Monday, November 9, 2015

கருப்புக் குடை

தொலைதூரப் பயணம் என்றாலே பலருக்கும் அதில் ஒரு எக்சைட்மெண்ட்!
அதிலும் மாதங்கள் கழித்து சொந்த ஊர் செல்லும்போது
நம்மூர் நீர்மூழ்கி கப்பல்களில் (அதாங்க விழாப்பேருந்துனு ஓட்டஉடைசலுகள விட்டு அநியாய காசு புடுங்குவாங்களே) செல்வதை மட்டும் தவிர்த்து விட்டாலோ
அந்த பயணமே ஒரு வகையான கிளுகிளுப்பாகவே இருக்கும்!

அப்படியொரு கிளுகிளுப்புடன் தான் சென்னையிலிருந்து சிதம்பரம் வந்து இறங்கினேன்!
விடியற்காலை மழைத்தூரல்
ஏஆர்.ரகுமான் இளையராஜா இசை
கலர்கலர் காலேஜ் ஃபிகர்ஸ்
நாயர் கடை சமோசா போண்டா என 100RT கவிதைக்கு தகுதியான
அத்தனை பொருத்தங்களும் கூடிய
மிதமான மழை
சூப்பர் க்ளைமேட்!

டிவைன் மொமண்ட்ஸை ரசித்துக்கொண்டே
4-5
சீர்காழி பேருந்துகளையும் தவற விட்டாகியது!

பரபரப்புடன் ஓடிவந்த ஒருவர் எவ்வளவு நேரம் தம்பி இங்க நிப்பீங்க என்றார்!
பைய ஏதும் பாத்துக்க சொல்லுவாரோ என பயந்துக்கொண்டே (ஆமா பேசிக்கலி அம சோம்பேறி)
இல்லணே கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன் என்றேன்!

ஒரு அண்ணன் தங்கச்சிய கைய காட்டி,
இல்ல அவங்க 2பேரும் கண்ணு தெரியாதவங்க... ஹெல்ப் கேட்டாங்க...கொஞ்சம் பரங்கிப்பேட்டை பஸ் ஏத்திவிட்டுடுறீங்களா எனக்கு கடைய திறக்க நேரமாச்சு ப்ளீஸ் என்றார்...

நாம தான் உதவினு கேட்டா உள்ள போட்டிருக்குற அன்ட்ராயர் வரை அவுத்து கொடுக்குற பரம்பரையாச்சே
மட்டுமில்லாம யாரோ ஒருத்தருக்காக யார்ணே தெரியாத என்கிட்ட மூனாவது மனுஷன் அவர்
ப்ளீஸ் கேட்டு கெஞ்சமுடியும்னா,
அவங்கள பஸ் ஏத்தி விடுறது நமக்கு ஒரு பெரிய விஷயமா இருக்காதேனு நினைச்சு
சரிணே நீ போ என்றேன்!

பக்கதில் நின்றுக்கொண்டிருந்தபோது
அவர்கள் பேசுவதை கவனிக்க முடிந்தது!
அண்ணன் தங்கை உறவுக்குள் அத்தனை வாடா போடா காதல்!

என்றோ ஒரு நாள் நம்மிடம்
சாலை கடக்க உதவி கேட்பவர்
கண்ணாடி அணிந்து குச்சி ஊண்றி குத்துமதிப்பாக நடப்பவர் வாழ்கை கருப்பு நிறங்களால் மட்டுமே சூழப்பட்டது
என இத்தனை நாட்கள் தவறாக தான் புரிந்துக் கொண்டிருந்திருக்கிறேன்!
(இத்தனைக்கும் குக்கூ படத்தை பார்த்து சிலிர்த்து சில்லரைகளையெல்லாம் சிதறியிருக்கிறோம்!)

அவர்கள் போக வேண்டிய
பேருந்து வந்து நிற்க குடைக்கு இருவரையும் அழைத்துக்கொண்டு பேருந்துக்கு நடந்தேன்!

உக்காந்துட்டியா விசாரிப்புகளுடன் கையில் காசு கொடுக்கும் போது தான் தெரிந்தது
அவர் தங்கை மட்டும் தான் அதில் போகிறார் என்று!
பாப்பா மட்டும் தான் பஸ்ல போறா நான் சேலம் போகனும் என்ன அங்கேயே விட்டுடுங்க நான் பாத்துக்குறேன் என்றார்!

அட சண்டாளா...அதுக்கு சொல்லிருந்தா உன்ன அங்கேயே விட்டுட்டு நானே இந்த புள்ளைய பஸ் ஏத்தி விட்டுருப்பேனே என நினைத்தாலும் அவர்களுக்குள் இருந்த அந்த ரிலேஷன்ஷிப் ப்ரொடக்ஷன்
&
3rd பர்சன் அன்பிலீவ்நஸ் நன்றாக புரிந்தது!
சரி வாயா என பேசிக்கொண்டே திரும்பி நடந்தோம்!

என்னப்பா எங்கிருந்து வர!?

சென்னைணே நீங்க!?

நானும் தான்...சரி சென்னைல நமக்கென்ன வேலை!?

நானும் பாப்பாவும் படிக்கிறோம்ணே நந்தனம் ஆட்ஸ் காலேஜ்ல லீவுக்கு வந்தோம் என்றே ஓரமாக வந்து நின்றோம்!

நான் அவரை கூட்டிக்கொண்டு அங்குமிங்கும் நடப்பதை பார்த்து என் மீது ரொம்பவும் அக்கரை கொண்ட அந்த டீக்கடை ஓனர் என்னை அழைத்து
ஏன் தம்பி இந்த மழைல அந்த குருட்டுப்பயள கூட்டிட்டு அங்கயிங்க அலையிறிங்க!? எங்கேயாவது கூத்தாட போற பயளுகளுக்கு என்ன அவசரம் ம்ம் என்றார்!!

இல்லணே அவங்க அப்டியில்ல.... காலேஜ்லாம் படிக்கிறாங்க என்றேன்!

அடுத்து அவர் சொன்ன
ஆமா இதுங்கலாம் காலேஜ் படிச்சி என்னத்த சாதிக்கப் போகுதுக!?
நாட்டயா காப்பாத்த போகுதுக ஹிஹிஹி என்ற ஏளனப்பேச்சு என்னையே நக்கலடித்ததை போன்ற உணர்வுடன் ஒருவித கேவலமான உணர்வை அளித்தது!!

மெதுவாக சிரித்துக்கொண்டே!!
கடைலாம் பெருஸ்ஸாருக்கு என்னணே படிச்சிருக்கீங்க என்றேன்!
ஒன்பதாவது தம்பி என்றார்!
2கை கால் கண்ணு நல்லாருக்குற நாம படிச்சது எட்டாப்பு!
ஆனா அவங்க டிகிரி படிக்கிறாங்க பாத்தீங்களா!
இத விட சாதிக்க வேற என்ன இருக்கு நினைக்கிறீங்க அவங்களுக்கு என்றேன்!

பதில் பேச்சே இல்லை!

அந்த ஈயாடல் முகத்தை 10நிமிடமாவது ரசிக்கவேண்டும் என நினைத்தாலும்
டீக்கடைக்காரராச்சே
கடுப்புல சுடுதண்ணிய ஏதும் மோந்து மூஞ்சில ஊத்திடப்போறாயென பயந்து இடத்தை காலி பண்ணி ஓடி வந்தேன்!

நடைப்போக்கில் நம்மிடத்தில் ஒரு சின்ன பாதிப்பை ஏற்படுத்திவிட்டு போகும் சம்பவங்கள் பலவற்றையும் தினசரியோ அல்லது எப்போதாவதோ கடந்திருப்போம்!
அது மாதிரியான என்னது ஒரு குட்டி சம்பவம் தான் இது!
அதற்காக
பதிவின் முடிவில்
கண்ணு தெரியாதவங்களுக்கு உதவி செய்ங்க
ரோடு க்ராஸ் பண்ணி விடுங்க
கூத்தாடி பிச்சைக்காரன் போன்ற
தப்பான பார்வைல அவங்கள பாக்காதீங்க என அட்வைஸ் செய்வதை விட
வீட்டுல முறுக்கு சுடுறது
அதிரசம் சாப்பிடுறது போன்ற உங்கள் பிசியான நேரத்திலும்
இம்புட்டு நீளமான பதிவை தம் கட்டி நிதானமாக படித்ததற்கு உங்களுக்கு நன்றி மட்டுமே சொல்ல வேண்டும் என தோண்றுகிறது!
:-D
மிக்க நன்றி - தீபாவளி வாழ்த்துக்கள் :-D
-ராஜ்குமார் ராஜதுரை @RajiTalks