மனுநீதிசோழன் ஒரு இருபது வயது நாத்திகன்..!
கடவுளை வெறுமனே வெறுப்பது,
காரணமில்லாமல் மறுப்பது என்பதை மட்டுமே முற்போக்கு சிந்தனையாக எண்ணிக்கொண்டு,
தன்னை தானே பகுத்தறிவாளனாக
காட்டிக்கொள்ள முயற்சிக்கும் ஒரு முட்டாள் இளைஞன்..!
ஒவ்வொரு நாத்திகனுக்குள்ளேயும் இருக்கும் கடவுள் எனும் கோட்பாட்டின் இருப்பு சார்ந்த சிறு அச்சம்
அவனுக்குள்ளேயும் வந்ததன் காரணமோ என்னவோ,
கடவுள் அல்லது அதன் எதிர்வினையை
காண வேண்டுமென்ற ஒரு இனம்புரியாத ஆவல்,
அவனை கடவுள் என்ற விடையறியா/விடையில்லா ஒரு
தேடலை நோக்கி செலுத்தியது..!
தேடல் தொடங்கிய கருவிலேயே எழுந்த முதல் குழப்பமானது,
தான் தேடப்போவது இந்துமத கடவுளையா,
இஸ்லாமியமத கடவுளையா அல்லது
கிருஸ்தவ மத கடவுளையா என்பது..!
இந்த முதன்மை குழப்பத்தை தவிர்க்க,
மதம் சார்ந்த எல்லா புராண இதிகாச கட்டுகதைகளை மூட்டைக்கட்டி விட்டு,
இறுதியில் தான் காணப்போகும்
அல்லது
இல்லையென நிரூபிக்கப் போகும் கடவுளெனும் சக்தியானது
பூமி அண்டம் பேரண்டத்தில் இருக்கும் எந்த உயிரின கூட்டமைப்புகளின் மதத்தையும் சாதியையும் சாராதது என தனக்குள் சொல்லி முற்றுப்புள்ளி வைத்தான்.!
பிறகான அவனது தேடல் அறிவியலாக நீண்டது.!
பெரும்பாண்மை ஆத்திகர்களின்
கடவுள் இருப்பு வாதமானது,
அறிவியல் ரீதியாக கண்டுப்பிடிக்கப்படாத பிரபஞ்ச காரணங்களை சுட்டிக்காட்டுவது சார்ந்ததாகவே இருந்தது!!
மனிதனின் கண்களுக்கும் அறிவிற்க்கும் புலப்படும் மற்றும் புலப்படாத விஷயங்களில்,
அவிழ்க்கப்படாத முடிச்சுகளான சில மர்ம கேளிவிகளையும்,
அறிவியல் கேள்விகளுக்கு சம்மந்தமேயில்லாத அல்லது முரணான சில பதில்களையும்
தன் சின்னஞ்சிறு அறிவிற்கு
எட்டியவாறு வரிசையாக தொகுத்தான்..!!
தொகுத்த வரிசையின் படி ஒவ்வொரு கேள்வியின் சரியான மற்றும் திருப்தியான
இறுதி பதிலின் போதும் கடவுளை இருக்கிறது
அல்லது
இல்லையென நிரூபித்துவிடலாம் என்ற கோட்போடு,
அதை யார் கண்டுபிடித்ததோ.!
அதற்கு "மனுநீதி கேள்வி கோட்பாடு" என பெயர் சூட்டி
தொகுப்பின் முதல் சர்ச்சைக்குரிய கேள்வியான பூமி எப்படி உருவானதென்ற கேள்விக்கு பதிலை தேட தொடங்கினான்..!
பலப்பல அறிஞர்களும் விஞ்ஞானிகளும் தத்துவ மேதைகளும் அக்கேள்விக்கு
ஆளுக்கொரு பதிலாக சொல்லிச்செல்ல,
முதல் கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன்
முன்னோர்களால் சொல்லப்பட்ட கருத்துக்களில் சிலவற்றை ஆராய்ந்து புரியவே வருடம் ஐந்தாகி,
வயது இருபத்தைந்தானது!!
தேடல் நோக்கிய பயணத்தின் பாதை ஒருவழியானது தான் என்றாலும்,
ஒவ்வொரு புதிரும் ஒவ்வொரு கேள்வியும்
பலப்பல துனைக்கேள்விகள் கிளைக்கேள்விகள் என குட்டிப்போட்டு வட்டிப்போட்டு நட்சத்திர எண்ணிக்கைகளாயின..!
ஐந்து வருடகால முயற்சி புரிதல் தேடலுக்கு பின்,
மனுநீதி இன்னும் தொகுப்பின் முதல் கேள்விக்கே பதிலை தேடிக்கொண்டிருக்க,
பின்னே அணிவகுத்திருக்கும்
மற்ற 728கேள்விகளும் தங்களின் வீரியத்துக்கு தகுந்தாற்போல் ஆளுக்கு சில
வருடங்களை தனக்குள் கணக்கிட்டுக்கொண்டு,
எங்களை (கடவுளை) புரிய நீ இன்னும்
இரண்டாயிரத்து இருநூற்றி நான்கு வருடங்கள் தேட வேண்டுமென சொல்லி நக்கலாய் நகைத்தன..!!
இந்த முதல் கேள்வி(க்கே) பதிலை கண்டறிய மனுநீதிக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன..
ஒன்று
Quantum physics - Einstein theory என இதற்கு முன் சொல்லப்பட்ட 7846அறிஞர்களின் 67ஆயிரம் கருத்துக்களையும் படித்து அதில் ஏதோ ஒன்றை ஏற்க வேண்டும்..!
அல்லது இரண்டாவதானது,
அனைத்தையும் படித்து மறுத்து தானாக ஒரு பதிலை உருவாக்கியாக வேண்டும்..!
முதலாவதானதிற்கான வாய்ப்பு 50/50 சதவீதம்..!
அதாவது அதில் பூமி/பிரபஞ்ச உருவாவாக்கத்திற்கான அறிவியல்பூர்வமான ஏதோ ஒரு பதிலை ஏற்று, பிரபஞ்சம் சில அறிவியல் காரணங்களால்
உருவானதென சொல்லி
கடவுள் இல்லை என முடிக்கலாம்..
அல்லது
அதற்கு நேர் முரணான மற்றும் எதிர்மறையான பதிலை ஏற்று கடவுள் தான் இவையனைத்தையும் படைத்ததென
அர்த்தம் கொள்ளலாம்..!
எப்படியானாலும் தனக்கு திருப்திகரமான
பதிலை கண்டறிய இந்த சாமானிய இளைஞனுக்கு சில நூறு வருடங்கள் ஆகலாம்!!
அடிப்படையில் நாத்திகனாதலால் பெரும்பாலும் கடவுள் இல்லை என்பதை நோக்கியே அவன் தேடலும் இருந்தது..!
இவ்விதமான இந்த தேடல் ஆராய்சிகள்
நேரம் காலம் காணாமல் வருடக்கணக்கில் சென்றுக்கொண்டு இருக்க,
ஒரு சாதாரண நம் பக்கத்து வீட்டு இளைஞனின் தினசரி நடவடிக்கைகளாக அல்லாமல்,
அவனது வாழ்க்கை முறையானது
தேடல் என்ற ஒரு வரையறுக்கப்பட்ட
கோட்டின் மேலேயே பயணித்துக் கொண்டிருந்தது..!
தத்துவ காகிதங்களுடனும் அறிவியல் ஆராய்ச்சிகளுடனும் பல ஆண்டுகளுக்கு மேலாக குடித்தனம் நடத்தினான்!
இப்படியாகவே பத்து வருடங்கள் கடந்தன.!
அன்றொரு நாள்-செவ்வாய்கிழமை நல்லிரவு மணி தோராயமாக 1.30 இருக்கலாம்.!
படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டுக்கொண்டிருந்தான் மனுநீதி..!
திடீரென ஏதோ முணுமுணுத்த அவன் உள்ளுனர்வு எழுந்து தோட்டத்திற்கு வாவென அழைத்தது..!
போர்வையொன்றை எடுத்து போர்த்தியபடி வசீகரித்த பாதையில் நடந்தான்.!
நடக்கும் இந்த நேரத்தில் யார் தன்னை அழைத்ததென்ற கேள்வியும்,
எதற்காக நான் இந்நேரத்தில் இங்கே செல்ல வேண்டுமென்ற தயக்கமும்
அவனுக்கு ஒருபோதும் எழாமல் பார்த்துக்கொண்டது அந்த அழைப்பு.!
ஏதோ ஒரு கட்டளைக்கினங்க நடந்து வந்தவனை
தோட்டத்தில் இங்கே நிற்க வேண்டுமென ஒரு உள்ளுணர்வு சொல்ல,
ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் வந்து நின்றான் மனுநீதி..!
இதன்பின் இவன் காணப்போகும் காட்சிகளானது மனிதயினத்தில்
யாரும் இதுவரை கண்டிராத மற்றும் காண வாய்ப்புகள் கிடைத்திடாத சில விஷயங்கள்.!
ஆகாயம் நோக்கிய இரைச்சல் - அங்குமிங்குமாய் பறந்த ஒளிக்கீற்று..
பறந்து வந்த
சிகப்பு நிற பறக்கும் தட்டு ஒன்று
இருபதடி தூரத்தில் சத்தம் குறைத்து நின்றது..!
மனதில் குழப்பம்-மெல்லிய அதிர்ச்சி-கண்களில் பயம்-கால்களில் பதட்டம் என அனைத்து உணர்வுகளும் ஒரு சேர ஆட்கொள்ள,
அடுத்து நடக்கப்போவதை எண்ணிய ஆர்வம் பயத்தை ஓரங்கட்டி மனுநீதியை
அந்த தட்டை நோக்கி நடக்க செய்தது.!!
எட்டடி உயரம் - மனிதனை போன்ற ஒரு உருவம் - கருத்த உடல் - பெருத்த வயிரு - ஆணுமல்ல பெண்ணுமல்ல - காட்சிக்கு பிரம்மிப்பாய் ஒரு ஜந்து..!
ஒரு விஞ்ஞானி இதை ஏலியன் எனலாம் - பயமுறுத்தியிருந்தால் பேய் எனலாம் -
அரவணைத்துயிருந்தால் கடவுள் எனலாம்..!
மொத்தத்தில் இருபது கோடி ஆண்டுகளுக்கு பிறகு பரிணாம வளர்ச்சியடைந்த மனிதனோ அல்லது பூமியின் வேறு ஒரு மிருகமோ இப்படியாக காட்சியளிக்களாம்.!
எது எப்படியோ வெளியே வந்த அந்த உருவம் இந்த நடைமுறை உலகுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத ஒன்று..!
அதன் அருகே சென்ற மனுநீதிசோழன் திகைப்பிலிருந்து வெளிவரும் முன்னரே,
அடுத்த அதிர்ச்சியானது "என்ன பாத்து பயப்படாத மனுநீதி" என தன் கரகரத்த குரலில் தமிழில் பேசியது!
உனக்கு சில விஷயங்களை காட்டவே நான் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறேன் - எங்கிருந்து யாரால் எனும் கேள்விகளை விடுத்து என்னுடன் வாவென அழைத்தது..!
மனுநீதி அமைதியாக தலையாட்டி தன் ஓப்புதலை தெரிவிக்க, கைப்பிடித்து தோட்டத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து சென்றது அந்த ஜந்து..!
முதலாவதாக சென்ற இடமானது மனுநீதியின் வீட்டு படுக்கையறை..!
அங்கே தன் அழகிய மனைவியுடன் கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான் ஒரு முப்பத்தி ஐந்து வயது ஆண்.!
கலவியின் பிசுபிசுப்பில் கூட காதலையும் காமத்தையும் உணராமல்
அரைகுறை ஈடுபாட்டுடன்
இரண்டாம் நிலை சிந்தனையை வேறெங்கோ வைத்திருந்தான்.!
இவன் நானே தானென உணர்கிறான் மனுநீதி..
பார்க்க உன் போல் இருந்தாலும் இவன் நீயல்ல..! இது எதிர்காலமுமல்ல என கூறுகிறது ஜந்து..!
அதே கையோடு வாசலுக்கும் அழைத்துச் சென்றது.!
வாசலில் பத்து வயது சிறுமி ஒருத்தி வேகவேகமாய் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்..!
நாற்பது வயது மதிக்கத்தக்க அவளது தந்தையின் பெயரும் மனுநீதிசோழன் தானாம்.!
தனது பைக்கில் உட்கார்ந்து கொண்டு மகளை அழைக்க,
நான் அப்பா கூட ஸ்கூலுக்கு போக மாட்டேன்மா எல்லாரும் பைத்தியம்னு கிண்டல் பன்னுவாங்கவென தன் அம்மாவிடம் முறையிடுகிறாள் அந்த சிறுமி..!
பின்னே ஜந்துவுடன் நின்று இவையனைத்தையும் கவனித்த மனுநீதி இதைக்கேட்டு கொஞ்சம் ஆடித்தான் போயிருக்க வேண்டும்..!
இதன் பிறகு மூன்றாவதாக செல்லப்போகும் இடம் இதைவிட மோசமான காட்சியை காட்டிவிட கூடாதென மனதுக்குள் சொல்லிக்கொண்டான்..!
இதையடுத்து இருவரும் வீட்டின் மேல்மாடி அறைக்கு சென்றனர்..!!
அறுபது மீட்டர் நீளமுள்ள நீண்ட அறையது..!
அறையின் இரண்டு பக்கங்களிலும் கட்டு கட்டுகளாய் காகிதங்கள் அடுக்கியிருந்தன..!
காகிதங்கள் முழுவதும் சமன்பாடுகள் தத்துவங்களென நிறைந்திருந்தன..!
மட்டுமின்றி அந்த அறை காற்றையும் காகிதங்களையும் மட்டுமே தன்னகத்தே கொண்டிருந்தது!
தவிர வேறாரும் வேறேதும் இல்லை!!
ஏனோ அதில் எழுதியிருந்தது எதையும்
மனுநீதியால் படித்து புரிய முடியவில்லை..!
கையிலிருந்த காகிதங்களை தூக்கிப்போட்டு விட்டு அறுபது-எழுபது வயது தன்னை அந்த அறை முழுவதும் தேடினான்..!
பின்னர் அறையின் ஜன்னல் வழியே வெளியே எட்டி பார்க்க,
மனுநீதிசோழன் தோற்றம் மறைவு என எழுதப்பட்ட ஒரு கல்லறை
தோட்டத்தில் இருப்பதையும்
அவன் ஜாடையில் ஒரு பெண்ணும் ஆணும் அருகே அமர்ந்து அழுவதையும்
காண்கிறான்!
அது ஏதோ ஒரு வருட நினைவஞ்சலியாக இருக்க வேண்டுமென உணர்கிறான்!
நான் வந்த வேலை முடிந்தது - நீ பார்த்த இந்த காட்சிகள் யாவும் நடக்கலாம் நடக்காமலும் போகலாம் -
ஆனால் கண்டிப்பாக இது உன் எதிர்காலம் கிடையாது - அப்படி இருக்குமானால் அது நீயாக ஏற்படுத்திக்கொண்டது -
முற்று உன்கையில் என கூறி பறக்கும் தட்டுடன் பறந்தது அந்த ஜந்து..!!
நடந்து முடிந்த யாவும் ஓரிரு நிமிடத்தில் நடந்திருக்க வேண்டும் -
காகித வார்த்தைகளை என்னால் படிக்க முடியவில்லை - இந்த பயணம் தொடங்கிய இடமும் மறந்து போனது -
ஒவ்வொரு காட்சியிலும் நானே என் கண் முன் நிற்கிறேன்..!
இவையாவும் கனவா நனவாயென குழம்பிக்கொண்டான்..!
இது கனவாக இருப்பின் யாரோ ஒருவர் என்னை எழுப்பும் முன் நானே எழ வேண்டும் - யாராவது எழுப்புவார்களாயின்
கண்ட இந்த காட்சிகள் யாவும் 0.0002 நொடியில் எனக்கு மறந்து போகலாம்.!
இந்த கனவுக்குறிப்புகளை தக்கவைத்துக் கொள்ள,
தூக்கத்திலிருந்து தானே எழ முயற்சி செய்தான் மனுநீதி!
தனக்கு பழக்கப்பட்ட இடத்தில் இதுவரை செல்லாத இடமொன்று இருக்குமாயின் அங்கே போக முற்பட
கனவிலிருந்து
தூக்கத்திலிருந்து விடுபடலாம் என்பது
அவன் ஏற்கனவே பலமுறை பரிசோதித்துப் பார்த்த ஒரு
செயல்முறை ஆராய்ச்சி..!
சுற்றியும் முற்றியும் பார்க்க வீட்டின் பின்
மாட்டு கொட்டகை..
தன் வாழ்நாளில் இதுவரை பார்த்திராத
இடம் அது!
தன் வீட்டில் மாடுகள் இருந்ததாகவும் அவனுக்கு ஞாபகமில்லை!!
கண்ட காட்சிகள் யாவையும் மனதுக்குள் உருவகப்படுத்திக்கொண்டே வேகமாக
கொட்டகையை நோக்கி ஓடினான்!
அந்த கொட்டகையை நெருங்க நெருங்க கால் முட்டிகள் இரண்டும் பலமாக
வலித்தன!
கடிகாரமுள் சத்தமும் காற்றாடி சத்தமும்
அரக்கத்தனமாய் ஒலித்தன!!
பெருமூச்சு விட்டு படுக்கையிலிருந்து எழுந்தான் மனுநீதி!!
#மணி 2.15 - அருகிலிருந்த தினநாட்காட்டியில் திங்கள்கிழமை தாள் கிழிக்கப்படாமல் காற்றில் பறந்துக்கொண்டிருந்தது!!
எழுந்து அங்குமிங்கும் வீட்டினுள் கொஞ்ச நேரம் நடந்தான்!!
நடந்தவை யாவும் கனவுகளென புரிந்து ஐந்து நிமிடம் கழிந்து மூளைக்கு ஆறுதல் சொன்னான்!!
கனவில் வந்தது கடவுளாக இருக்குமோ என தனக்குள் சந்தேகம் கொண்டான்!!
பிரபஞ்சத்தின் ஒற்றை கேள்விக்கே பத்து வருடங்களாக திணறி பதில் கண்டுபிடிக்க முடியாத என்னால் எப்படி கடவுளை
பறக்கும் தட்டு, எட்டடி உயரமென
அவ்வளவு சுலபமாக வரையறுத்து விட முடியுமென கேட்டுக் கொண்டான்!!
கடவுளே வந்து நேரில் நின்றாலும்
இந்த சின்ன மனித மூளையால் அந்த சக்தியை-கோட்பாட்டை உணரவோ உருவகப்படுத்தவோ முடியுமாவென சந்தேகித்து
முடியாது வாய்ப்பில்லையென மறுத்தான்!!
இந்த பிரபஞ்சத்தின் ரகசியம்
மற்றும்
உருவான காரணமானது
எண் "49" என்பதை கடவுளே வந்து சொன்னாலும்
அந்த காரணம் மனித அறிவிற்கு எட்டுமா!!?
அல்லது
இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை புரியுமளவுக்கு மனிதயினமானது தான்
அறிவு-அறிவியல் ரீதியாக வளர்ச்சியடைந்து விட்டதா!!
இறுதியாக கண்ட கனவு காட்சிகள் யாவும் என்னால் உருவாக்கப்பட்டவையே!
அவை எனக்கு நானே சொல்லிக்கொண்ட அறிவுரைகள் என உணர்ந்தான் மனுநீதி!
வாழ்க்கைக்கான புரிதல் இறையிலோ
அல்லது அது சார்ந்த நம்பிக்கையிலோ இல்லையென்பதையும்,
அது நம்மை சுற்றியுள்ளவர்களோடு நாமானதாக தான் இருக்கிறதுவென
தான் உணர தான்
இந்த கனவு விளையாட்டு அரங்கேற்றப்பட்டதாக நம்பினான்!!
இந்த கனவின் பாதிப்பின் பின்னும் மனுநீதிசோழன்
தன் ஆராய்ச்சியை தொடரலாம் அல்லது கைவிடலாம்!!
ஆனால் கிடைத்த இந்த ஒரேயொரு வாழ்க்கை வாழ்வதற்காக தானே தவிர,
கண்டதை தேடி நேரம் வயது குடும்பம் சந்தோஷம் அனைத்தையும் விரயம் செய்து வீணடிக்கவல்லவென புரிய ஒவ்வொருவரும் இப்படியான ஒரு கனவு வரும் வரை காத்திருக்க வேண்டுமா என்ன!!
கடவுள் எனும் கோட்பாட்டிற்கு
நாத்திகத்தின் பதில் "இல்லை" -
அறிவியலின் பதில் "இருக்கலாம்" -
ஆன்மிகத்தின் பதில் "இருக்கிறது" -
இச்சிறுகதையின் முடிவு "தேடல் தேவையற்றது"
-நன்றி
பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன
-இவன்
ராஜ்குமார் ராஜதுரை aka RajiTalks
########
மனுநீதிசோழன் கனவு என உணர்ந்த பின் அமைக்கப்பட்ட எல்லா காட்சிகளும் என் சொந்த கனவு குறிப்புகளாதலால் சில
அறிவியல் ரீதியான முரண்கள் இருக்கலாம்!
முடிந்தால் அவைகளை நீங்களும் முயற்சிக்கவும்!
#####

கடவுளை வெறுமனே வெறுப்பது,
காரணமில்லாமல் மறுப்பது என்பதை மட்டுமே முற்போக்கு சிந்தனையாக எண்ணிக்கொண்டு,
தன்னை தானே பகுத்தறிவாளனாக
காட்டிக்கொள்ள முயற்சிக்கும் ஒரு முட்டாள் இளைஞன்..!
ஒவ்வொரு நாத்திகனுக்குள்ளேயும் இருக்கும் கடவுள் எனும் கோட்பாட்டின் இருப்பு சார்ந்த சிறு அச்சம்
அவனுக்குள்ளேயும் வந்ததன் காரணமோ என்னவோ,
கடவுள் அல்லது அதன் எதிர்வினையை
காண வேண்டுமென்ற ஒரு இனம்புரியாத ஆவல்,
அவனை கடவுள் என்ற விடையறியா/விடையில்லா ஒரு
தேடலை நோக்கி செலுத்தியது..!
தேடல் தொடங்கிய கருவிலேயே எழுந்த முதல் குழப்பமானது,
தான் தேடப்போவது இந்துமத கடவுளையா,
இஸ்லாமியமத கடவுளையா அல்லது
கிருஸ்தவ மத கடவுளையா என்பது..!
இந்த முதன்மை குழப்பத்தை தவிர்க்க,
மதம் சார்ந்த எல்லா புராண இதிகாச கட்டுகதைகளை மூட்டைக்கட்டி விட்டு,
இறுதியில் தான் காணப்போகும்
அல்லது
இல்லையென நிரூபிக்கப் போகும் கடவுளெனும் சக்தியானது
பூமி அண்டம் பேரண்டத்தில் இருக்கும் எந்த உயிரின கூட்டமைப்புகளின் மதத்தையும் சாதியையும் சாராதது என தனக்குள் சொல்லி முற்றுப்புள்ளி வைத்தான்.!
பிறகான அவனது தேடல் அறிவியலாக நீண்டது.!
பெரும்பாண்மை ஆத்திகர்களின்
கடவுள் இருப்பு வாதமானது,
அறிவியல் ரீதியாக கண்டுப்பிடிக்கப்படாத பிரபஞ்ச காரணங்களை சுட்டிக்காட்டுவது சார்ந்ததாகவே இருந்தது!!
மனிதனின் கண்களுக்கும் அறிவிற்க்கும் புலப்படும் மற்றும் புலப்படாத விஷயங்களில்,
அவிழ்க்கப்படாத முடிச்சுகளான சில மர்ம கேளிவிகளையும்,
அறிவியல் கேள்விகளுக்கு சம்மந்தமேயில்லாத அல்லது முரணான சில பதில்களையும்
தன் சின்னஞ்சிறு அறிவிற்கு
எட்டியவாறு வரிசையாக தொகுத்தான்..!!
தொகுத்த வரிசையின் படி ஒவ்வொரு கேள்வியின் சரியான மற்றும் திருப்தியான
இறுதி பதிலின் போதும் கடவுளை இருக்கிறது
அல்லது
இல்லையென நிரூபித்துவிடலாம் என்ற கோட்போடு,
அதை யார் கண்டுபிடித்ததோ.!
அதற்கு "மனுநீதி கேள்வி கோட்பாடு" என பெயர் சூட்டி
தொகுப்பின் முதல் சர்ச்சைக்குரிய கேள்வியான பூமி எப்படி உருவானதென்ற கேள்விக்கு பதிலை தேட தொடங்கினான்..!
பலப்பல அறிஞர்களும் விஞ்ஞானிகளும் தத்துவ மேதைகளும் அக்கேள்விக்கு
ஆளுக்கொரு பதிலாக சொல்லிச்செல்ல,
முதல் கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன்
முன்னோர்களால் சொல்லப்பட்ட கருத்துக்களில் சிலவற்றை ஆராய்ந்து புரியவே வருடம் ஐந்தாகி,
வயது இருபத்தைந்தானது!!
தேடல் நோக்கிய பயணத்தின் பாதை ஒருவழியானது தான் என்றாலும்,
ஒவ்வொரு புதிரும் ஒவ்வொரு கேள்வியும்
பலப்பல துனைக்கேள்விகள் கிளைக்கேள்விகள் என குட்டிப்போட்டு வட்டிப்போட்டு நட்சத்திர எண்ணிக்கைகளாயின..!
ஐந்து வருடகால முயற்சி புரிதல் தேடலுக்கு பின்,
மனுநீதி இன்னும் தொகுப்பின் முதல் கேள்விக்கே பதிலை தேடிக்கொண்டிருக்க,
பின்னே அணிவகுத்திருக்கும்
மற்ற 728கேள்விகளும் தங்களின் வீரியத்துக்கு தகுந்தாற்போல் ஆளுக்கு சில
வருடங்களை தனக்குள் கணக்கிட்டுக்கொண்டு,
எங்களை (கடவுளை) புரிய நீ இன்னும்
இரண்டாயிரத்து இருநூற்றி நான்கு வருடங்கள் தேட வேண்டுமென சொல்லி நக்கலாய் நகைத்தன..!!
இந்த முதல் கேள்வி(க்கே) பதிலை கண்டறிய மனுநீதிக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன..
ஒன்று
Quantum physics - Einstein theory என இதற்கு முன் சொல்லப்பட்ட 7846அறிஞர்களின் 67ஆயிரம் கருத்துக்களையும் படித்து அதில் ஏதோ ஒன்றை ஏற்க வேண்டும்..!
அல்லது இரண்டாவதானது,
அனைத்தையும் படித்து மறுத்து தானாக ஒரு பதிலை உருவாக்கியாக வேண்டும்..!
முதலாவதானதிற்கான வாய்ப்பு 50/50 சதவீதம்..!
அதாவது அதில் பூமி/பிரபஞ்ச உருவாவாக்கத்திற்கான அறிவியல்பூர்வமான ஏதோ ஒரு பதிலை ஏற்று, பிரபஞ்சம் சில அறிவியல் காரணங்களால்
உருவானதென சொல்லி
கடவுள் இல்லை என முடிக்கலாம்..
அல்லது
அதற்கு நேர் முரணான மற்றும் எதிர்மறையான பதிலை ஏற்று கடவுள் தான் இவையனைத்தையும் படைத்ததென
அர்த்தம் கொள்ளலாம்..!
எப்படியானாலும் தனக்கு திருப்திகரமான
பதிலை கண்டறிய இந்த சாமானிய இளைஞனுக்கு சில நூறு வருடங்கள் ஆகலாம்!!
அடிப்படையில் நாத்திகனாதலால் பெரும்பாலும் கடவுள் இல்லை என்பதை நோக்கியே அவன் தேடலும் இருந்தது..!
இவ்விதமான இந்த தேடல் ஆராய்சிகள்
நேரம் காலம் காணாமல் வருடக்கணக்கில் சென்றுக்கொண்டு இருக்க,
ஒரு சாதாரண நம் பக்கத்து வீட்டு இளைஞனின் தினசரி நடவடிக்கைகளாக அல்லாமல்,
அவனது வாழ்க்கை முறையானது
தேடல் என்ற ஒரு வரையறுக்கப்பட்ட
கோட்டின் மேலேயே பயணித்துக் கொண்டிருந்தது..!
தத்துவ காகிதங்களுடனும் அறிவியல் ஆராய்ச்சிகளுடனும் பல ஆண்டுகளுக்கு மேலாக குடித்தனம் நடத்தினான்!
இப்படியாகவே பத்து வருடங்கள் கடந்தன.!
அன்றொரு நாள்-செவ்வாய்கிழமை நல்லிரவு மணி தோராயமாக 1.30 இருக்கலாம்.!
படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டுக்கொண்டிருந்தான் மனுநீதி..!
திடீரென ஏதோ முணுமுணுத்த அவன் உள்ளுனர்வு எழுந்து தோட்டத்திற்கு வாவென அழைத்தது..!
போர்வையொன்றை எடுத்து போர்த்தியபடி வசீகரித்த பாதையில் நடந்தான்.!
நடக்கும் இந்த நேரத்தில் யார் தன்னை அழைத்ததென்ற கேள்வியும்,
எதற்காக நான் இந்நேரத்தில் இங்கே செல்ல வேண்டுமென்ற தயக்கமும்
அவனுக்கு ஒருபோதும் எழாமல் பார்த்துக்கொண்டது அந்த அழைப்பு.!
ஏதோ ஒரு கட்டளைக்கினங்க நடந்து வந்தவனை
தோட்டத்தில் இங்கே நிற்க வேண்டுமென ஒரு உள்ளுணர்வு சொல்ல,
ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் வந்து நின்றான் மனுநீதி..!
இதன்பின் இவன் காணப்போகும் காட்சிகளானது மனிதயினத்தில்
யாரும் இதுவரை கண்டிராத மற்றும் காண வாய்ப்புகள் கிடைத்திடாத சில விஷயங்கள்.!
ஆகாயம் நோக்கிய இரைச்சல் - அங்குமிங்குமாய் பறந்த ஒளிக்கீற்று..
பறந்து வந்த
சிகப்பு நிற பறக்கும் தட்டு ஒன்று
இருபதடி தூரத்தில் சத்தம் குறைத்து நின்றது..!
மனதில் குழப்பம்-மெல்லிய அதிர்ச்சி-கண்களில் பயம்-கால்களில் பதட்டம் என அனைத்து உணர்வுகளும் ஒரு சேர ஆட்கொள்ள,
அடுத்து நடக்கப்போவதை எண்ணிய ஆர்வம் பயத்தை ஓரங்கட்டி மனுநீதியை
அந்த தட்டை நோக்கி நடக்க செய்தது.!!
எட்டடி உயரம் - மனிதனை போன்ற ஒரு உருவம் - கருத்த உடல் - பெருத்த வயிரு - ஆணுமல்ல பெண்ணுமல்ல - காட்சிக்கு பிரம்மிப்பாய் ஒரு ஜந்து..!
ஒரு விஞ்ஞானி இதை ஏலியன் எனலாம் - பயமுறுத்தியிருந்தால் பேய் எனலாம் -
அரவணைத்துயிருந்தால் கடவுள் எனலாம்..!
மொத்தத்தில் இருபது கோடி ஆண்டுகளுக்கு பிறகு பரிணாம வளர்ச்சியடைந்த மனிதனோ அல்லது பூமியின் வேறு ஒரு மிருகமோ இப்படியாக காட்சியளிக்களாம்.!
எது எப்படியோ வெளியே வந்த அந்த உருவம் இந்த நடைமுறை உலகுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத ஒன்று..!
அதன் அருகே சென்ற மனுநீதிசோழன் திகைப்பிலிருந்து வெளிவரும் முன்னரே,
அடுத்த அதிர்ச்சியானது "என்ன பாத்து பயப்படாத மனுநீதி" என தன் கரகரத்த குரலில் தமிழில் பேசியது!
உனக்கு சில விஷயங்களை காட்டவே நான் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறேன் - எங்கிருந்து யாரால் எனும் கேள்விகளை விடுத்து என்னுடன் வாவென அழைத்தது..!
மனுநீதி அமைதியாக தலையாட்டி தன் ஓப்புதலை தெரிவிக்க, கைப்பிடித்து தோட்டத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து சென்றது அந்த ஜந்து..!
முதலாவதாக சென்ற இடமானது மனுநீதியின் வீட்டு படுக்கையறை..!
அங்கே தன் அழகிய மனைவியுடன் கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான் ஒரு முப்பத்தி ஐந்து வயது ஆண்.!
கலவியின் பிசுபிசுப்பில் கூட காதலையும் காமத்தையும் உணராமல்
அரைகுறை ஈடுபாட்டுடன்
இரண்டாம் நிலை சிந்தனையை வேறெங்கோ வைத்திருந்தான்.!
இவன் நானே தானென உணர்கிறான் மனுநீதி..
பார்க்க உன் போல் இருந்தாலும் இவன் நீயல்ல..! இது எதிர்காலமுமல்ல என கூறுகிறது ஜந்து..!
அதே கையோடு வாசலுக்கும் அழைத்துச் சென்றது.!
வாசலில் பத்து வயது சிறுமி ஒருத்தி வேகவேகமாய் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்..!
நாற்பது வயது மதிக்கத்தக்க அவளது தந்தையின் பெயரும் மனுநீதிசோழன் தானாம்.!
தனது பைக்கில் உட்கார்ந்து கொண்டு மகளை அழைக்க,
நான் அப்பா கூட ஸ்கூலுக்கு போக மாட்டேன்மா எல்லாரும் பைத்தியம்னு கிண்டல் பன்னுவாங்கவென தன் அம்மாவிடம் முறையிடுகிறாள் அந்த சிறுமி..!
பின்னே ஜந்துவுடன் நின்று இவையனைத்தையும் கவனித்த மனுநீதி இதைக்கேட்டு கொஞ்சம் ஆடித்தான் போயிருக்க வேண்டும்..!
இதன் பிறகு மூன்றாவதாக செல்லப்போகும் இடம் இதைவிட மோசமான காட்சியை காட்டிவிட கூடாதென மனதுக்குள் சொல்லிக்கொண்டான்..!
இதையடுத்து இருவரும் வீட்டின் மேல்மாடி அறைக்கு சென்றனர்..!!
அறுபது மீட்டர் நீளமுள்ள நீண்ட அறையது..!
அறையின் இரண்டு பக்கங்களிலும் கட்டு கட்டுகளாய் காகிதங்கள் அடுக்கியிருந்தன..!
காகிதங்கள் முழுவதும் சமன்பாடுகள் தத்துவங்களென நிறைந்திருந்தன..!
மட்டுமின்றி அந்த அறை காற்றையும் காகிதங்களையும் மட்டுமே தன்னகத்தே கொண்டிருந்தது!
தவிர வேறாரும் வேறேதும் இல்லை!!
ஏனோ அதில் எழுதியிருந்தது எதையும்
மனுநீதியால் படித்து புரிய முடியவில்லை..!
கையிலிருந்த காகிதங்களை தூக்கிப்போட்டு விட்டு அறுபது-எழுபது வயது தன்னை அந்த அறை முழுவதும் தேடினான்..!
பின்னர் அறையின் ஜன்னல் வழியே வெளியே எட்டி பார்க்க,
மனுநீதிசோழன் தோற்றம் மறைவு என எழுதப்பட்ட ஒரு கல்லறை
தோட்டத்தில் இருப்பதையும்
அவன் ஜாடையில் ஒரு பெண்ணும் ஆணும் அருகே அமர்ந்து அழுவதையும்
காண்கிறான்!
அது ஏதோ ஒரு வருட நினைவஞ்சலியாக இருக்க வேண்டுமென உணர்கிறான்!
நான் வந்த வேலை முடிந்தது - நீ பார்த்த இந்த காட்சிகள் யாவும் நடக்கலாம் நடக்காமலும் போகலாம் -
ஆனால் கண்டிப்பாக இது உன் எதிர்காலம் கிடையாது - அப்படி இருக்குமானால் அது நீயாக ஏற்படுத்திக்கொண்டது -
முற்று உன்கையில் என கூறி பறக்கும் தட்டுடன் பறந்தது அந்த ஜந்து..!!
நடந்து முடிந்த யாவும் ஓரிரு நிமிடத்தில் நடந்திருக்க வேண்டும் -
காகித வார்த்தைகளை என்னால் படிக்க முடியவில்லை - இந்த பயணம் தொடங்கிய இடமும் மறந்து போனது -
ஒவ்வொரு காட்சியிலும் நானே என் கண் முன் நிற்கிறேன்..!
இவையாவும் கனவா நனவாயென குழம்பிக்கொண்டான்..!
இது கனவாக இருப்பின் யாரோ ஒருவர் என்னை எழுப்பும் முன் நானே எழ வேண்டும் - யாராவது எழுப்புவார்களாயின்
கண்ட இந்த காட்சிகள் யாவும் 0.0002 நொடியில் எனக்கு மறந்து போகலாம்.!
இந்த கனவுக்குறிப்புகளை தக்கவைத்துக் கொள்ள,
தூக்கத்திலிருந்து தானே எழ முயற்சி செய்தான் மனுநீதி!
தனக்கு பழக்கப்பட்ட இடத்தில் இதுவரை செல்லாத இடமொன்று இருக்குமாயின் அங்கே போக முற்பட
கனவிலிருந்து
தூக்கத்திலிருந்து விடுபடலாம் என்பது
அவன் ஏற்கனவே பலமுறை பரிசோதித்துப் பார்த்த ஒரு
செயல்முறை ஆராய்ச்சி..!
சுற்றியும் முற்றியும் பார்க்க வீட்டின் பின்
மாட்டு கொட்டகை..
தன் வாழ்நாளில் இதுவரை பார்த்திராத
இடம் அது!
தன் வீட்டில் மாடுகள் இருந்ததாகவும் அவனுக்கு ஞாபகமில்லை!!
கண்ட காட்சிகள் யாவையும் மனதுக்குள் உருவகப்படுத்திக்கொண்டே வேகமாக
கொட்டகையை நோக்கி ஓடினான்!
அந்த கொட்டகையை நெருங்க நெருங்க கால் முட்டிகள் இரண்டும் பலமாக
வலித்தன!
கடிகாரமுள் சத்தமும் காற்றாடி சத்தமும்
அரக்கத்தனமாய் ஒலித்தன!!
பெருமூச்சு விட்டு படுக்கையிலிருந்து எழுந்தான் மனுநீதி!!
#மணி 2.15 - அருகிலிருந்த தினநாட்காட்டியில் திங்கள்கிழமை தாள் கிழிக்கப்படாமல் காற்றில் பறந்துக்கொண்டிருந்தது!!
எழுந்து அங்குமிங்கும் வீட்டினுள் கொஞ்ச நேரம் நடந்தான்!!
நடந்தவை யாவும் கனவுகளென புரிந்து ஐந்து நிமிடம் கழிந்து மூளைக்கு ஆறுதல் சொன்னான்!!
கனவில் வந்தது கடவுளாக இருக்குமோ என தனக்குள் சந்தேகம் கொண்டான்!!
பிரபஞ்சத்தின் ஒற்றை கேள்விக்கே பத்து வருடங்களாக திணறி பதில் கண்டுபிடிக்க முடியாத என்னால் எப்படி கடவுளை
பறக்கும் தட்டு, எட்டடி உயரமென
அவ்வளவு சுலபமாக வரையறுத்து விட முடியுமென கேட்டுக் கொண்டான்!!
கடவுளே வந்து நேரில் நின்றாலும்
இந்த சின்ன மனித மூளையால் அந்த சக்தியை-கோட்பாட்டை உணரவோ உருவகப்படுத்தவோ முடியுமாவென சந்தேகித்து
முடியாது வாய்ப்பில்லையென மறுத்தான்!!
இந்த பிரபஞ்சத்தின் ரகசியம்
மற்றும்
உருவான காரணமானது
எண் "49" என்பதை கடவுளே வந்து சொன்னாலும்
அந்த காரணம் மனித அறிவிற்கு எட்டுமா!!?
அல்லது
இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை புரியுமளவுக்கு மனிதயினமானது தான்
அறிவு-அறிவியல் ரீதியாக வளர்ச்சியடைந்து விட்டதா!!
இறுதியாக கண்ட கனவு காட்சிகள் யாவும் என்னால் உருவாக்கப்பட்டவையே!
அவை எனக்கு நானே சொல்லிக்கொண்ட அறிவுரைகள் என உணர்ந்தான் மனுநீதி!
வாழ்க்கைக்கான புரிதல் இறையிலோ
அல்லது அது சார்ந்த நம்பிக்கையிலோ இல்லையென்பதையும்,
அது நம்மை சுற்றியுள்ளவர்களோடு நாமானதாக தான் இருக்கிறதுவென
தான் உணர தான்
இந்த கனவு விளையாட்டு அரங்கேற்றப்பட்டதாக நம்பினான்!!
இந்த கனவின் பாதிப்பின் பின்னும் மனுநீதிசோழன்
தன் ஆராய்ச்சியை தொடரலாம் அல்லது கைவிடலாம்!!
ஆனால் கிடைத்த இந்த ஒரேயொரு வாழ்க்கை வாழ்வதற்காக தானே தவிர,
கண்டதை தேடி நேரம் வயது குடும்பம் சந்தோஷம் அனைத்தையும் விரயம் செய்து வீணடிக்கவல்லவென புரிய ஒவ்வொருவரும் இப்படியான ஒரு கனவு வரும் வரை காத்திருக்க வேண்டுமா என்ன!!
கடவுள் எனும் கோட்பாட்டிற்கு
நாத்திகத்தின் பதில் "இல்லை" -
அறிவியலின் பதில் "இருக்கலாம்" -
ஆன்மிகத்தின் பதில் "இருக்கிறது" -
இச்சிறுகதையின் முடிவு "தேடல் தேவையற்றது"
-நன்றி
பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன
-இவன்
ராஜ்குமார் ராஜதுரை aka RajiTalks
########
மனுநீதிசோழன் கனவு என உணர்ந்த பின் அமைக்கப்பட்ட எல்லா காட்சிகளும் என் சொந்த கனவு குறிப்புகளாதலால் சில
அறிவியல் ரீதியான முரண்கள் இருக்கலாம்!
முடிந்தால் அவைகளை நீங்களும் முயற்சிக்கவும்!
#####

எழுத்துகளில் மார்க்ஸீய வாசனை அதிகம் இருந்தாலும்...வயதுக்கு மீறிய சிந்தனை, தேடலின் புரிதலின் பரிமாணம்... பிரமிக்கத்தக்க வகையில் இருந்தது! அட்டகாசம்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமீண்டும் படிக்க தூண்டும்...வேண்டும்!
பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்கலாமே!
என்னையறியாமல் வெளிவரும் மார்க்சியத்தை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை! விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி சகோ! பத்திரிக்கைக்கு அனுப்புமளவு மதிக்கதக்கதா தெரியவில்லை! முடிந்தால் முயற்சிக்கிறேன்! :-)
Delete