மங்காத்தாவின் ஒரு இன்டெர்வ்யூவின் போது வெங்கெட்பிரபு ஒருவரை அழைத்து,
இவன் என் அஸிஸ்ட்டன்ட்....இப்போ படம் பண்ணிட்டுருக்கான் தனியா... சின்சியரான பையன்... ஃப்யூச்சர்ல பெருசா வருவான் பாருங்க என்றபோது கிடைத்தது ரஞ்சித்துடனான எனது முதல் அறிமுகம்.
அதன் பிறகு 4-5மாதங்களில் அட்டகத்தி ரிலீஸ்.
இது மெட்ராஸா என பலரையும் வியப்படைய செய்யும் கதைக்களம்.
முதல் படத்திலேயே தமிழ் திரைப்படத் துறையின், எழுத்தாளர்களின் இயக்குநர்களின், பெரும்பாண்மை மக்களின்/ரசிகர்களின்
மெட்ராஸ் மற்றும் அதன்சார் ஜனங்களின் வாழ்வியல் சூழல் மீதான பார்வையை பெரிதாய் சாடியிறுந்தார்.
இத்தனை காலமாக ஒரு குறிப்பிட்ட பகுதிசார் பிரிவுசார் ஜனங்கள் மீதான தமிழ்சினிமாவின் காட்சி மற்றும் கதாப்பாத்திர சித்தரிப்பு & கட்டமைப்பு மீதான பெருங்கோபமது.
மதுரக்காரன் திருநெல்வேலிக்காரன்னா வீரனுங்க ரோஷக்காரனுங்க என்பது மாதிரியான கட்டமைப்புகளும்
வடசென்னை மக்கள் பொறுக்கிங்க பொண்ணுங்க மூஞ்சில ஆசிட் அடிக்கிறவனுக, 3வது 4வது கட்ட அடியாளுங்க என்பது மாதிரியான சித்தரிப்புகளும் 70-80களிலேயே வர தொடங்கிவிட்டன.
அந்த பார்வையை மாற்ற முயற்சித்து
நீங்க நினைக்கிற மாதிரி இல்ல....நாங்க வேற....என்பதை ஜாலியான ஒரு திரைக்கதையில் அழுத்தன உண்மைகளுடன் பிண்ணியிருப்பார் ரஞ்சித்.
அட்டகத்தியின் ரிலீஸுக்கு பிறகு
வெகுசில ரசிகள்களின் பார்வையில் மெட்ராஸ் வேறு மாதிரி தெரிந்திருக்கலாம்.
வடசென்னையும் அட்டகத்தியும் ஒரே நேரத்தில் எனக்கு அறிமுகமான விஷயங்கள் என்பதால்
பர்ஸ்னலாக அட்டகத்தி என் மனதிற்கு நெருக்கமான படமானது.
அதன்பிறகு மெட்ராஸ் பட ரிலீஸ்.
பரவலாக எல்லாத் தரப்பட்ட மக்களிடையேவும் பெரியதாய் பல்வேறு விதமாகவும் விமர்சிக்கப்பட்ட திரைப்படம். உயர்குலத்தை சேர்ந்த நாயகன் குழந்தையில் இடம் மாறி தாழ்த்தப்பட்டவனாக வளர்ந்து பின்
அதே உயர்குலத்தை எதிர்ப்பான் என்பது ஒரு டெம்ப்ளேட்.
இத்தனைக்கால தமிழ் சினிமாவில் அதிகபட்ச தாழ்த்தப்பட்டோரை ஆதரிப்பது மாதிரியான காட்சிகள் என்றால் அது,
கற்பழிக்கப்பட்ட பெண்ணிற்கு அந்த உயர்சாதியினனாக கருதப்படும் குற்றவாளியையே கல்யாணம் செய்து வைப்பது, பண்ணையார் பிறந்தநாளன்று அனைவரையும் வரிசையில் நிறுத்தி கோல்டன் பேப்பர் ஒட்டிய மிட்டாயை கைநிறைய அள்ளிக் கொடுப்பது, பந்தியில் அமர்த்தி சோறு போடுவது
மாடியிலிருந்து பணத்தை பொறுக்கிக்கோங்க என அள்ளி வீசுவது & வேட்டி சேலை தருவதாக மட்டுமே இருந்தது.
அதோடு பல எஜமான்களின் காலடி மண்ணெடுத்து பூசிக்கொள்வதையும்
நாயகன் வண்டி வருவதை கண்டு துண்டை எடுத்து அக்குளில் சொறுகிக்கொள்வதையும் நாயகன் பெரும் மரியாதைக்குரியவனென சொல்கையில் அதை நாம் ஆர்கசமாகி ரசித்துக்கொண்டிருந்த அதே காலத்தில்
இரணியன் மாதிரியான தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக குரலெழுப்பும் அதே சாதியை சார்ந்த நாயகன் மாதிரியான படங்களும் அவ்வபோது அத்தி பூத்தாற்போல் வந்தது.
இந்த டெம்ப்ளேட்டுகளின் வெகுகால இடைவெளிக்கு பின் வந்த மெட்ராஸ் பலரையும் கவர காரணமிருந்தது.
கதைப்படி நாயகனான அன்பு கேரக்டரின் அறிமுக காட்சியிலேயே,
அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதிலேயே நம்ம ஜனங்களின் வெற்றியும் முன்னேற்றமும் இருக்கு எனக் கூறுவதோடு
அன்புவை சார்ந்த பிற கேரக்டர்களையும் அதே பாதையிலேயே பயணிக்க செய்திருப்பார் ரஞ்சித்.
மக்களை புரட்சியெனும் பெயரில் கலகத்திற்குட்படுத்தி சண்டையிட்டு சாவதெனும் சிந்தனையை தவிர்த்து
அரசியல் அதிகாரத்தை பிடிக்கவேண்டுமென்பதையும்
கற்பித்து தம் மக்களை
உயர்குலமாக தம்மை எண்ணிக்கொள்வோர்க்கு சமமான இடத்தில் அமர்த்த வேண்டுமென்பதையும் அது தான் உண்மையான புரட்சியென்பதையும் கூறியிருப்பார். உரிமை கேட்டு பெறுவதல்ல எடுத்துக்கொள்வது.
இப்போதைய சூழலில்
அதை கல்வியால் மட்டுமே எடுத்துக்கொள்ள முடியுமென்பதை அன்பு கேரக்டர் பெரிதாய் பிரதிபலித்தாலும்
அடக்குமுறைக்கெதிரான குரலையும் சுவர்சார் பிரச்சனைகளின் வழியாக அவ்வபோது எழுப்பிக்கொண்டிருக்கும்.
இதில் காளி கையாளும் வன்முறை கூட நண்பன் மீதான பாசத்தில் உணர்ச்சிவசப்பட்டு நடப்பதாகவே காட்டப்பட்டிருக்குமே தவிர
அதில் சாதிய வன்மம் எங்குமிருக்காது.
ஒவ்வொரு வன்முறை காட்சியும் (காளி கண்ணனை தாக்க செல்வது தவிர, அதுவும் அன்புவின் பிரிவு காரணமான விரக்தியினாலேயே தான் இருக்கும்) தாக்க வருபவர்களிடமிருந்து தற்காத்துக்கொள்ள திருப்பியடிப்பதாக மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும்.
மாரியின் துரோகம் அறிந்தவுடனும் கூட தாக்காமல் அவனை அரசியலிலிருந்து அகற்றி அநாதையாக்க வேண்டுமென்றே சொல்வான் காளி.
மெட்ராஸை பொறுத்தவரை க்ளைமேக்ஸை சுவற்றில் பெயின்ட் ஊற்றுவதோடு முடித்திருக்கலாமென்பது மட்டும் உறுத்தல்.
கமர்ஷியலிசத்திற்காக க்ளைமேக்ஸ் சண்டைகாட்சி தேவையற்றதாக தோண்றியது.
கண்டிப்பாக இது அடக்குமுறைக்கு எதிரான ஒரு படம் தான்..
மற்றபடி மெட்ராஸ் தலித்திய பெருமை பேசுவதாக கூறுபவர்கள் இதில் பெருமை என்பது எது, எதை சார்ந்தது என்பதை விளங்கிக்கொண்டு எனக்கும் விளக்கினால் நன்றாக இருக்கும்.
போ அங்க.... அடங்கி போறதெல்லாம் அந்த காலம் என்பது மாதிரியான வசனங்களை துணை பாத்திரங்களை பேச வைத்த ரஞ்சித் ரஜினியை எப்படி கையாண்டிருப்பார் என்ற பயம் டீசர் ரிலீசின்போதே பலருக்கும் இருந்தது.
தலித்தியம் பேசுபவராக, அவர்களில் ஒருவராக மட்டுமே ரஞ்சித்தை தமக்குள் ரிஜிஸ்டர் செய்துவிட்டவர்களுக்கு மத்தியில் எனக்கு அவர் அடக்குமுறைக்கு எதிரானவர் எனும் வகையறாவில் தான் தெரிந்தார்.
மெட்ராஸிலும் அட்டக்கத்தியிலும் நான் கவனித்தது அப்படியொரு கோவக்காரனையும் கலகக்காரனையும் தான்.
மலேசியவாழ் தமிழர்களின் மீதான அடக்குமுறைக்கு எதிரான படம் கபாலி.
100% இது ரஞ்சித்தின் ஏரியா தான்.
ப்ளாட்ஃபாம் இது தான்.
அதை தான் ஒரு கம்யூனிசவாதியாக பொறுப்பேற்று அதற்கான வேலையை செய்திருக்கவேண்டும் ரஞ்சித்.
ஆனால் மக்களின் தம் மீதான எதிர்பார்ப்பு என்னவென்பதை அறிந்திருந்ததாலோ என்வோ ஏற்பட்ட சறுக்கல் தான் திரைக்கதையை சொதப்பியிருக்கிறது.
கூடுதலாக ரஜினியெனும் கமர்ஷியல் ஜெய்ன்ட்டை உருவகப்படுத்த
தமக்குள் கட்டுப்படுத்த எடுத்த முயற்சி சின்னதாய் சறுக்கியிருக்கிறது.
கதையோட்டத்தில் ஆங்காங்கே திணிக்கப்பட்ட தேவையற்ற வசனங்களும் காட்சியமைப்புகளும் கதைப்போக்கை சலனப்படுத்தியிருக்கிறது.
பாடல்கள் ரிலீசாகி அனைவராலும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தபோது எனக்கு
வரிகளெல்லாம் ஏனோ மெட்ராஸ் படத்திற்கு முரணாகவே தெரிந்தது.
நிச்சயம் இரண்டும் வெவ்வேறு கதைக்களம் கொண்ட படங்கள் தானெனினும்
வன்முறை அரசியலில் ஆர்வமில்லாதவராக நான் நினைத்துக் கொண்டிருந்த ஒருவர்
இவ்வளவு அடிதடியான வரிகளை பாடல்களில் புகுத்தியிருப்பது ஆச்சர்யமளித்தது.
மெட்ராஸோடு ஒப்பிட்டு பார்த்ததில்
ஆரம்ப காட்சியில் வரும் சண்டை ரஜினியிசத்திற்கானதென்றும்
க்ளைமேக்ஸ் சண்டை காட்சி கமர்ஷியலிசத்திற்கானதென்றும் புரிந்துக்கொள்ள முடிந்தது.
குமுதவள்ளியை சுடுவதற்கு பின்னாலான சண்டைகாட்சி கூட எமோஷனல் டேமிற்கு கீழே தான் வருகிறது.
ஆளுமையை அழிக்கும் புரட்சியென்றால்
வில்லனில் முழு நெட்வர்க்கையும் அழித்ததோடு மட்டும் நிறுத்தியிருக்கலாம் தான்.
ஆனால் அங்கே வேலை செய்த ரஜினியிசம் தான் க்ளைமேக்ஸ் வன்முறையை கையிலெடுத்திருக்கிறது.
கோட்டு போடுவதற்கு காரணம் சொல்வதிலும்
வில்லன் அதை கழட்ட சொல்வதிலும் மறைமுக காரணம் சொல்லியிருந்தாலே நாங்கள் விளங்கியிருப்போம். அதை நேரடியாக சொல்லியது கதைக்கு ஒப்பாக படவில்லையே தவிர சொல்லக்கூடாத விஷயமெல்லாம் கிடையாது இது.
மற்றபடி ரஞ்சித் தமக்குள் எந்த சமாதானமும் செய்துக்கொள்ளாமல் சொல்ல வந்ததை சொல்லியிருக்கிறாரா என்றால் கிட்டதட்ட......
கண்டிப்பாக ரஜினி கரியரில் இது ஒரு முக்கியமான க்ளாஸிக் எமோஷனல் ட்ராமா,
ரஞ்சித்துக்கு ஏற்பட்ட சிறு சறுக்கல்.
மீண்டு(ம்) வரவாரென நிச்சயம் நம்புகிறேன்.
இன்ன சாதியிலிருந்து எல்லாத்தரப்பட்ட மக்களுக்கும் பொதுவாக போராடிய உதவிகள் செய்த தலைவர்களையே சாதிய அரிதாரம் பூசுவதை வழக்கமாக கொண்ட நம் மக்கள், சந்தானம் கஞ்சாகருப்பு வரலாற்றை கூட தேடி பிடித்து போஸ்டர்களில் சாதிப்பெயரை மேற்கோள் காட்டும் மனநிலையில் தான் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஆயிரமாயிரமாண்டு காலமாக அடிமைப்படுத்தப்பட்டு கிடந்த ஜனங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த
தன்மானத்துடன் வாழ வழிவகைச் செய்த ஒருவர்
அதே பிரிவை சாராதவர் என்றாலும் கூட
பலனடைந்த குறிப்பிட்ட பிரிவு ஜனங்களால் கண்டிப்பாக கொண்டாடப்பட வேண்டியவர் தான் என்பதில் ஐயமில்லை.
அதை சாதியமாக எடுத்துக்கொண்டாலும் சரி
நன்றியாக எடுத்துக்கொண்டாலும் சரி.
தேவர் காலடி மண்ணே என்பதும், எஜமான் காலடி மண்ணெடுத்து என்பதும் சாதியம் தான்,
மக்களின் வெற்றி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதிலேயே உள்ளது என்பதும் சாதியம் தான்.
ஆனால் இது இரண்டையும் ஒருசேர் சமநிலை நேர்கோட்டில் வைத்துப் பார்க்கும் மனநிலையை தான் நான் எண்ணி வியக்கிறேன்!!
அடங்குடா என கத்துபவன் சத்தத்தையும்
குட்டு வாங்கியவன் வலியால் கத்தும் சத்தத்தையும் கூச்சல் என்று பொதுவாக எப்படி இவர்களால் சொல்லிவிட முடிகிறது என்பது ஆச்சரியமே!
இந்த கோபம் தான் வசனங்களில் ஆங்காங்கே அம்பேத்கரை புகுத்தியிருப்பதாக பார்க்கிறேன்.
காட்சிகளில் அம்பேத்கர் எனும் வசனம் வருவதையே
தலித்தியமாக எண்ணினால் சாதி ஒழிந்துவிட்டதாக தான் உங்களால் எப்படி சொல்லி விட முடியும்.
அதை தாண்டி அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவதில் உங்களுக்கு வரும் கோவத்தின் காரணம் தான் என்ன?
அப்படியொரு கோபம் வந்தாலும் சரி அதை தான் இவர்கள் விறும்பவும் செய்கிறார்கள்.
இவர்களில் ஒருவன் வெறும் இயக்குநனாக வளர்ந்துவிட்டதை கூட சகித்துக்கொள்ள முடியாமல் தான் எத்தனை வெளிப்படையான சாதிய காழ்ப்புகள்!!
(நிற்க கபாலியை எதிர்ப்பவர் "அனைவரையும்" இதன்கீழ் கொண்டு வர நான் விறுப்பவில்லை)
###படத்த வெறும் படமா மட்டும் பாருங்கடா என குரூப்பு வரும்.... அவர்களுக்கும் ஒரு சின்ன பதிலை சொல்லி முடித்துக்கொள்கிறேன்.
இந்தியாவை பொறுத்த வரை இங்கு யாரும் திரைப்படத்தை வெறும் படமாக மட்டும் பார்ப்பதில்லை.
இங்கு ஆட்சியை மாற்றியது சினிமா.
புரட்சிகள் பல செய்தது சினிமா.
தமிழக அரசியல் கட்சிகளை சார்ந்த பெரும்பாண்மை அரசியல்வாதிகள் சினிமாக்காரர்கள்.
நாட்டுக்கு நான் நல்லது செய்ய ஆசைப்படுறேன் அதனால படம் நடிச்சு பெரியாளாகி கட்சி தொடங்கனும்ங்கறது ஆசை என நீயாநானாவில் ஒருவன் சொல்கிறான் என்றால் சினிமா என்பது அரசியலுக்கான ஒரு அடிப்படை தகுதியாகிவிட்டது.
மக்களும் அவர்களை தான் தலைவனாக குடும்பத்தில் ஒருவனாக பார்க்கின்றனர்.
சினிமாவையும் அடிப்படை வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்க தெரிந்தோர் வெகுசிலரே.!
இவர்களுக்கு மத்தியில் சினிமாவை ஜஸ்ட் லைக் தட் என எடுத்துக்கொண்டு போய்விட முடியாது என்பதே உண்மை!!
-ராஜ்குமார் @RajiTalks