வாழ்க்கையை வேறு வழியில் திசை திருப்பி விட்ட ஒருவர் எஸ்.பி.ஜனநாதன்.
5வருடத்திற்கு பிறகு ரிலீசாகும் படமாதலால் மற்றவர்களை விட புறம்போக்கு மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் கடைசியில் ஒரு டாக்குமெண்டரியை அளித்து ஏமாற்றியிருந்தார்.
அதே சமயம் ஜனநாதன் வசனம் அவரின் உதவியாளர் இயக்கமென்பதாலேயே
பல நாட்கள் கிடப்பில் கிடந்தாலும் பூலோகம் பற்றிய எதிர்பார்ப்பும் கொஞ்சமும் குறையாதிருந்தது!
எல்லா வளங்களும் இருந்தும் அவற்றை சரியாக பயன்படுத்திக்கொள்ள தெரியாமல் சீப்பு ஷாம்ப்பு முதல் கார் டிவி வரை வெளிநாட்டிடம் கையேந்திக்கொண்டிருக்கும் வளர்ந்து வரும் நாடு இந்தியா.
மக்கள்த்தொகையில் இங்கே ஏழைகள் ஏராளம் - உளகலாவிய Global marketகள் கடை விரித்து வியாபாரம் செய்ய இது ஒரு ஏதுவான மிகப்பெரிய பொருளாதார சந்தை!
இத்தகைய சந்தையில் தங்கள் குப்பைகளை விற்றுதுதள்ள இந்தியர்களின் மிகப்பெரிய சொத்தான சுயமரியாதை & பேராசைகளை சின்னதாய் தூண்டி விடுவது மட்டுமே இந்த வியாபாரிகளுக்கு போதுமானதாக இருந்தது!
இந்தியாவில் முதன்முதலில் குடிநீரை பாட்டில் போட்டு விற்ற நிருவனம் தனது விளம்பரப்படத்தில் ஒரு கழிவறையையும் தனது ப்ராண்டையும் காட்டி நீங்கள் எதை குடிக்கப்போகிறீர்கள் என விளம்பரப்படுத்தியது!
முக&சரும சிகப்பழகு க்ரீம்களுக்கான விளம்பரப்படம் இதை பயன்படுத்தினால் ஆறே வாரத்தில் சிகப்பழகு என்றது!
கொதிக்க வைத்த நீரை குடிப்பதை விட எங்கள் purified packed water சுத்தமானது என நிரூபிப்பதற்கு பதிலாக வாட்டர் பாட்டில்களை ஒரு status symbolலாக ஆக்கியது நிருவனங்கள்!
பயன்படுத்தினால் 6வாரத்தில் சிகப்பழகாகலாம் என்பதை நிரூபிப்பதற்கு பதிலாக சிகப்பாயிருப்பதையே அழகு & கௌரவம் என நம்மை
நம்ப வைப்பது வியாபாரிகளுக்கு சுலபமாயிருந்தது!!
90களின் ஆரம்பத்தில் இந்தியாவில் நடந்த உலகலாவிய தொலைக்காட்சி விற்பனை புரட்சிகளெல்லாம்
தற்கால விளம்பர வியாபாரத்திற்கான ஆளுமைகளின் விதைகள் என்பது கற்பனையல்ல!
ஒரு சாதாரண குளியல் சோப்பை விற்பதற்காக பொருளாதார அடியாட்களின் வாயிலாக பிரதமர் முதல்வர் மந்திரி என நம்ம ஏரியா கவுண்சிலர் வரை நடக்கும் பிரம்மாண்ட வியாபர ஊழலானது கண்டிப்பாக சாமாணியனின் கற்பனைக்கு சற்றும் எட்டாதது!
அத்தகைய ஊழலை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு திரையில் காட்டிய ஒரு பாடம் தான் பூலோகம்!
பாக்ஸிங் பரம்பரையை சேர்ந்த இருவர் சண்டையிட
பூலோகத்தின் அப்பா போட்டியில் தோற்கிறார்,
தோல்வி அவமானத்தில் தற்கொலை செய்துக்கொள்கிறார்.
பரம்பரை போட்டியாக வளரும் பகையில்
அப்பாவை தோற்கடித்தவர் மகனான ஆறுமுகத்தை ரிங்கிலேயே நாக்அவ்ட் செய்ய வேண்டும் என்பது பூலோகத்திற்குள் வெறியாக வளர்கிறது!
20வருடங்களுக்கு பிறகு ரிங்கிலிரங்கும் இருவரின் வாரிசுகளின் போட்டியை ஒளிபரப்ப முயளும் டிவி சேனல்
ஆளுமை முதலைகளுடன் இணைந்து நடத்தும் பிரம்மாண்ட விளம்பர வியாபாரம்
திரைக்கதையாகியிருக்கிறது!
தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க துடிக்கும் மகனென்பது பழைய கதையானாலும்
(அதுவும் இப்படத்தில் ஒரு தொடக்கம் மட்டுமே)
பாக்ஸிங் என்றதும் ஏற்கனவே ஒரு போட்டியில் ஏமாற்றப்பட்ட குரு கதாநாயகனை ட்ரெய்ன் செய்து அவனை வெற்றி பெற செய்யும் அரத பழசான கதையை கையிலெடுக்காமல் இருந்தது மிகமுதல் ஆறுதல்!
100வருட பாரம்பரியம் 20வருட பகை என
திரையின் உள் மற்றும் வெளியில் இருக்கும் இருதரப்பு ஆடியன்ஸையும் ஆர்வமூட்டினாலும்
பின்னணி அரசியலையும் கதை நகரப்போகும் போக்கையும்
100கார் விக்கிறத விட
10000 ஷாம்பு விக்கிறது தான்டா மிகப்பெரிய லாபம்*
சீயக்கா போட்டு குளிச்சவன் தலைலயெல்லாம் சோப்ப போட்டு தேய்ச்சவன்டா நான்*
மாடிவீட்டுக்காரன விட குடிசைகள் தான் நம்ம டார்கெட்-அங்கிருந்து தான் புடுங்கனும்*
மாதிரியான வியாபார குறிக்கோள்கள்களை கதாப்பாத்திரத்தின் வசனங்களின் மூலம் எதார்த்தம் மீறாமல் சுட்டிக்காட்டியிருப்பது நேர்த்தி! #ஜனநாதன் அப்லாஸ்
பாக்ஸிங் கதாபாத்திரங்கள் இரண்டு மிகப்பெரும் பாக்ஸிங் க்ளப்புகளை சேர்ந்தவர்களென்றல்லாமல்
நம்ம காசிமேடு ராயபுரம் ஏரியா பசங்க என தொடக்கியிருப்பதும்
நம் கண் மறைவில் நடக்கும் வியாபார அரசியல் யாவும் நம் & பக்கத்து வீடுகள் என சாமாணியனின் குடிசையிலேயே தொடங்குகிறது என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு!
டோர்னமெண்ட்டில் ஆமுமுகத்தை தோற்கடித்த பூலோகம் சட்டென மனம் மாறுவதும்
(போருல செத்தவங்கள பாத்து துறவியா போன அசோகர் கதையெல்லாம் படிச்சிருந்தாலும்....அசோகரா...அக்பரா....)
வெட்ட வந்த ஆறுமுகம் நண்பர்கள் உபதேசம் கேட்டு திருந்துவதும் மட்டும் கொஞ்சம் எதார்த்தம் மீறல்! அங்கங்க கொஞ்சம் க்ளம்ஸி!
அடுத்த கட்டமாக இந்திய சேம்பியனோடு போட்டியிட மறுக்கும் பூலோகத்தை திரும்பவும் ரிங்குக்கு இழுக்க சேனல் செய்யும் அத்தனை சூழ்ச்சிகளும் நாம் தினசரி பார்க்கும் ஏதோ ஒரு ரியாலிட்டி ஷோவையே சுட்டி காட்டுவதை போன்ற உணர்வு!
ஷோவை சென்சேஷனல் ஆக்குவதற்காக
சேனல் எடுக்கும் முயற்சி
எனக்கு நடிக்க தெரியாதுங்க மாதிரியான சரித்திர நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகின்றன.
அதையே படத்தின் எழுத்தாளரும் விரும்பியிருக்கலாம் அப்படி செய்திருந்தால் அவர்கள் முயற்சி வெற்றி!
2ரூபாய் காகிதத்தை வாங்க செய்ய
"தமிழக" மீனவர் கைது,
"தலித்" பெண் கற்பழிப்பு,
தேசிய கீதத்தின் போது எழுந்து நிற்காத "இஸ்லாமிய" குடும்பம் போன்ற மேற்கோள் வார்த்தைகளையும்
சாலை விபத்தில்
லாரி டுமீலு டிரைவர் பனாலு என்பது போன்ற ரைமிங் வார்த்தைகளையும் அடுக்கும் செய்தித்தாள்கள் நமக்கு ஏற்கனவே பழக்கப்பட்டிருந்தாலும் கூட
ரசிகர்களை அதிகரிக்க செய்ய மேற்கொள்ளப்படும்
வெள்ளப்போவது தமிழனா அல்லது வடஇந்தியனா என்பது போன்று மறைமுகமாக விதைக்கபபடும் உணர்வுகள்
( முதலில் சொன்ன வியாபாரத்திற்காக மக்களின் கௌரவத்தை அவதாவது மொழியுணர்வை சீண்டிவிடும் உக்தி)
விளையாட்டுகளுக்கு தமிழுணர்வை வெறியாயூட்டி ரசிகர்களை எமோஷனல் கஸ்டமர்ஸ் ஆக்கிகொண்டிருக்கும் IPL, CCL, ISL வியாபாரிகளின் உக்தி என்பது
விளையாடுவது தமிழனாக தோணியோ அஷ்வினோ அல்ல வியாபாரிகளின் கைக்கூலிகள் என எப்போதாவது ஒரு நாள் மக்களுக்கு புலப்பட வேண்டுமென்பது இயக்குநரின் எதிர்பார்ப்பாக தெரிகிறது!
அதையும் தாண்டி வியாபாரிகளின் விளையாட்டுகளோட கலந்திருக்கும் பெட்டிங் கலாச்சாரம் கிளை நிழல் உலகம்.
தேவையற்ற செண்ட்டிமெண்ட்களை தவிர்த்தல்
வசனங்களை காட்சிகளாய் திணிக்காமல்
மக்களின் மனநிலையறிந்து திரைக்கதை அமைத்தது பெரிய ப்ளஸ் & வசனங்கள் திரைக்கதையை தாங்கி நிற்கும் தூண்கள்!
போட்டிக்கான ஒப்பந்தம் போடும் காட்சியில் சேனலுடனான பூலோகத்தின் உரையாடல் மீடியாவிற்கு கொடுத்த செருப்படி-பலியாடுகளின் மைண்டு வாய்ஸ்!
ஒவ்வொரு சுற்றிலும் நாயகனே வெல்வாரென பார்வையாளர்கள் அறிந்திருந்தாலும்
ஒவ்வொரு சுற்றையும் கொண்டு போன விதம் அருமை!
இண்டெர்வெலுக்கு முன் பூலோகத்தை சேனல் ரிங்கில் ஏற செய்யும் காட்சி ச்ச்ச சம்மல ரகம்!
4ரூபா வியாபாரத்திற்காக முதலாளி வர்கம் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போகும் என்பதை பல ஃப்ரேம்களில் காட்சிப்படுத்தியிருப்பது அட்டகாசம்!
பிரிவுசார் திருமண வீடுகளின் கலாச்சாரத்தை திரையில் காட்டிக்கொண்டிருந்ததை தாண்டி
சாவு வீட்டு கலாச்சாரத்தை காட்டுவது தமிழ்சினிமா திரைக்கதையில் எதார்த்தத்தை கூட்டுகிறது என்பது புரிகிறது!
படத்தில் அதிகம் கவர்ந்த மற்றுமொரு விஷயம் படத்தின் க்ளைமேக்ஸ்!
4வது சுற்றில் என்னவாகப்போகிறது என்பதை இயக்குநர் அதன் முதல் காட்சியேலே சொல்லிவிட்டாலும் ஜார்ஜுடனான முதல் 3சுற்றுகளை கொண்டு போன விதம் போரடிக்கவில்லை!
பாக்ஸிங் என்றால் முதல் 9ரவுண்டில் நாயகன் நாயடி பேயடி வாங்கி குருதிப்புனல் கமலாக கிடந்து திடீரென கடைசி ரவுண்டில் வெறியேறி எதிராளை அடித்து வீழ்த்துவது,
பக்கத்தில் நின்று அவனை விடாத அடி என உசுப்பேத்தும் நாயகி,
அடிபட்ட நாயகனின் மாஸ்ட்டரை கொலை செய்ய முயற்சிப்பது,
அமெரிக்கனிடம் போட்டியிடுவதால் சுத்தி நின்று ஜெய்ஹிந் சொல்லும் மும்மத ஆடியன்ஸ் என வரும் அனைத்து Nonsenseகளும் Avoided என்பதை எதிர்பார்க்கவேயில்லை-சந்தோஷம்!
சண்டையின்போதே இடையிடையே பூலோகம் கொடுக்கும் கவுண்ட்டர் வசனங்கள் ரியாலிட்டி ஷோக்களின் பித்தலாட்டாங்களுக்கு கொடுக்கப்பட்ட காமெடி கலந்த செருப்படி!
பாக்ஸிங்கில் ஹிஸ்ட்ரி டெக்னிக் ஸ்டேடஜி என இயக்குநர் அதிகம் கற்றிருப்பது காட்சி அமைப்பிலேயே தெரிகிறது!
Sports தெரிந்தவர் பார்க்கும்போது திரைப்படமாக தெரியாமல் ப்ரொஃபஷ்னல் மேட்சாகவே தெரியும்!
பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை பிஜிஎம் குட்,
ஆர்டிஸ்ட் செலக்ஷன், ஆர்ட், கேமரா, எடிட்டிங் சூப்பர்!
வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ரிலீசாகி பார்வையாளர்களை சந்தோஷப்படுத்திவிட்டு கடந்துப் போகும் சாதாரண கமர்ஷியல் திரைப்படமாக இல்லாமல் பார்ப்பவர் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு பாதிப்பை இப்படம் கண்டிப்பாக ஏற்படுத்தும்!
உள்நாட்டு அரசியல் ரீதியாக அடுத்த இந்தோனேசியா ஆவதற்கான எல்லா தகுதிகளும் உடைய நாடு இந்தியா என்பதை நன்கு அறிந்து கடை விரித்துக்கொண்டிருக்கும் Global marketகளின் உலகமயமாதல் சூழ்ச்சியறிந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டுமொரு முயற்சி இது!
ஜனநாதன், ராம்கோபால் வர்மா, பா.ரஞ்சித் வரிசையில் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பை எப்போதும் ஏற்படுத்தும் இயக்குநர் வரிசையில் இப்போது கல்யாணகிருஷ்ணனும் இனைந்தது மகிழ்ச்சி!
120கோடி பொதுமக்களை வெறும் நுகர்வாளர்காளாக மட்டுமே பார்க்கும்
முதலாளிகளின் வியாபார நிழல்களை வெயிலூட்டினாலும்
அதையும் கமர்ஷியல் படமாக்கி வியாபாரித்தவர் பற்றி என்னை நினைக்க வைத்ததே பூலோகத்தின் மிகப்பெரும் வெற்றி! :-D
கண்டிப்பா தியேட்டர்கள்ல பாக்க தவறிடாதீங்க!!
ராஜ்குமார் @RajiTalks
5வருடத்திற்கு பிறகு ரிலீசாகும் படமாதலால் மற்றவர்களை விட புறம்போக்கு மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் கடைசியில் ஒரு டாக்குமெண்டரியை அளித்து ஏமாற்றியிருந்தார்.
அதே சமயம் ஜனநாதன் வசனம் அவரின் உதவியாளர் இயக்கமென்பதாலேயே
பல நாட்கள் கிடப்பில் கிடந்தாலும் பூலோகம் பற்றிய எதிர்பார்ப்பும் கொஞ்சமும் குறையாதிருந்தது!
எல்லா வளங்களும் இருந்தும் அவற்றை சரியாக பயன்படுத்திக்கொள்ள தெரியாமல் சீப்பு ஷாம்ப்பு முதல் கார் டிவி வரை வெளிநாட்டிடம் கையேந்திக்கொண்டிருக்கும் வளர்ந்து வரும் நாடு இந்தியா.
மக்கள்த்தொகையில் இங்கே ஏழைகள் ஏராளம் - உளகலாவிய Global marketகள் கடை விரித்து வியாபாரம் செய்ய இது ஒரு ஏதுவான மிகப்பெரிய பொருளாதார சந்தை!
இத்தகைய சந்தையில் தங்கள் குப்பைகளை விற்றுதுதள்ள இந்தியர்களின் மிகப்பெரிய சொத்தான சுயமரியாதை & பேராசைகளை சின்னதாய் தூண்டி விடுவது மட்டுமே இந்த வியாபாரிகளுக்கு போதுமானதாக இருந்தது!
இந்தியாவில் முதன்முதலில் குடிநீரை பாட்டில் போட்டு விற்ற நிருவனம் தனது விளம்பரப்படத்தில் ஒரு கழிவறையையும் தனது ப்ராண்டையும் காட்டி நீங்கள் எதை குடிக்கப்போகிறீர்கள் என விளம்பரப்படுத்தியது!
முக&சரும சிகப்பழகு க்ரீம்களுக்கான விளம்பரப்படம் இதை பயன்படுத்தினால் ஆறே வாரத்தில் சிகப்பழகு என்றது!
கொதிக்க வைத்த நீரை குடிப்பதை விட எங்கள் purified packed water சுத்தமானது என நிரூபிப்பதற்கு பதிலாக வாட்டர் பாட்டில்களை ஒரு status symbolலாக ஆக்கியது நிருவனங்கள்!
பயன்படுத்தினால் 6வாரத்தில் சிகப்பழகாகலாம் என்பதை நிரூபிப்பதற்கு பதிலாக சிகப்பாயிருப்பதையே அழகு & கௌரவம் என நம்மை
நம்ப வைப்பது வியாபாரிகளுக்கு சுலபமாயிருந்தது!!
90களின் ஆரம்பத்தில் இந்தியாவில் நடந்த உலகலாவிய தொலைக்காட்சி விற்பனை புரட்சிகளெல்லாம்
தற்கால விளம்பர வியாபாரத்திற்கான ஆளுமைகளின் விதைகள் என்பது கற்பனையல்ல!
ஒரு சாதாரண குளியல் சோப்பை விற்பதற்காக பொருளாதார அடியாட்களின் வாயிலாக பிரதமர் முதல்வர் மந்திரி என நம்ம ஏரியா கவுண்சிலர் வரை நடக்கும் பிரம்மாண்ட வியாபர ஊழலானது கண்டிப்பாக சாமாணியனின் கற்பனைக்கு சற்றும் எட்டாதது!
அத்தகைய ஊழலை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு திரையில் காட்டிய ஒரு பாடம் தான் பூலோகம்!
பாக்ஸிங் பரம்பரையை சேர்ந்த இருவர் சண்டையிட
பூலோகத்தின் அப்பா போட்டியில் தோற்கிறார்,
தோல்வி அவமானத்தில் தற்கொலை செய்துக்கொள்கிறார்.
பரம்பரை போட்டியாக வளரும் பகையில்
அப்பாவை தோற்கடித்தவர் மகனான ஆறுமுகத்தை ரிங்கிலேயே நாக்அவ்ட் செய்ய வேண்டும் என்பது பூலோகத்திற்குள் வெறியாக வளர்கிறது!
20வருடங்களுக்கு பிறகு ரிங்கிலிரங்கும் இருவரின் வாரிசுகளின் போட்டியை ஒளிபரப்ப முயளும் டிவி சேனல்
ஆளுமை முதலைகளுடன் இணைந்து நடத்தும் பிரம்மாண்ட விளம்பர வியாபாரம்
திரைக்கதையாகியிருக்கிறது!
தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க துடிக்கும் மகனென்பது பழைய கதையானாலும்
(அதுவும் இப்படத்தில் ஒரு தொடக்கம் மட்டுமே)
பாக்ஸிங் என்றதும் ஏற்கனவே ஒரு போட்டியில் ஏமாற்றப்பட்ட குரு கதாநாயகனை ட்ரெய்ன் செய்து அவனை வெற்றி பெற செய்யும் அரத பழசான கதையை கையிலெடுக்காமல் இருந்தது மிகமுதல் ஆறுதல்!
100வருட பாரம்பரியம் 20வருட பகை என
திரையின் உள் மற்றும் வெளியில் இருக்கும் இருதரப்பு ஆடியன்ஸையும் ஆர்வமூட்டினாலும்
பின்னணி அரசியலையும் கதை நகரப்போகும் போக்கையும்
100கார் விக்கிறத விட
10000 ஷாம்பு விக்கிறது தான்டா மிகப்பெரிய லாபம்*
சீயக்கா போட்டு குளிச்சவன் தலைலயெல்லாம் சோப்ப போட்டு தேய்ச்சவன்டா நான்*
மாடிவீட்டுக்காரன விட குடிசைகள் தான் நம்ம டார்கெட்-அங்கிருந்து தான் புடுங்கனும்*
மாதிரியான வியாபார குறிக்கோள்கள்களை கதாப்பாத்திரத்தின் வசனங்களின் மூலம் எதார்த்தம் மீறாமல் சுட்டிக்காட்டியிருப்பது நேர்த்தி! #ஜனநாதன் அப்லாஸ்
பாக்ஸிங் கதாபாத்திரங்கள் இரண்டு மிகப்பெரும் பாக்ஸிங் க்ளப்புகளை சேர்ந்தவர்களென்றல்லாமல்
நம்ம காசிமேடு ராயபுரம் ஏரியா பசங்க என தொடக்கியிருப்பதும்
நம் கண் மறைவில் நடக்கும் வியாபார அரசியல் யாவும் நம் & பக்கத்து வீடுகள் என சாமாணியனின் குடிசையிலேயே தொடங்குகிறது என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு!
டோர்னமெண்ட்டில் ஆமுமுகத்தை தோற்கடித்த பூலோகம் சட்டென மனம் மாறுவதும்
(போருல செத்தவங்கள பாத்து துறவியா போன அசோகர் கதையெல்லாம் படிச்சிருந்தாலும்....அசோகரா...அக்பரா....)
வெட்ட வந்த ஆறுமுகம் நண்பர்கள் உபதேசம் கேட்டு திருந்துவதும் மட்டும் கொஞ்சம் எதார்த்தம் மீறல்! அங்கங்க கொஞ்சம் க்ளம்ஸி!
அடுத்த கட்டமாக இந்திய சேம்பியனோடு போட்டியிட மறுக்கும் பூலோகத்தை திரும்பவும் ரிங்குக்கு இழுக்க சேனல் செய்யும் அத்தனை சூழ்ச்சிகளும் நாம் தினசரி பார்க்கும் ஏதோ ஒரு ரியாலிட்டி ஷோவையே சுட்டி காட்டுவதை போன்ற உணர்வு!
ஷோவை சென்சேஷனல் ஆக்குவதற்காக
சேனல் எடுக்கும் முயற்சி
எனக்கு நடிக்க தெரியாதுங்க மாதிரியான சரித்திர நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகின்றன.
அதையே படத்தின் எழுத்தாளரும் விரும்பியிருக்கலாம் அப்படி செய்திருந்தால் அவர்கள் முயற்சி வெற்றி!
2ரூபாய் காகிதத்தை வாங்க செய்ய
"தமிழக" மீனவர் கைது,
"தலித்" பெண் கற்பழிப்பு,
தேசிய கீதத்தின் போது எழுந்து நிற்காத "இஸ்லாமிய" குடும்பம் போன்ற மேற்கோள் வார்த்தைகளையும்
சாலை விபத்தில்
லாரி டுமீலு டிரைவர் பனாலு என்பது போன்ற ரைமிங் வார்த்தைகளையும் அடுக்கும் செய்தித்தாள்கள் நமக்கு ஏற்கனவே பழக்கப்பட்டிருந்தாலும் கூட
ரசிகர்களை அதிகரிக்க செய்ய மேற்கொள்ளப்படும்
வெள்ளப்போவது தமிழனா அல்லது வடஇந்தியனா என்பது போன்று மறைமுகமாக விதைக்கபபடும் உணர்வுகள்
( முதலில் சொன்ன வியாபாரத்திற்காக மக்களின் கௌரவத்தை அவதாவது மொழியுணர்வை சீண்டிவிடும் உக்தி)
விளையாட்டுகளுக்கு தமிழுணர்வை வெறியாயூட்டி ரசிகர்களை எமோஷனல் கஸ்டமர்ஸ் ஆக்கிகொண்டிருக்கும் IPL, CCL, ISL வியாபாரிகளின் உக்தி என்பது
விளையாடுவது தமிழனாக தோணியோ அஷ்வினோ அல்ல வியாபாரிகளின் கைக்கூலிகள் என எப்போதாவது ஒரு நாள் மக்களுக்கு புலப்பட வேண்டுமென்பது இயக்குநரின் எதிர்பார்ப்பாக தெரிகிறது!
அதையும் தாண்டி வியாபாரிகளின் விளையாட்டுகளோட கலந்திருக்கும் பெட்டிங் கலாச்சாரம் கிளை நிழல் உலகம்.
தேவையற்ற செண்ட்டிமெண்ட்களை தவிர்த்தல்
வசனங்களை காட்சிகளாய் திணிக்காமல்
மக்களின் மனநிலையறிந்து திரைக்கதை அமைத்தது பெரிய ப்ளஸ் & வசனங்கள் திரைக்கதையை தாங்கி நிற்கும் தூண்கள்!
போட்டிக்கான ஒப்பந்தம் போடும் காட்சியில் சேனலுடனான பூலோகத்தின் உரையாடல் மீடியாவிற்கு கொடுத்த செருப்படி-பலியாடுகளின் மைண்டு வாய்ஸ்!
ஒவ்வொரு சுற்றிலும் நாயகனே வெல்வாரென பார்வையாளர்கள் அறிந்திருந்தாலும்
ஒவ்வொரு சுற்றையும் கொண்டு போன விதம் அருமை!
இண்டெர்வெலுக்கு முன் பூலோகத்தை சேனல் ரிங்கில் ஏற செய்யும் காட்சி ச்ச்ச சம்மல ரகம்!
4ரூபா வியாபாரத்திற்காக முதலாளி வர்கம் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போகும் என்பதை பல ஃப்ரேம்களில் காட்சிப்படுத்தியிருப்பது அட்டகாசம்!
பிரிவுசார் திருமண வீடுகளின் கலாச்சாரத்தை திரையில் காட்டிக்கொண்டிருந்ததை தாண்டி
சாவு வீட்டு கலாச்சாரத்தை காட்டுவது தமிழ்சினிமா திரைக்கதையில் எதார்த்தத்தை கூட்டுகிறது என்பது புரிகிறது!
படத்தில் அதிகம் கவர்ந்த மற்றுமொரு விஷயம் படத்தின் க்ளைமேக்ஸ்!
4வது சுற்றில் என்னவாகப்போகிறது என்பதை இயக்குநர் அதன் முதல் காட்சியேலே சொல்லிவிட்டாலும் ஜார்ஜுடனான முதல் 3சுற்றுகளை கொண்டு போன விதம் போரடிக்கவில்லை!
பாக்ஸிங் என்றால் முதல் 9ரவுண்டில் நாயகன் நாயடி பேயடி வாங்கி குருதிப்புனல் கமலாக கிடந்து திடீரென கடைசி ரவுண்டில் வெறியேறி எதிராளை அடித்து வீழ்த்துவது,
பக்கத்தில் நின்று அவனை விடாத அடி என உசுப்பேத்தும் நாயகி,
அடிபட்ட நாயகனின் மாஸ்ட்டரை கொலை செய்ய முயற்சிப்பது,
அமெரிக்கனிடம் போட்டியிடுவதால் சுத்தி நின்று ஜெய்ஹிந் சொல்லும் மும்மத ஆடியன்ஸ் என வரும் அனைத்து Nonsenseகளும் Avoided என்பதை எதிர்பார்க்கவேயில்லை-சந்தோஷம்!
சண்டையின்போதே இடையிடையே பூலோகம் கொடுக்கும் கவுண்ட்டர் வசனங்கள் ரியாலிட்டி ஷோக்களின் பித்தலாட்டாங்களுக்கு கொடுக்கப்பட்ட காமெடி கலந்த செருப்படி!
பாக்ஸிங்கில் ஹிஸ்ட்ரி டெக்னிக் ஸ்டேடஜி என இயக்குநர் அதிகம் கற்றிருப்பது காட்சி அமைப்பிலேயே தெரிகிறது!
Sports தெரிந்தவர் பார்க்கும்போது திரைப்படமாக தெரியாமல் ப்ரொஃபஷ்னல் மேட்சாகவே தெரியும்!
பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை பிஜிஎம் குட்,
ஆர்டிஸ்ட் செலக்ஷன், ஆர்ட், கேமரா, எடிட்டிங் சூப்பர்!
வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ரிலீசாகி பார்வையாளர்களை சந்தோஷப்படுத்திவிட்டு கடந்துப் போகும் சாதாரண கமர்ஷியல் திரைப்படமாக இல்லாமல் பார்ப்பவர் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு பாதிப்பை இப்படம் கண்டிப்பாக ஏற்படுத்தும்!
உள்நாட்டு அரசியல் ரீதியாக அடுத்த இந்தோனேசியா ஆவதற்கான எல்லா தகுதிகளும் உடைய நாடு இந்தியா என்பதை நன்கு அறிந்து கடை விரித்துக்கொண்டிருக்கும் Global marketகளின் உலகமயமாதல் சூழ்ச்சியறிந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டுமொரு முயற்சி இது!
ஜனநாதன், ராம்கோபால் வர்மா, பா.ரஞ்சித் வரிசையில் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பை எப்போதும் ஏற்படுத்தும் இயக்குநர் வரிசையில் இப்போது கல்யாணகிருஷ்ணனும் இனைந்தது மகிழ்ச்சி!
120கோடி பொதுமக்களை வெறும் நுகர்வாளர்காளாக மட்டுமே பார்க்கும்
முதலாளிகளின் வியாபார நிழல்களை வெயிலூட்டினாலும்
அதையும் கமர்ஷியல் படமாக்கி வியாபாரித்தவர் பற்றி என்னை நினைக்க வைத்ததே பூலோகத்தின் மிகப்பெரும் வெற்றி! :-D
கண்டிப்பா தியேட்டர்கள்ல பாக்க தவறிடாதீங்க!!
ராஜ்குமார் @RajiTalks