அப்படி இங்கே சமுதாய பொறுப்புகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது தன்னை சுற்றி நடக்கும் அநீதிகளை எதிர்ப்பது போராட்ட போர்கொடி ஏந்துவது மாதிரியானவையல்ல...
சமூகம் சார்ந்த நம் ஒவ்வொருவரின் பார்வையையும் விசாலப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் பற்றிய பதிவே இது..
சமீபத்தில் படிக்க நேர்ந்த ஒரு புள்ளிவிவரம் என்னை மிகவும் அதிர்ச்சிக்கும் அவமானத்துக்குமுள்ளாக்கியது...!
National Crime Records
Bureau வெளியிட்ட அறிக்கையின்படி 2011ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் பதிவான பெண்கள் மீதான கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை 24,206
அவற்றில் தண்டனை கிடைத்தவை சுமார் 5,724 மட்டுமே...!

அதேபோல் 2010ல் பதிவானவை 22,172 அவற்றில் தண்டனை கொடுக்கப்பட்டவை 5,632...!
தண்டனைகள் முறையாக கிடைக்காததற்கு சட்டம் சார்ந்த பல்வேறு காரணங்களை முன் வைக்கலாம்..!
ஆனால் இத்தகைய தவறுகள் தினசரி நடப்பதன் காரணம் என்ன.?!!
ராசிபலன், வானிலை அறிக்கை,
தங்கம் வெள்ளி விலை நிலவரம்,
தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு,
மாதிரி
பெண்களின் மீதான வன்கொடுமை,
சிறுமியர் கற்பழிப்பு மாதிரியான செய்தியும் தினசரி நாளேடுகளிலும்
தொலைக்காட்சி செய்திகளிலும் தவறாது இடம் பிடித்துவிடுகிறது..!
கற்பழிப்புகளின் பிண்ணிகளாக பெண்களின் ஆடை, ஒழுக்கம் மாதிரியான
சிலவற்றை முன் வைப்பதற்கு முன்
தன் மீதான தவறுகளை
எண்ணி களைய யாரும் தயாரில்லை...!!
பெண்கள் பற்றிய நம்முடைய பார்வை இச்சமூகத்தினிடையே எத்தகையானதாக இருக்கிறது என்பதும் கேள்விக்குறிய விஷயமே..!
பெண் என்பவள் ஆணின் இச்சைக்கும் மற்றும் அதற்கு பின் குழந்தை பெற்றெடுக்கவும்,
வீட்டில் மட்டுமே ஒடுங்கிக்கிடக்கும்,
சதையும் ரத்தமுமடைய ஆண்டவனால்
படைக்கப்பட்ட ஒரு ஜீவனாக மட்டுமே
அனைவராலும் பார்க்கப்பட்ட காலங்களையும் தாண்டி,
இன்று பல்வேறு, கிட்டத்தட்ட எல்லா துறைகளிலுமேயே
அவர்கள் சாதித்துக்கொண்டிருந்தாலும்,
பெண் என்பவள் உடல் ரீதியாக ஆணை விட பலவீனமாவள்
என்ற
பெரும்பான்மையினரின் எண்ணங்களை இன்னும் மாற்ற தான் முடியவில்லை...!
இந்த எண்ணமே அந்த பெரும்பாண்மையினரின் பார்வையில் பெண் என்பவளை கேளிக்கைக்குரியவளென எண்ண வழிவகுக்கிறது..!
பாரதமாதா தமிழ்த்தாய் கங்கை காவிரி யமுனை என இந்தியாவுக்கும் இயற்கைக்கும் பெண்களின் பெயர்களை சூட்டி அழைக்கும் நாம் பெண்களை சரியாக நடத்துகிறோமா என்றால் இல்லை என்பதே நேர்மையான பதில்..
ஒரு மருந்தகத்தில் வாங்கிய நாப்கினை அப்பெண் பேப்பரிலோ கருப்பு பையிலோ சுற்றி கொண்டு செல்கிறாள்..
தீவிரவாதி வெடிகுண்டுகளை பாதுகாப்பது போல ஓளித்து கையாள்கிறாள் என்றால் அதற்கு யார் காரணம்.!?
இத்தகைய நேரங்களில் அவர்களது மனதில் செலுத்தப்படும் குற்றவுணர்ச்சி மற்றும் அவமானம் மாதிரியான தேவையற்ற சிந்தனைகளுக்கு காரணம் நம்மையன்றி யாரகவும் இருக்க முடியாது...?!!?
தும்மல், இருமல், பசி மாதிரியான பெண்ணின் ஒரு சாதாரண உடல்நிலை மாற்றம் அல்லது நிகழ்வை கூட சாதாரணமான ஒன்றாக ஏற்றுக்கொள்ள இந்த சமுதாயம் அதாவது நாம் தயாரில்லை..!
நிமிடத்திற்கு நான்கு நாப்கின் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டாளும்
இதை பற்றிய ஒரு தெளிவான முன்னோக்கு பார்வை சிந்தனை நம்மிடையே இல்லை..
புத்தகங்களில் இது பற்றிய பாடங்கள் இருந்தும் நடத்த முன் வராத அல்லது நடத்த விரும்பாத பள்ளிகளே தமிழகத்தில்/இந்தியாவில் அதிகம்...
மாதவிடாய் பற்றிய அறிவியல் சார்ந்த ஒரு விளக்கத்தை ஒரு முகநூல் பக்கத்தில் பதிவிக்கும் பட்சத்தில் கூட இத்தகைய
(கீழ்கண்ட) பதில்கள் வருகிறது என்றால்
சாதாரணமானவர்களின் பார்வையில் தான் பெண் என்பவள் யார்??

இன்னும் பலரின் பார்வையில் இது பற்றி பேசுவதும் கூட ஆபாசத்திற்குறிய
விஷயமாக தெரிவது வருத்தமளிக்கிறது..!
நாப்கின்கள் இல்லாத காலங்களில் கிழிக்கப்பட்ட கந்தல்கள் பயன்படுத்தப்பட்டதும்,
ஆண்கள் குழந்தைகள் என மற்றவர்களின் பார்வையிலிருந்து மறைக்க பெண்கள் பட்ட பாடு பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...
அந்த துணிகளை வெய்யிலில் கூட காய வைக்க கூடாதென்பது கூடுதல் மூடநம்பிக்கை...
பின் தங்கிய சில கிராமங்களில் இந்த அவலங்கள் இன்னும் நடப்பதாக கூட கேட்டதுண்டு..
அதற்கும் பின்னோக்கிய
காலங்களில் மாதவிடாய் நேரங்களில் தவிடுகளை பயன்படுத்தி நோய்வாய் பட்டு அவதிப்பட்ட/இறந்த பெண்களை பற்றி படித்திருக்கிறேன்...!
இது மாதிரியான பல கஷ்டங்களுக்கிடையே கடத்தப்படும் பெண்களின் மாதத்தின் அந்த மூன்று/இரண்டு நாட்களானது கண்டிப்பாக கேளிக்கைக்குரிய விஷயமாக பார்க்கப்பட வேண்டியதல்ல..!
இந்தியாவின் பல்வேறு தேவைகளில் இப்போதைய தேவை கண்டிப்பாக செக்ஸ் கல்வியாக இருக்கலாம்..!
நாப்கினை அல்லது விளம்பரங்களை பார்த்து இது என்னவென கேட்க்கும்
குழந்தைகளிடம் தெளிவான மற்றும்
தேவையான மட்டும் பதில்களை (வயசுக்கேற்ப)
அளிக்க வேண்டியது பெற்றோர்களாகியவர்களின் கடமை..
உண்மையாகவே ஆபாசமான விஷயங்கள் சில உண்டு எனில்,
அதை நீங்களே நியாயமாக விளக்கும்போது
சிறுவயதிலும் மற்றும் வளர்ந்த பிறகும் கூட அதை பற்றிய தொலைநோக்கு எண்ணம் அவர்களது மனதில் உருவாக்கப்பட்டிருக்கும்...!
Good touch, bad touch பற்றி
பெண் குழந்தைகளுக்கு
சொல்லிக்கொடுப்பதை விட
ஆண் குழந்தைகளுக்கு அதிகமாகவே சொல்லிக்கொடுங்கள்..
ஏனெனில் அதன் அவசியம் அவர்களுக்கு தான் உண்மையாகவே அதிகம்..!
கறாரான பெற்றோராய் இல்லாமல் பெண்/ஆண் இரு குழந்தைகளிடமும் அன்பாக பழகுங்கள்...
சமகாலத்தில் நிகழும் சராசரி சீண்டல்கள் பெரும்பாலும் ஆண்களுக்கு
பெண்கள் மீதான ஏளனம், குறுகிய பார்வை,
கேளிக்கை எண்ணம் மாதிரியனவையாலேயே என்பதை உணருங்கள்..
பெண்களை கைநீட்டுவது தவறென்பதையும், வன்கொடுமைகள் கூடாதென்பதையும் சிறிய வயதிலேயே அவர்களின் அபிமானத்திற்குறிய
பெற்றோர்களாகிய நீங்களே குழந்தைகளின் மனதில் ஆழமாக விதையுங்கள்..
மற்ற பெண்களை அடிக்கடி உங்களோடே நல்ல முறையில் ஒப்பிட்டு பேசுங்கள்..
தன் அம்மா தான் உலகிலேயே சிறந்த,
நல்ல பெண் எனும் ஒரு ஆண்குழந்தையின் எண்ணத்தை ஒட்டி அனைவருமே
அம்மாவைவிட
மற்றும்
அம்மாவை போல சிறந்த பெண்கள் என்பதை உணர வையுங்கள்...!
பள்ளியில் படிக்கும் சக தோழியிலிருந்து
காய்கறி விற்க வரும் பெண் வரை அனைவரையும் மதிக்க கற்றுக்கொடுங்கள்..
இச்சமுதாயத்திற்கு நம் பிள்ளையை ஒழுக்கமுடையதாக அளிக்க வேண்டியது பெற்றோர்களாகியவர்களின் கடமை..
அப்பிள்ளை ஆண்பிள்ளை எனில் உங்கள் பொறுப்பு ஒரு படி கூடுதலானதென அர்த்தம்..!
பெண்களின் மீதான மதிப்பு உயரும் போது அவர்களுக்கெதிரான
சீண்டல்களும் வன்கொடுமைகளும் குறையும் என்பதே உண்மை...!!
அம்மதிப்பை உருவாக்குவது பெற்றோர்களாகியவர்களின் உங்கள் கடமை..!
இனியாவது விழிப்பீர்..
-நன்றி


சமூக அக்கறை செறிந்த பதிவு. பெண்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் சேர்த்து விரிந்த சிந்தனை உங்களது.
ReplyDeleteமாதவிடாய் என்பது ஓர் இயல்பான "உயிரியல்" நிகழ்வு என்பதை.. குழந்தைகளுக்கு மட்டுமின்றி வளர்ந்தவர்களுக்கும் உணர்த்த வேண்டிய அவசியத்தை அழுத்தமாக அழகாக சொல்லியுள்ளீர்கள்.
அதேவேளை.. பெண்கள் தங்களைத் தாங்களே கவர்ச்சியாக/போகப்பொருளாக உடைகளின் வாயிலாக வெளிப்படுத்துவதை எவ்விதம் சரியென ஏற்பதென தெரியவில்லை.
எப்படி நோக்கினாலும் உங்களின் இப்பதிவு அக்கறையானது.. அதனால் அழகானது.. ஆகவே வரவேற்கப்பட வேண்டியது!
வாழ்த்துக்கள்!.
....
கோ.செந்தில்குமார்
நன்றி சகோ.. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்..கருத்து தவறுகளை சுட்டிகாட்டுங்கள்.. முடிந்தவரை வழிநடத்துங்கள்.. எழுத்து பிழைகளை மன்னியுங்கள்.. ;-) :-)
ReplyDeleteவரவேற்கப்பட வேண்டியது!
ReplyDeleteவாழ்த்துக்கள்!.
நன்றி சகோ.. தொடர்ந்து ஆதரவுங்கள்..
Delete