Sunday, December 27, 2015

பூலோகம் - A Lesson

வாழ்க்கையை வேறு வழியில் திசை திருப்பி விட்ட ஒருவர் எஸ்.பி.ஜனநாதன்.
5வருடத்திற்கு பிறகு ரிலீசாகும் படமாதலால் மற்றவர்களை விட புறம்போக்கு மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் கடைசியில் ஒரு டாக்குமெண்டரியை அளித்து ஏமாற்றியிருந்தார்.
அதே சமயம் ஜனநாதன் வசனம் அவரின் உதவியாளர் இயக்கமென்பதாலேயே
பல நாட்கள் கிடப்பில் கிடந்தாலும் பூலோகம் பற்றிய எதிர்பார்ப்பும் கொஞ்சமும் குறையாதிருந்தது!

எல்லா வளங்களும் இருந்தும் அவற்றை சரியாக பயன்படுத்திக்கொள்ள தெரியாமல் சீப்பு ஷாம்ப்பு முதல் கார் டிவி வரை வெளிநாட்டிடம் கையேந்திக்கொண்டிருக்கும் வளர்ந்து வரும் நாடு இந்தியா.

மக்கள்த்தொகையில் இங்கே ஏழைகள் ஏராளம் - உளகலாவிய Global marketகள் கடை விரித்து வியாபாரம் செய்ய இது ஒரு ஏதுவான மிகப்பெரிய பொருளாதார சந்தை!

இத்தகைய சந்தையில் தங்கள் குப்பைகளை விற்றுதுதள்ள இந்தியர்களின் மிகப்பெரிய சொத்தான சுயமரியாதை & பேராசைகளை சின்னதாய் தூண்டி விடுவது மட்டுமே இந்த வியாபாரிகளுக்கு போதுமானதாக இருந்தது!

இந்தியாவில் முதன்முதலில் குடிநீரை பாட்டில் போட்டு விற்ற நிருவனம் தனது விளம்பரப்படத்தில் ஒரு கழிவறையையும் தனது ப்ராண்டையும் காட்டி நீங்கள் எதை குடிக்கப்போகிறீர்கள் என விளம்பரப்படுத்தியது!
முக&சரும சிகப்பழகு க்ரீம்களுக்கான விளம்பரப்படம் இதை பயன்படுத்தினால் ஆறே வாரத்தில் சிகப்பழகு என்றது!

கொதிக்க வைத்த நீரை குடிப்பதை விட எங்கள் purified packed water சுத்தமானது என நிரூபிப்பதற்கு பதிலாக வாட்டர் பாட்டில்களை ஒரு status symbolலாக ஆக்கியது நிருவனங்கள்!
பயன்படுத்தினால் 6வாரத்தில் சிகப்பழகாகலாம் என்பதை நிரூபிப்பதற்கு பதிலாக சிகப்பாயிருப்பதையே அழகு & கௌரவம் என நம்மை
நம்ப வைப்பது வியாபாரிகளுக்கு சுலபமாயிருந்தது!!
90களின் ஆரம்பத்தில் இந்தியாவில் நடந்த உலகலாவிய தொலைக்காட்சி விற்பனை புரட்சிகளெல்லாம்
தற்கால விளம்பர வியாபாரத்திற்கான ஆளுமைகளின் விதைகள் என்பது கற்பனையல்ல!

ஒரு சாதாரண குளியல் சோப்பை விற்பதற்காக பொருளாதார அடியாட்களின் வாயிலாக பிரதமர் முதல்வர் மந்திரி என நம்ம ஏரியா கவுண்சிலர் வரை நடக்கும் பிரம்மாண்ட வியாபர ஊழலானது கண்டிப்பாக சாமாணியனின் கற்பனைக்கு சற்றும் எட்டாதது!
அத்தகைய ஊழலை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு திரையில் காட்டிய ஒரு பாடம் தான் பூலோகம்!


பாக்ஸிங் பரம்பரையை சேர்ந்த இருவர் சண்டையிட
பூலோகத்தின் அப்பா போட்டியில் தோற்கிறார்,
தோல்வி அவமானத்தில் தற்கொலை செய்துக்கொள்கிறார்.
பரம்பரை போட்டியாக வளரும் பகையில்
அப்பாவை தோற்கடித்தவர் மகனான ஆறுமுகத்தை ரிங்கிலேயே நாக்அவ்ட் செய்ய வேண்டும் என்பது பூலோகத்திற்குள் வெறியாக வளர்கிறது!

20வருடங்களுக்கு பிறகு ரிங்கிலிரங்கும் இருவரின் வாரிசுகளின் போட்டியை ஒளிபரப்ப முயளும் டிவி சேனல்
ஆளுமை முதலைகளுடன் இணைந்து நடத்தும் பிரம்மாண்ட விளம்பர வியாபாரம்
திரைக்கதையாகியிருக்கிறது!

தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க துடிக்கும் மகனென்பது பழைய கதையானாலும்
(அதுவும் இப்படத்தில் ஒரு தொடக்கம் மட்டுமே)
பாக்ஸிங் என்றதும் ஏற்கனவே ஒரு போட்டியில் ஏமாற்றப்பட்ட குரு கதாநாயகனை ட்ரெய்ன் செய்து அவனை வெற்றி பெற செய்யும் அரத பழசான கதையை கையிலெடுக்காமல் இருந்தது மிகமுதல் ஆறுதல்!

100வருட பாரம்பரியம் 20வருட பகை என
திரையின் உள் மற்றும் வெளியில் இருக்கும் இருதரப்பு ஆடியன்ஸையும் ஆர்வமூட்டினாலும்
பின்னணி அரசியலையும் கதை நகரப்போகும் போக்கையும்
100கார் விக்கிறத விட
10000 ஷாம்பு விக்கிறது தான்டா மிகப்பெரிய லாபம்*
சீயக்கா போட்டு குளிச்சவன் தலைலயெல்லாம் சோப்ப போட்டு தேய்ச்சவன்டா நான்*
மாடிவீட்டுக்காரன விட குடிசைகள் தான் நம்ம டார்கெட்-அங்கிருந்து தான் புடுங்கனும்*
மாதிரியான வியாபார குறிக்கோள்கள்களை கதாப்பாத்திரத்தின் வசனங்களின் மூலம் எதார்த்தம் மீறாமல் சுட்டிக்காட்டியிருப்பது நேர்த்தி! #ஜனநாதன் அப்லாஸ்

பாக்ஸிங் கதாபாத்திரங்கள் இரண்டு மிகப்பெரும் பாக்ஸிங் க்ளப்புகளை சேர்ந்தவர்களென்றல்லாமல்
நம்ம காசிமேடு ராயபுரம் ஏரியா பசங்க என தொடக்கியிருப்பதும்
நம் கண் மறைவில் நடக்கும் வியாபார அரசியல் யாவும் நம் & பக்கத்து வீடுகள் என சாமாணியனின் குடிசையிலேயே தொடங்குகிறது என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு!

டோர்னமெண்ட்டில் ஆமுமுகத்தை தோற்கடித்த பூலோகம் சட்டென மனம் மாறுவதும்
(போருல செத்தவங்கள பாத்து துறவியா போன அசோகர் கதையெல்லாம் படிச்சிருந்தாலும்....அசோகரா...அக்பரா....)
வெட்ட வந்த ஆறுமுகம் நண்பர்கள் உபதேசம் கேட்டு திருந்துவதும் மட்டும் கொஞ்சம் எதார்த்தம் மீறல்! அங்கங்க கொஞ்சம் க்ளம்ஸி!

அடுத்த கட்டமாக இந்திய சேம்பியனோடு போட்டியிட மறுக்கும் பூலோகத்தை திரும்பவும் ரிங்குக்கு இழுக்க சேனல் செய்யும் அத்தனை சூழ்ச்சிகளும் நாம் தினசரி பார்க்கும் ஏதோ ஒரு ரியாலிட்டி ஷோவையே சுட்டி காட்டுவதை போன்ற உணர்வு!
ஷோவை சென்சேஷனல் ஆக்குவதற்காக
சேனல் எடுக்கும் முயற்சி
எனக்கு நடிக்க தெரியாதுங்க மாதிரியான சரித்திர நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகின்றன.
அதையே படத்தின் எழுத்தாளரும் விரும்பியிருக்கலாம் அப்படி செய்திருந்தால் அவர்கள் முயற்சி வெற்றி!

2ரூபாய் காகிதத்தை வாங்க செய்ய
"தமிழக" மீனவர் கைது,
"தலித்" பெண் கற்பழிப்பு,
தேசிய கீதத்தின் போது எழுந்து நிற்காத "இஸ்லாமிய" குடும்பம் போன்ற மேற்கோள் வார்த்தைகளையும்
சாலை விபத்தில்
லாரி டுமீலு டிரைவர் பனாலு என்பது போன்ற ரைமிங் வார்த்தைகளையும் அடுக்கும் செய்தித்தாள்கள் நமக்கு ஏற்கனவே பழக்கப்பட்டிருந்தாலும் கூட
ரசிகர்களை அதிகரிக்க செய்ய மேற்கொள்ளப்படும்
வெள்ளப்போவது தமிழனா அல்லது வடஇந்தியனா என்பது போன்று மறைமுகமாக விதைக்கபபடும் உணர்வுகள்
( முதலில் சொன்ன வியாபாரத்திற்காக மக்களின் கௌரவத்தை அவதாவது மொழியுணர்வை சீண்டிவிடும் உக்தி)
விளையாட்டுகளுக்கு தமிழுணர்வை வெறியாயூட்டி ரசிகர்களை எமோஷனல் கஸ்டமர்ஸ் ஆக்கிகொண்டிருக்கும் IPL, CCL, ISL வியாபாரிகளின் உக்தி என்பது
விளையாடுவது தமிழனாக தோணியோ அஷ்வினோ அல்ல வியாபாரிகளின் கைக்கூலிகள் என எப்போதாவது ஒரு நாள் மக்களுக்கு புலப்பட வேண்டுமென்பது இயக்குநரின் எதிர்பார்ப்பாக தெரிகிறது!

அதையும் தாண்டி வியாபாரிகளின் விளையாட்டுகளோட கலந்திருக்கும் பெட்டிங் கலாச்சாரம் கிளை நிழல் உலகம்.

தேவையற்ற செண்ட்டிமெண்ட்களை தவிர்த்தல்
வசனங்களை காட்சிகளாய் திணிக்காமல்
மக்களின் மனநிலையறிந்து திரைக்கதை அமைத்தது பெரிய ப்ளஸ் & வசனங்கள் திரைக்கதையை தாங்கி நிற்கும் தூண்கள்!

போட்டிக்கான ஒப்பந்தம் போடும் காட்சியில் சேனலுடனான பூலோகத்தின் உரையாடல் மீடியாவிற்கு கொடுத்த செருப்படி-பலியாடுகளின் மைண்டு வாய்ஸ்!

ஒவ்வொரு சுற்றிலும் நாயகனே வெல்வாரென பார்வையாளர்கள் அறிந்திருந்தாலும்
ஒவ்வொரு சுற்றையும் கொண்டு போன விதம் அருமை!
இண்டெர்வெலுக்கு முன் பூலோகத்தை சேனல் ரிங்கில் ஏற செய்யும் காட்சி ச்ச்ச சம்மல ரகம்!
4ரூபா வியாபாரத்திற்காக முதலாளி வர்கம் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போகும் என்பதை பல ஃப்ரேம்களில் காட்சிப்படுத்தியிருப்பது அட்டகாசம்!

பிரிவுசார் திருமண வீடுகளின் கலாச்சாரத்தை திரையில் காட்டிக்கொண்டிருந்ததை தாண்டி
சாவு வீட்டு கலாச்சாரத்தை காட்டுவது தமிழ்சினிமா திரைக்கதையில் எதார்த்தத்தை கூட்டுகிறது என்பது புரிகிறது!

படத்தில் அதிகம் கவர்ந்த மற்றுமொரு விஷயம் படத்தின் க்ளைமேக்ஸ்!
4வது சுற்றில் என்னவாகப்போகிறது என்பதை இயக்குநர் அதன் முதல் காட்சியேலே சொல்லிவிட்டாலும் ஜார்ஜுடனான முதல் 3சுற்றுகளை கொண்டு போன விதம் போரடிக்கவில்லை!

பாக்ஸிங் என்றால் முதல் 9ரவுண்டில் நாயகன் நாயடி பேயடி வாங்கி குருதிப்புனல் கமலாக கிடந்து திடீரென கடைசி ரவுண்டில் வெறியேறி எதிராளை அடித்து வீழ்த்துவது,
பக்கத்தில் நின்று அவனை விடாத அடி என உசுப்பேத்தும் நாயகி,
அடிபட்ட நாயகனின் மாஸ்ட்டரை கொலை செய்ய முயற்சிப்பது,
அமெரிக்கனிடம் போட்டியிடுவதால் சுத்தி நின்று ஜெய்ஹிந் சொல்லும் மும்மத ஆடியன்ஸ் என வரும் அனைத்து Nonsenseகளும் Avoided என்பதை எதிர்பார்க்கவேயில்லை-சந்தோஷம்!
சண்டையின்போதே இடையிடையே பூலோகம் கொடுக்கும் கவுண்ட்டர் வசனங்கள் ரியாலிட்டி ஷோக்களின் பித்தலாட்டாங்களுக்கு கொடுக்கப்பட்ட காமெடி கலந்த செருப்படி!

பாக்ஸிங்கில் ஹிஸ்ட்ரி டெக்னிக் ஸ்டேடஜி என இயக்குநர் அதிகம் கற்றிருப்பது காட்சி அமைப்பிலேயே தெரிகிறது!
Sports தெரிந்தவர் பார்க்கும்போது திரைப்படமாக தெரியாமல் ப்ரொஃபஷ்னல் மேட்சாகவே தெரியும்!

பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை பிஜிஎம் குட்,
ஆர்டிஸ்ட் செலக்ஷன், ஆர்ட், கேமரா, எடிட்டிங் சூப்பர்!
வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ரிலீசாகி பார்வையாளர்களை சந்தோஷப்படுத்திவிட்டு கடந்துப் போகும் சாதாரண கமர்ஷியல் திரைப்படமாக இல்லாமல் பார்ப்பவர் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு பாதிப்பை இப்படம் கண்டிப்பாக ஏற்படுத்தும்!

உள்நாட்டு அரசியல் ரீதியாக அடுத்த இந்தோனேசியா ஆவதற்கான எல்லா தகுதிகளும் உடைய நாடு இந்தியா என்பதை நன்கு அறிந்து கடை விரித்துக்கொண்டிருக்கும் Global marketகளின் உலகமயமாதல் சூழ்ச்சியறிந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டுமொரு முயற்சி இது!

ஜனநாதன், ராம்கோபால் வர்மா, பா.ரஞ்சித் வரிசையில் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பை எப்போதும் ஏற்படுத்தும் இயக்குநர் வரிசையில் இப்போது கல்யாணகிருஷ்ணனும் இனைந்தது மகிழ்ச்சி!


120கோடி பொதுமக்களை வெறும் நுகர்வாளர்காளாக மட்டுமே பார்க்கும்
முதலாளிகளின் வியாபார நிழல்களை வெயிலூட்டினாலும்
அதையும் கமர்ஷியல் படமாக்கி வியாபாரித்தவர் பற்றி என்னை நினைக்க வைத்ததே பூலோகத்தின் மிகப்பெரும் வெற்றி! :-D

கண்டிப்பா தியேட்டர்கள்ல பாக்க தவறிடாதீங்க!!

ராஜ்குமார் @RajiTalks

Monday, November 9, 2015

கருப்புக் குடை

தொலைதூரப் பயணம் என்றாலே பலருக்கும் அதில் ஒரு எக்சைட்மெண்ட்!
அதிலும் மாதங்கள் கழித்து சொந்த ஊர் செல்லும்போது
நம்மூர் நீர்மூழ்கி கப்பல்களில் (அதாங்க விழாப்பேருந்துனு ஓட்டஉடைசலுகள விட்டு அநியாய காசு புடுங்குவாங்களே) செல்வதை மட்டும் தவிர்த்து விட்டாலோ
அந்த பயணமே ஒரு வகையான கிளுகிளுப்பாகவே இருக்கும்!

அப்படியொரு கிளுகிளுப்புடன் தான் சென்னையிலிருந்து சிதம்பரம் வந்து இறங்கினேன்!
விடியற்காலை மழைத்தூரல்
ஏஆர்.ரகுமான் இளையராஜா இசை
கலர்கலர் காலேஜ் ஃபிகர்ஸ்
நாயர் கடை சமோசா போண்டா என 100RT கவிதைக்கு தகுதியான
அத்தனை பொருத்தங்களும் கூடிய
மிதமான மழை
சூப்பர் க்ளைமேட்!

டிவைன் மொமண்ட்ஸை ரசித்துக்கொண்டே
4-5
சீர்காழி பேருந்துகளையும் தவற விட்டாகியது!

பரபரப்புடன் ஓடிவந்த ஒருவர் எவ்வளவு நேரம் தம்பி இங்க நிப்பீங்க என்றார்!
பைய ஏதும் பாத்துக்க சொல்லுவாரோ என பயந்துக்கொண்டே (ஆமா பேசிக்கலி அம சோம்பேறி)
இல்லணே கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன் என்றேன்!

ஒரு அண்ணன் தங்கச்சிய கைய காட்டி,
இல்ல அவங்க 2பேரும் கண்ணு தெரியாதவங்க... ஹெல்ப் கேட்டாங்க...கொஞ்சம் பரங்கிப்பேட்டை பஸ் ஏத்திவிட்டுடுறீங்களா எனக்கு கடைய திறக்க நேரமாச்சு ப்ளீஸ் என்றார்...

நாம தான் உதவினு கேட்டா உள்ள போட்டிருக்குற அன்ட்ராயர் வரை அவுத்து கொடுக்குற பரம்பரையாச்சே
மட்டுமில்லாம யாரோ ஒருத்தருக்காக யார்ணே தெரியாத என்கிட்ட மூனாவது மனுஷன் அவர்
ப்ளீஸ் கேட்டு கெஞ்சமுடியும்னா,
அவங்கள பஸ் ஏத்தி விடுறது நமக்கு ஒரு பெரிய விஷயமா இருக்காதேனு நினைச்சு
சரிணே நீ போ என்றேன்!

பக்கதில் நின்றுக்கொண்டிருந்தபோது
அவர்கள் பேசுவதை கவனிக்க முடிந்தது!
அண்ணன் தங்கை உறவுக்குள் அத்தனை வாடா போடா காதல்!

என்றோ ஒரு நாள் நம்மிடம்
சாலை கடக்க உதவி கேட்பவர்
கண்ணாடி அணிந்து குச்சி ஊண்றி குத்துமதிப்பாக நடப்பவர் வாழ்கை கருப்பு நிறங்களால் மட்டுமே சூழப்பட்டது
என இத்தனை நாட்கள் தவறாக தான் புரிந்துக் கொண்டிருந்திருக்கிறேன்!
(இத்தனைக்கும் குக்கூ படத்தை பார்த்து சிலிர்த்து சில்லரைகளையெல்லாம் சிதறியிருக்கிறோம்!)

அவர்கள் போக வேண்டிய
பேருந்து வந்து நிற்க குடைக்கு இருவரையும் அழைத்துக்கொண்டு பேருந்துக்கு நடந்தேன்!

உக்காந்துட்டியா விசாரிப்புகளுடன் கையில் காசு கொடுக்கும் போது தான் தெரிந்தது
அவர் தங்கை மட்டும் தான் அதில் போகிறார் என்று!
பாப்பா மட்டும் தான் பஸ்ல போறா நான் சேலம் போகனும் என்ன அங்கேயே விட்டுடுங்க நான் பாத்துக்குறேன் என்றார்!

அட சண்டாளா...அதுக்கு சொல்லிருந்தா உன்ன அங்கேயே விட்டுட்டு நானே இந்த புள்ளைய பஸ் ஏத்தி விட்டுருப்பேனே என நினைத்தாலும் அவர்களுக்குள் இருந்த அந்த ரிலேஷன்ஷிப் ப்ரொடக்ஷன்
&
3rd பர்சன் அன்பிலீவ்நஸ் நன்றாக புரிந்தது!
சரி வாயா என பேசிக்கொண்டே திரும்பி நடந்தோம்!

என்னப்பா எங்கிருந்து வர!?

சென்னைணே நீங்க!?

நானும் தான்...சரி சென்னைல நமக்கென்ன வேலை!?

நானும் பாப்பாவும் படிக்கிறோம்ணே நந்தனம் ஆட்ஸ் காலேஜ்ல லீவுக்கு வந்தோம் என்றே ஓரமாக வந்து நின்றோம்!

நான் அவரை கூட்டிக்கொண்டு அங்குமிங்கும் நடப்பதை பார்த்து என் மீது ரொம்பவும் அக்கரை கொண்ட அந்த டீக்கடை ஓனர் என்னை அழைத்து
ஏன் தம்பி இந்த மழைல அந்த குருட்டுப்பயள கூட்டிட்டு அங்கயிங்க அலையிறிங்க!? எங்கேயாவது கூத்தாட போற பயளுகளுக்கு என்ன அவசரம் ம்ம் என்றார்!!

இல்லணே அவங்க அப்டியில்ல.... காலேஜ்லாம் படிக்கிறாங்க என்றேன்!

அடுத்து அவர் சொன்ன
ஆமா இதுங்கலாம் காலேஜ் படிச்சி என்னத்த சாதிக்கப் போகுதுக!?
நாட்டயா காப்பாத்த போகுதுக ஹிஹிஹி என்ற ஏளனப்பேச்சு என்னையே நக்கலடித்ததை போன்ற உணர்வுடன் ஒருவித கேவலமான உணர்வை அளித்தது!!

மெதுவாக சிரித்துக்கொண்டே!!
கடைலாம் பெருஸ்ஸாருக்கு என்னணே படிச்சிருக்கீங்க என்றேன்!
ஒன்பதாவது தம்பி என்றார்!
2கை கால் கண்ணு நல்லாருக்குற நாம படிச்சது எட்டாப்பு!
ஆனா அவங்க டிகிரி படிக்கிறாங்க பாத்தீங்களா!
இத விட சாதிக்க வேற என்ன இருக்கு நினைக்கிறீங்க அவங்களுக்கு என்றேன்!

பதில் பேச்சே இல்லை!

அந்த ஈயாடல் முகத்தை 10நிமிடமாவது ரசிக்கவேண்டும் என நினைத்தாலும்
டீக்கடைக்காரராச்சே
கடுப்புல சுடுதண்ணிய ஏதும் மோந்து மூஞ்சில ஊத்திடப்போறாயென பயந்து இடத்தை காலி பண்ணி ஓடி வந்தேன்!

நடைப்போக்கில் நம்மிடத்தில் ஒரு சின்ன பாதிப்பை ஏற்படுத்திவிட்டு போகும் சம்பவங்கள் பலவற்றையும் தினசரியோ அல்லது எப்போதாவதோ கடந்திருப்போம்!
அது மாதிரியான என்னது ஒரு குட்டி சம்பவம் தான் இது!
அதற்காக
பதிவின் முடிவில்
கண்ணு தெரியாதவங்களுக்கு உதவி செய்ங்க
ரோடு க்ராஸ் பண்ணி விடுங்க
கூத்தாடி பிச்சைக்காரன் போன்ற
தப்பான பார்வைல அவங்கள பாக்காதீங்க என அட்வைஸ் செய்வதை விட
வீட்டுல முறுக்கு சுடுறது
அதிரசம் சாப்பிடுறது போன்ற உங்கள் பிசியான நேரத்திலும்
இம்புட்டு நீளமான பதிவை தம் கட்டி நிதானமாக படித்ததற்கு உங்களுக்கு நன்றி மட்டுமே சொல்ல வேண்டும் என தோண்றுகிறது!
:-D
மிக்க நன்றி - தீபாவளி வாழ்த்துக்கள் :-D
-ராஜ்குமார் ராஜதுரை @RajiTalks

Saturday, February 28, 2015

கனா காணும் காலங்கள் - ver ராஜ்குமார்

நம் ஒவ்வொருவரின் பள்ளிப்பருவ மனதும் ஒருகாலத்தில்
ஏதேதோ சினிமாக்களைப் பார்த்து பற்பல ஆசைகளை
தன் எதிர்கால கல்லூரி வாழ்க்கை மேல் வளர்த்து வைத்திருந்திருக்கும்!

அப்போது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை,
இப்போது வெறுத்துக்கொண்டிருக்கும்
இந்த பள்ளி வாழ்க்கை ஞாபகங்களை தான்
நாம் எதிர்காலத்தில்
நினைத்து ஏங்கி/புன்னகைத்து அசைபோட்டுக்கொண்டிருக்கப் போகிறோம் என்று..

-முதல் காதல்
-கணக்கு வாத்தியாரின் பிரம்பு
-பள்ளி சைக்கிள் ஸ்டாண்டு
-கையில் காம்ப்பஸ் குத்து
-திருடி சாப்பிட்ட தோழியின் புளிச்சாதம்
-சாப்பிட்டுவிட்டு அவளிடம் வாங்கிய திட்டு
-பேப்பர் திருத்திக் கொடுத்த தமிழ் டீச்சர்
-Annual dayல் நடனம் ஆடிய பாடல்
-பேச்சுப் போட்டியில் வாங்கிய பரிசு
-ஆண்டு விடுமுறை மாமா வீடு என
இன்றளவும் நம் அனைவரது ஞாபகத்திலும்
இப்படி ஏதோ ஒரு சம்பவம் வந்து ஊசலாடிக்கொண்டிருக்கும்!

அப்படிப்பட்ட ஏதோ ஒரு ஞாபகம் தான் என்னுடைய இந்த பதிவு!

இவர்களது செய்கைகளை அதிகப்பிரசங்கித்தனம் - குறும்பு - சேட்டை என இந்த ஏதோ ஒரு பெயரில் கண்டிப்பாக
அழைக்கலாம்..

வகுப்பில் 100 மாணவர்கள் இருந்தாலும்
ஏதோ ஒரு கேங் மட்டும்
(வேற யாரு நானும் என் தோஸ்த்ங்களும் தான்)
செய்தது மட்டுமல்லாமல் செய்யாத குறும்புகளுக்கும் நந்தா லொடுக்கு பாண்டியாகி தண்டனை வாங்கி சந்தோஷப்படும்!

இங்கே சேட்டைகளுக்கு வாங்கிய ஒவ்வொரு தண்டனையும் ஒவ்வொரு மெடல் மாதிரி!
வாங்கிய தண்டனைகளை பொறுத்து
அது கோல்டு மெடலா
அல்லது
சில்வர் மெடலா என கேங் கூட்டு ஆலோசனையில் விவாதிக்கப்பட்டு பின் கூடி அனைவராலும் சிலாகித்துக் கொண்டாடப்படும்!

குடியரசுதினவிழா நாளன்று காலை கொடி கம்பத்தை உடைத்தது,
பிடிக்காத P.E.Tயின் ஸ்கூட்டி சைலன்சரில்
பேப்பர் அடைத்தது,
தீபாவளிக்கு மிஞ்சிய பட்டாசை கொண்டு வந்து பள்ளி இடத்தின் தர்மகர்த்தா சமாதியில் வைத்து வெடித்து ஒரு பக்கம் சுவரை கீழே சரித்தது,
தமிழ் மிஸ் சைக்கிள் ட்யூபை காம்பஸால்
சல்லடையாக்கியது,
பிரின்சிபால் அறையை திறந்து எக்சாம் கொஸ்ட்டின் பேப்பரை நகலெடுத்து திருடியது
(பின்னாள்ல நண்பன் படம் பார்த்து இது எங்க கதைனு ஹிரானி மேல
கேஸ் போடலாமானு யோசிச்சேன் - என் பேரு வெச்ச ஆளுங்கறதால அப்புறம்
மன்னிச்சுட்டேன்)
என்பது ஒரு நீளமான லிஸ்ட்!!

இவற்றில் மெடல் வாங்கிய சேட்டைகளை விட, வாங்காமல் லாவகமாய் எஸ்கேப் ஆன சேட்டைகளே அதிகம்!
(எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும்ங்கற வடிவேலு அண்ணனோட வார்த்தைய கரெக்ட்டா ஃபாலோ பண்ணுறவங்களாக்கும் நாங்க)

அப்படி வாங்கிய
ஒரு கோல்டு மெடலை பற்றி தான் கீழே சொல்லியிருக்கிறேன்! :-)

படித்தது அப்போது பத்தாம் வகுப்பு!
எங்கள் அனைவரையும் ஒன்பதாம் வகுப்பிலிருந்தே எப்படா இந்த லெசன் எடுப்பாங்க என ஆர்வமாக காத்திருக்க வைத்த ZOOLOGYன் மூன்றாவது LESSON..

ஆண்-பெண் என எல்லா(ருடையதையும்)வற்றையும் படம் போட்டு விளாவரியாக விளக்கியிருக்கும்
அந்த 160 பக்கம் கொண்ட
HUMAN REPRODUCTIVE SYSTEM என்ற தலைப்பு!

ஏனோதானோ என
நடத்தப்பட்டிருந்த அந்த பாடத்தில் ஏதோ ஒரு கேள்விக்கான பதிலை
மனப்பாடம் செய்துக்கொண்டிருந்த போது
வகுப்பில் ஒரு மாணவி மட்டும்
அனுமதி வாங்கிக்கொண்டு பாதியில் வீட்டுக்கு கிளம்பினாள்!

வழக்கத்துக்கு மாறாக நடந்த இந்த சம்பத்திற்கான காரணம் என்னவாக இருக்குமென ஒவ்வொருவரும் இப்டியிருக்குமோ அப்டியிருக்குமோயென
கூட்டுவிவாதம் செய்து கொண்டிருந்தோம்!

எங்கள் கேங்கில் உள்ள ஏதோ ஒரு அதிமேதாவி மட்டும் கரெக்ட்டான காரணத்தை எப்படியோ கேர்ள்ஸ் பெஞ்ச்களிலிருந்து வழக்கமாக கவ்வி வந்து விடுவான்!

அப்படி தான் இதற்கான பதிலும் வந்து சேர்ந்தது!

டேய் அந்த பொண்ணுக்கு இன்னிக்கு பீரியட்ஸ்டா அதான் வீட்டுக்கு போயிட்டா
என BREAKING NEWSஐ பரப்ப,
எங்களுக்குள் ஏதேதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தோம்!

கேங்கில் ஒரு அதிமேதாவி இருந்தால்
வழக்கமாக ஒன்றும் தெரியாத ஒரு மொக்க பீசும் இருக்க வேண்டும் என்பது UNIVERSAL FACT.
(ஆனா நான் மட்டும் ரெண்டும் கெட்டானான அரகொற)
அப்படி ஒருவன் தான் என் ஆருயிர் நண்பன் கார்த்திக்.

மேத்ஸ் மிஸ் ட்ரிக்னாமென்ட்ரியின்
ஏதோ ஒரு பிரச்சனைக்கான
தீர்வை போர்டில் தேடிக்கொண்டிருக்க,
எங்களை தீர்த்து கட்டுவதற்கான ஏற்பாடு கார்த்தியால் தொடங்கப்பட்டது!

ஏதுமே தெரியாத அந்த 5அடி குழந்தை
6கட்ட குரலில் பீரியட்ஸ்னா என்னடாயென
கேள்வியெழுப்பியது!

பேம்ப்பர்ஸ் விளம்பரத்தையும்
ஸ்டேஃப்ரி விளம்பரத்தையும் ஒப்பிட்டு பார்த்திருந்ததில்
அந்த உன்னத துறையில் எனக்கு ஏற்கனவே கொஞ்சம் பொது அறிவு இருந்திருந்தது!
இதில் இவன் ஏகலைவன்!

ஆனால் ஏனோ அந்த விவரங்களை அவனுடன் பகிர்ந்துக்கொள்ள நான் விரும்பவில்லை!
இவற்றைப் பற்றி பேசுவதே பொறுக்கித்தனம் என்ற எண்ணம் என்னுள் இருந்திருந்தது!

அப்புறம் பேசிக்கலாம் க்ளாச கவனிடாயென காதை கிள்ளி தலையில் கொட்டி உட்கார வைத்தேன்!

ஆனால் க்ளாசுக்கே தெரிந்த கிசுகிசு பற்றி தனக்கு தெரியவில்லையே என்ற ஆதங்கம்
அவனை சும்மா விடுவதாகயில்லை!

எங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டு பதில் கிடைக்காத கடுப்பில்
அவனது நெருங்கிய தோழியான ஒருத்தியிடம் போய் அப்டினா என்னவென கேட்க......
(பாவம் அந்த பொண்ணு பாவம் எந்த கடுப்புல இருந்துச்சோ)
உங்க அம்மா கிட்ட போய் கேளுடானு சொல்லிட்டு போயிடுச்சு!

இதன் பிறகு அவனை அழைத்து அப்டினா இதுதான்டா என எனக்கு தெரிந்த அரைகுறை அறிவியலை விளக்க,
பையன் கண்ணுல தண்ணி..!

கண்ணில் தேம்பிய கண்ணீர் கருவளையத்தை க்ராஸ் செய்வதற்குள்
க்ளாஸுக்குள் நுழைந்த ப்யூன்
எங்கள் கேங் ஆறு பேருடைய பெயரையும் சத்தமாய் வாசித்து ப்ரின்சிபால் கூப்டாருப்பா என அழைத்தார்!

க்ளாசுக்கும் ப்ரின்சிபால் ரூமிற்கும் இடையேயிருக்கும் 21படிகளை இறங்குவதற்குள் ஒவ்வொருவனின் கைகால்களும் பயத்தில் பரதநாட்டியம் ஆடின!

இருபது நிமிஷம் - குய்யோ முய்யோவென கத்துவற்கு வாயை மட்டும் விட்டுவிட்டு ஆறு பேர்
பாடியில் இருக்கும் ஐம்புலன்களையும் பாரபட்சமின்றி பதம் பார்த்தது P.E.Tயின் பிரம்பு!

அடுத்த இருபது நிமிஷத்தை தனக்காக வாங்க்கொண்ட ப்ரின்சிபால்
மம்மி பாவம்...நோநோ..டாடி பாவம் டாடி பாவம் என
கதறுமளவிற்கு காதிலேயே கழுவி ஊத்தினார்!

குத்துயிரும் கொலையுயிருமாய் ரெண்டு கால்களில் போன நாங்கள்
நான்கு கால்களில் தவழ்ந்துக்கொண்டே திரும்பினால் ZOOLOGY மிஸ் - தி வில்லன் என்ட்ரி!!
நான் எதிர்பார்க்காத ஒன்று..
அங்கே நடந்துவிடக் கூடாதென பயந்த ஒன்று!


நான் மட்டும் சீலிங்கை பார்க்க,
ஃப்ளாஷ்பேக் கொசுவர்த்தி 360டிகிரியில் நான்கு சுற்று சுற்றியது!
#ஒரு வாரத்திற்கு முன்

அதே க்ளாஸ்ரூமுக்கு வந்த ZOOLOGY மிஸ்
HUMAN REPRODUCTION SYSTEM LESSON எடுக்க மாட்டேன் நீங்களே தான் படிச்சுக்கனும் என்றார்!

அதெப்டி முடியும்!? அந்த HRS லெசன் என்பது எங்கள் ஒரு வருஷ கனவாயிற்றே!

எத்தனை கசமுசா கனவுகளை வளர்த்திருந்திப்போம்!
எத்தனை கதைகளை கிசுகிசுத்திருப்போம்!!

குபீரென கோபம் கொப்பளித்து
மனசாட்சி கொஞ்சம் சத்தமாக கொக்கரிக்க
அதெல்லாம் எங்களால மனப்பாடம் பண்ண முடியாது மிஸ் - நீங்க எடுங்க இல்லனா
நான் போலீஸ கூப்டுவேன் என அதுஇதுஎது ராமர் வாய்சில்
ப்ரின்சிபால் கிட்ட போவேன் என
கத்தினேன்!

கோட்டு கோபி வைத்து தீர்க்கவேண்டிய அளவிற்கு டெவலப் ஆன இந்த நீயாநானா சண்டை
நாட்டாமை சரத்குமாரான ஸ்கூல் ப்ரின்சிபாலிடம் போக
அவரும் எங்களுக்கு சாதகமாக
அந்த லெசன எடுத்துடுங்க மேடம் என ஆர்டர் போட்டார்!

ஒருவழியான அந்த மிஸ்ஸும்
தொட்டும் தொடாமல்
பட்டும் படாமல்
புரிந்தும் சுத்தமாக புரியாமல்
(இது தான் மேண்டில் - இதுலருந்து தான் பளீர்னு வெளிச்சம் வரும் என்பது போன்ற விளக்கம் கூட இல்லாமல் க்ர்ர்ர்ர்)
நேரா போய் லெஃப்ட்ல திரும்புங்க என பக்கத்து தெருவிற்கு வழி சொல்வது போல்
பக்கத்துக்கு ரெண்டு வரியென
அரைமணிநேரத்தில் மொத்த லெசனையும் கடமைக்கு வாசித்து முடித்தார்!

அடேய்!! இது என்ன மாதிரி லெசனு!!
எப்படி நடத்த வேண்டிய டாபிக்கு என அடிமனதில் ஒரு ஆதங்கம்!

(இருந்தாலும் இந்த சம்பவத்துக்கு அப்புறம்தான் மத்த பசங்கயெல்லாம்
என்ன ஒரு டான் போல பாத்து,
அரபேகானோ பாட்ட போட்டு கைல முத்தம் கொடுக்க ஆரம்பிச்சானுங்க - சில பொண்ணுங்களும் இதுல உண்டு ஹிஹி)

ப்ளாஷ்பேக்கிலிருந்து நான் வெளியே வர,
இந்த ஈகோ யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர
இத்தருணத்தை பயன்படுத்திக்கொண்ட கயல்விழி மிஸ்
இவங்களையெல்லாம் சும்மா விட கூடாது சார்,
பேரண்ட்ஸ கூப்டுங்கு என்றார்!
(அதே அதுஇதுஎது ராமர் வாய்சில் போலிசை கூப்பிடுவேன் தான்)

இப்போதான் ஒவ்வொருத்தனுக்கும் உள்ள விட்டுச்சு அள்ளு!!
இது மாதிரியான விஷயங்கள் சேட்டையில் சேராது என எனக்கே தெரியும்!
எங்கப்பாவுக்கு தெரிந்தால் நான் அவர் பிள்ளையே இல்லையென எழுதி கொடுத்துடுவாரு -
எங்கம்மா சத்தம் போடாம சாப்பாட்டுல விஷம் வெச்சுடுவாங்க!!


ஆமா அது தான் சரியாயிருக்குமென ப்ரின்சிபாலும் முடிக்க,
தீந்தோம்டா நாம என மனதுக்குக்குள் அழ தொடங்கினேன்!

அப்போது தான் எங்கள் அபிமான
எபிட்டா மிஸ் காஞ்சிகாமாட்சி உள்ளே வந்தார்!
(கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்ஸ், வில்லி கடைசியாக ஹீரோயின் என இன்ட்ரோ வரும் வித்தியாசமான கதை இது!)

எங்கள் மேத்ஸ் மிஸ் - எல்லா சப்ஜெக்ட்களிலும் லெஃப்ட்ல இன்டிகேட்டர் போட்டு ரைட்டில் கைக்காட்டி நேராக போய் கலக்கும் தசாவதானி!

இதுல நம்ம தப்பும் இருக்கு சார் என தொடங்கியவர்,
இதோ ZOOLOGY மிஸ் - இவங்க அந்த HRS லெசன ஒழுங்கா எடுத்திருந்தா
அவங்களுக்கு அந்த சந்தேகமும் வந்திருக்காது,
ஒரு பொண்ணு கிட்ட இத பத்தி அவங்க கேட்டுருக்கவும் மாட்டாங்க!

இந்த வயசுல இவங்கள வழி நடத்த வேண்டியது நம்ம பொறுப்பு,
அதானால தான் அவங்க அப்பா அம்மா இங்க அனுப்பிருக்காங்க,
இதுல அவங்கள கூப்டு பேசி என்னாக போகுது.!?

இனி இவங்க இது மாதிரி MISBEHAVE பண்ணாம இருக்க நான் பொறுப்பு பேரண்ட்ஸ்லாம் வேண்டாமென சொல்லி எங்களுக்கு ஜாமீன் போட்டார்!

தலைக்கு பின் ஒளிவட்டம்
தோளில் பச்சைக்கிளியென
அப்போது எங்கள் கண்ணுக்கு உண்மையாகவே ஒரு வரம் தரும் காமாட்சியாக தெரிந்தார் எங்கள் எபிட்டா மிஸ்!

பின் எங்களை தனியாக அழைத்து சென்றவர்,
சுமார் இரண்டரை மணி நேரம் உட்கார வைத்து அந்த HRS லெசனை விளாவாரியாக A-Z விளக்கினார்!!
இதை மற்றவருடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டுமென்ற கன்டிஷனுடன்!!


விளக்கத்தின் முடிவில்
அரைகுறை அறிவுகள் அனைத்தும் தெளிவு பெற்றன!

இத்தனை நாள் ஆபாசமாகவும்
கேளிக்கையாகவும் தெரிந்த விஷயங்கள் மேல்
அதன் பிறகு அத்தனைப் பெரிய மரியாதை வந்திருந்தது!

அப்படி கேட்டது நானில்லை எனினும்
ஏதோ ஒரு குற்றவுணர்ச்சி
கண்களில் நீரை நிரப்பியது!
(எமோஷ்னலி நான் கொஞ்சம் வீக் - டைட்டானிக் க்ளைமேக்ச பாத்தே விசும்பி விசும்பி அழுதுருக்கேன்னா பாருங்களேன்)

அப்புறம் என்ன!!
க்ளாஸ் பொண்ணுங்களுக்கு மட்டுமில்ல
க்ளாஸ்ரூம கூட்ட ஆயாம்மா வந்தாலும் ராஜமரியாதை தான்!

சிவகார்த்திகேயன் படம் பார்க்க போனாலும்
சமுத்திரகனி படம் போல க்ளைமேக்சில் மெசேஜ் தேடுவது நம்மவர் வழக்கம்!
#அது தான் அடுத்தது!

எனக்கு கிடைத்த இந்த எபிட்டா மிஸ் பலருக்கும் கிடைக்காமல் போயிருக்கலாம்!

ஆசிரியர் ஒரு குழந்தையின் இரண்டாவது பெற்றோர் -
பெற்றோர் ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் என ஏதோ ஒரு ஃபார்வேடு மெசேஜ் படித்ததாக ஞாபகம்!

FTVக்கும் JETIX CHANNELக்கும் இடையே
வீட்டு டிவி ரிமோட் மாட்டித் தவித்துக்கொண்டிருக்கும் காலகட்டம்!
பால்ய மனம் தடம் மாறுவதற்கான
சரியான வயது!

அட்வைஸ்கள் அறுவைகளாக தெரியும் பருவம்!
இவர்களை சரியாக வழிநடத்தும் பொறுப்பில் இருக்கும் இருவர்
பெற்றோர்களும் ஆசிரியர்களும்!

பள்ளி என்பது வெறும் (a+b)^2 சொல்லிக்கொடுக்கும்
கட்டிடங்களாக மட்டும் இல்லாமல்
சரியான வழிகாட்டிகளாக இருக்கும்,
விடைத்தாளோடு சேர்த்து மாணவர்களையும் திருத்தி வழிநடத்தும் ஆசிரியர்களை கொண்ட
இடமாக இருத்தல் வேண்டும்!

மாணவர்களுக்கு மற்றவரை/பெண்களை மதிக்க கற்றுக்கொடுப்பதற்கு முன்
ஆசிரியர்களானவர்கள் முதலில்
அவர்களின் மரியாதைக்குரியவர்களாகவும்
அபிமானத்திற்குரியவர்களாகவும்
இருத்தல் வேண்டும்!

பாடப்புத்தகத்தை தாண்டி
ஆசிரியர்-மாணவர்களுக்கிடையே ஒரு நட்புறவு வேண்டும்!

(செக்ஸ் கல்வியில் பெற்றோர்களின் பங்களிப்பை பற்றி நான் ஏற்கனவே முந்தய பதிவில் சொல்லியிருந்தேன் - http://rajitalksindia.blogspot.in/2014/08/blog-post_14.html?m=1 )

மொத்தத்தில் மாணவர்களின் எதிர்காலத்திற்காக
அவர்கள் செய்யும் ஏதோ ஒரு விஷயம்
பல ஆண்டுகள் கழித்தும்
ஏதோ ஒரு மாணவனால்
நினைத்து நன்றி சொல்வதாக அமைந்தாலே போதுமானது!

-நன்றிகளுடன்
ராஜ்குமார்.ரா



பிழைத்திருத்தி - மணிமைந்தன்