்டுக்கு எனக்கு இன்னும் கொஞ்சம் ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்.

போன மாசத்துல பாத்ரூம்ல வாட்டர் ஹீட்டர ஆன் பண்ணுறப்போ ஷாக் அடிச்சு மயங்கி விழுந்துட்டான் டாக்டர்.
உடனே ஹாஸ்பிடல் தூக்கிட்டு போனோம்.
கொஞ்ச நேர ட்ரீட்மெண்ட்ல உயிருக்கெலலாம் எதுவும் ஆபத்தில்லனு ஒரு ரெண்டு மணிநேரத்துலயே டிஸ்ச்சார்ஜ் பண்ணிட்டாங்க.
ஆனா அன்னிக்கு ஈவ்னிங் வீட்டுக்கு
வந்ததுலருந்து, அந்த ஷாக் அடிச்சதுல தான் செத்துட்டதாவும், காத்துல கரைஞ்சுட்டேன் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டேன், நான் பேசுறது யாருக்கும் கேக்காதுனும் சொல்லிட்டு இருக்கான்.
எவ்வளவோ சொல்லி பாத்தோம் கேக்குற மாதிரியே இல்ல!
பசிச்சுதுனா தானா கிச்சனுக்கு போவான் சாப்பாடு போட்டு சாப்பிடுவான் ஆனா சாப்பிடுறியானு நான் கேட்டா,
நான் சாவில்லாதவன் சாப்பாடு தேவையில்ல அதுயிதுனு பைத்தியம் மாதிரி உளறுறான் என்றவாறு கண்களில் நீர் சுரந்தார்.

பயப்படாதீங்கமா.... இது ஒன்னும் பெரிய பிரச்சனையில்ல....
மனரீதியா கொஞ்சம் குழம்பியிருக்கான் அவ்வளவு தான்.
அப்போ நடந்த ஆக்ஸிடன்ட்ல தான் இறந்துட்டதாவே மனசளவுல நம்புறான்.
இத மெடிக்கல் டேம்ல டெட் அலைவ்(Dead alive) அல்லது,
வாக்கிங் காப்ஸ் சின்றோம்(walking corpse syndrome)னு சொல்லுவோம்.
இந்த மாதிரி நேரத்துல மோட்டார் ஃபங்க்ஷன், மெமரி அண்டு சென்ஸரி இன்ஃபர்மேஷன்ஸ் மூளையோட ஃப்ரன்டல் பார்ட்ஸ்ல கம்மியா இருக்கும்.
ஒன்னும் பிரச்சனையில்ல...
சின்னதா ஒரு ஸ்பெக்ட் எடுத்து பாத்துடுவோம்....
இப்போ சில மூடு ஸ்டெபிலைஸர் மெடிகேஷன்ஸ் எழுதி தரேன்...
எல்லாம் ஆண்ட்டி-டிப்ரஸன்ட்ஸ் ஆண்ட்டி-சைக்கோட்டிக்ஸ் தான்...
இந்த டென்ஷன குறைச்சு மனஅமைதிய ஏற்படுத்துற மருந்துங்க...
இத ஒரு பதினஞ்சு இருபது நாளுக்கு கொடுங்க...
அப்போவும் இம்ப்ரூவ்மெண்ட் தெரியலனா ஃபர்தர் சைக்கலாஜிக்கல் ட்ரீட்மெண்ட்ஸ் பாக்கலாம்!

ஃபர்தர் ட்ரீட்மெண்ட்னா என்ன டாக்டர்??
எலக்ட்ரிக் ஷாக் மாதிரியா??

எலக்ட்ரோ கன்வல்சிவ் ட்ரீட்மெண்ட் இஸ் சம்வாட் எஃபக்ட்டிவ் பட் நாட் நெசசரி....
டெட் அலைவ் ஸ்டேஜ்ல இருக்குறவங்க ஆழ்மனசுல, செத்துட்டதா பதிஞ்சுருக்குற நினைப்ப அழிக்கிறது, மறக்கடிக்கிறது ரொம்ப கஷ்டம்....
ஆனா தான் செத்துட்டோம்ங்கற நினைப்ப இல்ல தப்புனு அவன நம்ப வைக்கிறது ஈசி....
அவன டைவேட் பண்ணி நம்புற மாதிரி சில கதைகள் சொல்ல வேண்டியிருக்கும் அண்டு கொஞ்சம் ஹிப்னட்டிசம் அவ்வளவு தான்!

-ராஜ்குமார்.ரா @Rajitalks