மாடுகள் பூட்டிய கட்டவண்டியோ, பள்ளி பருவத்தில் புத்தக மூட்டை சுமந்த சைக்கிளோ,
சம்பாதித்து வாங்கி புது பைக்கோ,
கால் வைக்க கூட இடம் கிடைக்காமல் ஃபுட் போர்ட் அடிக்க செய்த அரசு பேருந்தோ,
முதன் பயணத்தில் சிலாகிக்க செய்த பிரம்மாண்ட விமானமோ
இப்படி ஏதோ ஒரு வாகணப் பயணம் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எப்போதாவது அல்லது அடிக்கடி ஒரு மறக்க முடியாத சுவாரஸ்யமான அனுபவத்தை ஏற்படுத்திச் செல்லும்..
அது மாதிரியான ஒரு பேருந்து பயணம் தான் இது..
ஒரு நாள் விடுமுறை கிடைத்தால் ஊர் சுற்றலாம், இரண்டு நாள் கிடைத்தால் அக்கா வீட்டுக்கு போகலாம், மூன்றோ அதற்கு மேலோ கிடைத்தால் யோசிக்காமல் அம்மா கையில் சாப்பிட சொந்த ஊருக்கு நடையை கட்டலாம் என்ற மனநிலை கொண்ட வெளியூரில் தங்கி படிக்கும் ஒரு கல்லூரி மாணவன்...
வெள்ளி-சனி-ஞாயிறு தொடர் விடுமுறை கிடைத்தும் வியாழன் இரவு 7மணி வரை சொந்த ஊர் செல்லும் சிந்தனையில்லை..
இருப்பினும்
இரண்டு நாட்களுக்கு முன் கடந்து சென்ற ரம்ஜான் என் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது..
பக்கத்தில் இரண்டு வீடுகளுமே இஸ்லாமிகளாக இருந்தும் ரம்ஜானன்று ஓசி பிரியாணி கிடைக்காமல் கடையில் காசு கொடுத்துவாங்கி சாப்பிட்ட பரிதாபம்-கோபம்-ஏக்கம்... (கடையில் வாங்கவும் தெரு தெருவாக வா-குவாட்டர் கட்டிங் சிவா போல அலைந்தது வேறு விஷயம்)
இந்த வாரம் அம்மா கையாள பிரியாணி சாப்பிட்டே தீர வேண்டுமென்ற எண்ணம் என்னை ஊருக்கு செல்ல தூண்டியது..
பைகளை எடு-துணிகளை மடி-சட்டையை போடு-எடுடா ஓட்டம் என சொந்த ஊர் செல்ல ஆயத்தமானான் அந்த தற்காலிக சென்னைவாசி-பரதேசி..
அதே வேகத்தில் MTCஏறி, ஒன்பது ரூபாய், டிக்கெட்டும் எடுத்து கோயம்பேடும் வந்தாச்சு..
அது சரி.. கைல எம்புட்டு காசு இருக்கு..!!
பர்சை களைந்தால் ஒக்கடே ஒக்கட நூறு ரூபாய் நோட்டு..
ஊருக்கு போக இது பத்தாதேடா..!! என்ன செய்ய..!!!
அட..! இருக்கவே இருக்கு ஏ.டி.எம்..!
வியர்த்து அலைந்து ஓடி வந்தவனுக்கு ஒன்றரை நிமிட ஏசி இளைப்பாற்றல்..
முன்னூறு ரூபாய் பணம் பர்சில் நுழைய ஏ.டி.எம் கார்டு மட்டும் சட்டை மேல் பாக்கெட்டில் அடைக்களம் புகுந்தது..
அடுத்த வேளையாக வேளாங்கண்ணி பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு செல்ல, வரிசையாக அணிவகுத்தன ஐந்து SETC சொகுசு பேருந்துகள்..
இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டு ஏதோ ஒரு பேருந்தில் ஏறுவதாய் முடிவு செய்து, இங்க்கி பிங்க்கி பாங்க்கீ "கீ" என இரண்டாவது கீ வந்த வேதாரண்யம் பேருந்தில்
(ஏன்னா அது தான் முதல்ல கிளம்புமாம்) ஏறி ஜன்னலோர சீட்டையும் பிடித்தான் அந்த கல்லூரி குழந்தை...!!
ஏற்கனேவே நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்த பேருந்தில் நான் ஐந்தாவது ஆள்..!
பேருந்தில் ஏறி அமர்ந்ததுமே காதுகள் ஹெட்போனுடன் ஐக்கியமாகின..
லேசாய் தூறும் மழைச்சாரல், ஜன்னலோ பேருந்து இருக்கை, ட்விட்டரில் நண்பர்களுடனான அரட்டை, ஹெட்போனில் ரஹ்மான் இசை....!
வேறென்ன வேண்டும் ஒரு பேருந்து பயணிக்கு..!
இவையணைத்தும் சேர்ந்து சுற்றத்தை கவனிக்க விடாமல் என்னை கைப்பேசியுடன் கட்டிப்போட்டது..
ஒன்றன்பின் ஒருவர் ஏறி இருக்கைகளை நிரப்ப பேருந்தும் புறப்பட தயாரானது..
அரை இஞ்ச் மட்டுமே நகர்ந்த பேருந்தில் திடீரென ஏதோ ஒரு சலசலப்பு...
பயணச்சீட்டை வாங்கிவிட்டு சாப்பாடு வாங்க போன யாரோ ஒருவரை காணோமாம்..!
"ஏன்யா அவனுக்கெல்லாம் வெய்ட் பன்னுறீங்க..!? நேரத்தோட பஸ்ஸ எடுங்கயா ச்சை" என கோபத்தில் எனக்குளேயே சலித்துக்கொண்டேன்....!
ஆனால் ஓட்டுநரோ அந்த குறிப்பிட்ட ஆள் வராமல் பேருந்தை எடுப்பதாயில்லை போல..!
முதல் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது மனைவி கைபேசியில் ஏதேதோ கூச்சலிட,
சில நிமிடங்களில் கையில் மூன்று பாலிதீன் கவர்வகளோட பேருந்தில் ஏறினார் ஒரு ஆசாமி..
விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில் முகம் தெரியாத போதும், இவர் தான் சாப்பாடு வாங்க போன ஆள் என என் மனதுக்குள் ஒரு பட்சி சொன்னது..
அதே போல பத்து நிமிடம் தாமதமான பேருந்து ஒருவழியாக கோயம்பேட்டை விட்டு வெளியேறியது..!
ஹப்பா....!! ஒரு வழியா வீட்டுக்கு போக போறோம் என்ற சிந்தனை எனக்குள் ஒருவித கிளுகிளுப்பை தூண்டியது..
ஒவ்வொருவரும் தங்கள் பயணச்சீட்டை
பெற்றுக்கொள்ள என்னிடம் வந்த நடத்துனரிடம் பாடல் சத்தத்தை கூட குறைக்காமல் "ஒரு சீர்காழி" என இரண்டு நூறு ரூபாய் தாள்களை நீட்டினேன்..
நடத்துனர் பயணச்சீட்டை கிழிக்கும் அந்த ஒரு நிமிடத்தை கூட நான் வீணடிப்பதாய் இல்லை...
கைபேசியை பார்த்தவாறு ஊருக்கு வந்துக்கிட்டுருக்கேன்டா என சந்தோஷ தகவலை நண்பனுடன் பரிமாறிக்கொண்டேன்..
பேருந்தும் ட்ராஃபிக்கை தாண்டி சென்னையை விட்டு வெளியேற மணியும் பத்தை எட்டியது...
அரைத்தூக்கத்தில் ஹெட்போனில் ஒளித்தது என்ன பாடல் என சரியாக ஞாபகமில்லை..
என்றாலும் அது என் அன்புக்குறிய யாரோ ஒருவர் பாடும் தாலாட்டை போல கேட்க, மனம் லேசானது..!
தூக்கம் விழிகளை தட்ட, தூங்குடா என் செல்லமே என யாரோ காதுகளில் கிசுகிசுக்க, நித்திரையில் ஆழ்ந்த அந்த தருணம்........!
வீஈஈஈஈஈல் என ஒரு அழுகை சத்தம்...???!!!
என்னடா இது..! நான் ஊருக்கு போறதுக்குள்ள இவ்வளவு பிரச்சனைகளா..!!
நிமிர்ந்து பார்க்க ஒரு இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தை..
ஆமாம்.. இரண்டு வயது இருக்கலாம்...
இல்லை இரண்டு வயதே தான்..!
பாடுறவன் பாட்ட கெடுத்தான், பஸ்ல போறவன் தூக்கத்த கெடுத்தாங்கற கதையா, தூக்கத்தை கெடுத்த அந்த குழந்தை என் கண்ணுக்கு ஒரு ஜூனியர் சைத்தானாகவே தெரிந்தது...!
எவ்வளவோ ஓய்ச்ச முயற்சித்தும் இருபது நிமிஷம் மள்ளுக்கட்டி அழுத அந்த குழந்தைய நிணைச்சு "உனக்கு நல்ல குரல் வளம் இருக்கு.. நீயெல்லாம் எதிர்காலத்துல நல்ல பாப் சிங்கரா வருவ ஆத்தா"என எனக்குள் இருந்த அனந்த் வைத்தியநாதன் அட்வைஸ் சொன்னார்...
முதலில் எரிச்சலில் உச் கொட்டிக்கொண்டிருந்த எனக்கே ஒரு சமயத்தில் வேகம் தலைக்கேற எழுந்து போய் ஜன்னல் வழியா தூக்கி வெளிய போட்டுடலாமா என்றளவு கோபம்...!
யார் ஆப்ரா கடாப்ரா சூ மந்திரகாளி சொன்னார்களோ, பாப்பாவின் அழுகை சத்தம் சடாரென நின்றது..!!!?????
நல்லதுடா சாமி.. நாம தூக்கத்தை தொடர்வோமென என் வேலையை நான் தொடர்ந்தேன்..!(நமக்கு நம்ம வேலை)
தூக்கம் மறுபடியும் இமைகளை தட்ட,
கழுத்தை சுற்றி பட்டாம்பூச்சி, தேவதைகள்...!! அடடே..!!
நல்ல தூக்கம்..!
எவ்வளவு மணிநேரம் பயணித்திருப்போம் என்ற கணிப்பேதும் இல்ல..!
விழித்து பார்க்க, பேருந்து பாண்டிக்கு முந்தய இடைநிருத்தத்தில் நின்றுக்கொண்டிருந்தது..!!
ஏதாவது குடிக்கலாமே..!! கோக் பெப்சி...!?? ஏண்ணே.. வாட்டர் பாட்டில் ஒன்னு கொடுங்க என்றேன் கடைக்காரரிடம்..
இதோ தம்பினு எடுத்து கொடுத்தார் அவரும்..
எப்போதும் கையோடு தண்ணீர் பாட்டில் எடுத்து செல்வது வழக்கம்..
இந்த முறை மறந்து விட்டதால், வெளியே வாங்க வேண்டிய நிலை..
வாங்கியதற்கு காசு 20ரூபாயை நீட்டினால்,
அம்மாடியோவ்.. விலை 30ரூபாயாம்..
வீட்டுல 25லிட்டர் வாட்டர் கேனே 28ரூபாய்க்கு தான் வாங்குறோம்.. இவரென்ன 1லிட்டருக்கு 30ரூபாய் கேக்குறாரு..!!
இதெல்லாம் இரவு கொள்ளைய்யா யோவ்னு எனக்குள்ள இருக்குற கம்யூனிஸ்ட் வெளிய வந்து கூச்சலிட, கடைக்காரருக்கும் எனக்கும் ஒரு ஐந்து நிமிட பொருளாதார தகராறு..
விளக்கி விட வந்தவரோ இஷ்டம் இருந்தா வாங்கு தம்பி, ஓவரா வாய் சவடால் விடாதனு சொல்லாமல் சொல்லி சமாதானப்படுத்தினார்...
என்ன செய்ய..! சொன்ன விலையை கொடுத்து வாங்கி தான் ஆகனும் போலயே.!
தாகம் காதையடைத்தது..
திமிரை மறந்து(வெக்கத்தை விட்டு) வாங்கி விட்டேன்..
ஒட்டப்பட்ட மூடிய திறந்து, பாதியில் திமிரா முகம் கழுவி விட்டு(இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லனு எனக்குள்ளேயே த்துப்பிக்கிட்டது எனக்கு மட்டுமே தெரியும்) மிச்சத்தை குடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்து நின்றுக்கொண்டிருந்தேன்...
முதுகில் SETC என்ற எழுத்துக்கள் பதிக்கப்பட்ட, பச்சை நிற பேருந்து ஒன்று.. ஓட்டுநர் இருக்கையில் காக்கி உடையணிந்த ஒருவர்..எல்லாவற்றுக்கும் மேலாய் வேதாரண்யம் போர்டு ஒளிவிளக்குகளின் நடுவே மிண்ணுகிறது...
நான் இவ்வளவு நேரம் பயணித்து வந்த பேருந்து என்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் உடைய ஒரு வாகணம் என்னை தவறவிட்டு நாற்பதடி தூரத்தில் சென்றுக்கொண்டிருப்பதை தெளிவாக பார்க்கிறேன்..
அது உண்மையே தான்... இது நீ வந்த பஸ் தான்டா..உன்ன விட்டுட்டு போயிடுச்சு என என் பட்சி தெளிவாக எனக்கு உணர்த்த ஐந்து நிமிடம் எடுத்துக்கொண்டது..
அந்த ஐந்து நிமிடத்தில் அந்த பேருந்து பத்து கிலோமீட்டர்கள் கடந்து சென்றிருக்கும் என எனக்கு தெரியும்...
எடுத்த டிக்கெட்டை தவற விட்டுவிட்டு MTCல் 300ரூபாய் அபராதம் கட்டியிருக்கிறேன்..
திருச்சி ரயில்வே ஜங்க்ஷனில் ஃபோட்டோ எடுத்ததற்கு நியூசன்ஸ் கேசில் 1600அபராதம் கட்டியிருக்கிறேன்..
அந்த வரிசையில் இதையும் இணைத்துக்கொள்ளலாம்... பிரச்சனையில்லை...
அடுத்து செய்ய வேண்டியதை மட்டும் யோசிடா என எனக்கு நானே அறிவுரை சொல்லிக்கொண்டேன்...
அடுத்த நிருத்தம் பாண்டிச்சேரி பங்க்.. பேருந்து அங்கே நெருங்கும் முன் யாரையாவது அழைத்து லட்கேஜ்களை கைப்பற்ற சொல்ல வேண்டும்..!
தெரிந்த எல்லா பாண்டி நண்பர்களுக்கும் ஃபோன் செய்தேன்..
இரவு 11.50க்கு யாரும் கைபேசி அழைப்பை ஏற்க தயாரில்லை போல..
சில நிமிட தொடர்போராட்டத்திற்கு பின் அழைப்பை அணுகிய நண்பன் தெய்வம்டா மச்சான் நீ என் சொல்லச் செய்தான்..
நடந்ததை சொல்லி லட்க்கேஜ்களை கைப்பற்ற சொன்னேன்...அவனும் சலித்துக்கொள்ளாமல் சரியென சொல்ல, கண்டிப்பா அவன் தெய்வமே தான்...
சரி.. ஒரு வேலை முடிந்தது...!
அடுத்து..!!???????
பேண்ட் பாக்கெட்டை தடவினால், தூங்க இடைஞ்சலாய் இருக்கிறதென பர்சை பேக்பேக்குள் வைத்தது ஞாபகம்...!
சட்டைப்பையில் தண்ணீர் வாங்கியது போக மிச்சம் இருபது ரூபாய் மட்டுமே..!
ஹாஹா.. நல்ல வேளை..
ஏ.டி.எம்ல் பணம் எடுத்து கார்டை சட்டைப்பையிலேயே வைத்திருந்தேன்...!
(இது தான் நீ புத்திசாலிடா ராஜியென எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்ட நிமிடம்)
சாப்பாடு வாங்க போனவன பத்து நிமிஷம் காத்திருந்து ஏத்தி வந்தவன், என்ன இப்டி தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டானே..!! கோவம் தான்.. என்ன செய்ய..!! சரி விடு...! Don't be panicடா ராஜினு எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்..!
யாரையாவது உதவி கேட்கலாமென சுற்றி பார்த்து, நானாக ஒருவரை தேர்ந்தெடுத்தேன்...
ஒரு உயரமான மாநிற ஆள்..
அவர் ஒரு நடத்துநர்..!
அக்கா கல்யாணத்திலேயோ, சித்தி வலையக்காப்பிலேயோ, சின்ன மாமா நண்பர்களில் ஒருவரோ..!
எங்கேயோ பார்த்த முகமென நிணைக்க தோண்றியது..!
சடாரென முன்னே சென்று நடந்ததே கூறினேன்...
நீ என் பஸ்லயே வா தம்பி.. ஒன்னும் பிரச்சனையில்ல..
போற வழியில எதாவது ATMல நிறுத்துறேன்..
பணம் எடுத்து கொடு சரியா என ஆறுதல் சொன்னார்...
நல்ல மனுஷனா இருக்காரே..!! அப்பரம்ணே உங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேனு கேக்க,
ஆமா தம்பி நானும் அதையே தான் நிணைச்சேன், உங்கள எங்கேயோ பார்த்த மாதிரியிருக்கேனு அவரும் கேட்டார்.. (அட சேம் பிஞ்ச்னு மனசுக்குள்ள நானே சொல்லிக்கிட்டேன்)
பேசிக்கொண்டே இருவரும் பேருந்தில் ஏறினோம்..
உள்ளே ஏறிய நான் ஏனோ கெக்க பெக்கவென சிரிக்க, கண்டிப்பா அவர் பயந்திருப்பார்..(ஙே.. ஒருவேளை பைத்தியமா இருப்பானோ)
அட.. இது தான்யா நான் வந்த பஸ்ஸு...!
உண்மையே தான்.. இது தான் நான் வந்த பஸ்ஸே தான்..
தண்ணீர் வாங்க கடைக்காரரிடம் சண்டையிட்ட நேரத்தில் பேருந்து இடம் மாற்றி பக்கவாட்டில் நிருத்தப்பட்டது எனக்கெப்படி தெரியும்..!!???
என் தூக்கத்தை கெடுத்த ஜூனியர் சைத்தான் தூங்கிக்கொண்டிருக்கிறது..
நான் உட்காந்திருந்த இடத்தில் என் லட்கேஜ்கள் இருக்கின்றன..
உறுதி செய்தேன்.. இது என் பஸ்ஸே தான்...!
வேற ஏதோ ஒரு பேருந்து புறப்பட்டதை பார்த்து,
என்னுடையதென ஏமாந்து திரிந்திருக்கிறேன்...
இப்படி ஒரு கேவலமான பல்பை ஆசியாவில் மட்டுமல்ல அமெரிக்கா ஆப்ரிக்கா ஆப்கானிஸ்தானில் கூட எவனும் வாங்கியிருக்க மாட்டான்டா கூமுட்டையென என்னை நானே கேவலமாக திட்டிக்கொண்டேன்..
ஓடிப்போய் நடத்துநரிடம் அசடு வழிய இப்டி இப்டிணே அப்டி அப்டிணே.. சாரிணே என் வழிந்தேன்...
அவரும் ஏன் தம்பி போங்க தம்பினு என்ன பார்த்து கேவலமாக சிரித்தார்..
(இப்போ புரியுது, எங்கேயோ பார்த்த ஞாபகமென ரெண்டு பேரும் ஏன் யோசித்துக்கொண்டோமென)
வாங்கிய பல்ப நிணைச்சு பத்து நிமிஷம் சிரிச்சேன்...
பேருந்து புறப்பட்டது...
ஃபோன் செய்து லட்கேஜை எடுத்து வைக்க சொன்ன நண்பனிடம் நடந்ததை கூறினேன்..
அவன் பங்குக்கு அவனும் கொஞ்சம் துப்பினான்...(பல்ல இளிச்சிக்கிட்டு வாங்கிக்கிட்டேன் ஈஈஈஈஈ)
வழக்கமான இது மாதிரியான பல்புகளை நெருங்கிய ட்விட்டர் நண்பன் ஒருவனிடன் பகிர்ந்துக்கொள்வது வழக்கம்..
(அவன் பங்குக்கு அவனும் கொஞ்சம் துப்பட்டுமே)
இடைநிருத்தத்திற்கு முன்பான அந்த பழைய நிலைக்கு செல்ல கொஞ்சம் நேரம் பிடித்தது...! எடுத்துக்கொண்டேன்..!
எல்லோரிடமும் பல்பை பகிர்ந்தளித்ததில் மொபைல் பேலண்ஸ் கட்டானது.. சார்ஜ் காலியானது..
கைபேசி இன்றைய பணியை நிறைவு செய்தது..
இந்த பயணம் இதை விட மோசமான பல்பு எதையும் தரவேண்டாம் என எனக்குள்ளேயே நிணைத்துக்கொண்டிருக்க ஒரு சற்று நேரத்தில் இன்னொரு விஷயம் விளங்கியது...
சீர்காழி அரசூர் பைபாஸ் ஒரு தன்னந்தனி திடல்..
அங்கிருந்து என் வீடு ஐந்து கிலோமீட்டர் தூரம்..
யாரையாவது கால் செய்து வரச்சொல்லி என்னை வண்டியில் பிக்கப் செய்ய சொல்ல வேண்டும்..
மொபைலில் சார்ஜும் இல்லை பேலன்ஸும் இல்லை..
இது எனக்கு பேருந்திலிருந்து இரங்கியதும் தான் விளங்கியது..
பேருந்து நின்ற இடத்தில் வந்த ஹைவே பேட்ரோலை நிருத்தினேன்..
சர்..ஃபோன் இருக்கா வீட்டுக்கு ஓரு கால் பன்னனும் என்றேன்..
ஒரு போலிஸ்காரரிடம் நான் இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை, "சாரி தம்பி பேலன்ஸ் இல்லபா"என்றார்...
சரி... விதி யாரை விட்டுச்சு..!!
வீட்டை நோக்கி நடக்க தொடங்கினேன்...
எதிரில் ஒரு வெளிச்சம்..
அது ஏதோ பைக்கின் ஹெட்லைட்...
அருகே நெருங்கியதும் தான் புரிந்தது அது என் பைக்..
வந்தது என் அப்பா..
ஐந்து கிலோமீட்டர் நடக்க விரைந்த நான் அப்பாவை பார்த்ததும்
கொஞ்ச நேரம்
வாயடைத்து தான் நின்றேன்...
இரவு மணி 3.. எப்படிபா என்றேன்..!
நீ கோயம்பேட்டில பஸ் ஏறினது 9மணிக்கு.. எப்படியும் இந்த நேரத்துக்கு இங்க வந்துடுவன்னு தெரியும்.. அதான்பா பிக்கப் பன்ன வந்தேன் என்றார்...
அந்த பதிலை கேட்டு கொஞ்சம் மிரண்டு தான் போனேன்...
அப்போவோட அறிவு இந்த பிள்ளைக்கு கொஞ்சம் கூட இல்லையே என என்னை நானே திட்டிக்கொண்டேன்..
இப்படி ஒரு அப்பாவிடம் என்னை சேர்த்ததற்கு அந்த இயற்கைக்கு கொஞ்சம் நன்றியும் சொன்னேன்...
இவ்வளவு தான்...
இவ்வளவு தான் என்னுடைய இந்த பயணம்..
சந்தோஷத்தில் தொடங்கி, சுவாரஸ்யமான அனுபவங்களை சில பதட்டங்களை கடந்து, ஆனந்தத்தில் என் பயணம் இதோடு முடிகிறது...!
என் ப்ளாக்கின் முதல் பதிவு இதுவாக இருக்குமென நான் எதிர்பாராக்கவில்லை..
இருந்தாலும் இதுவாக அமைந்ததில் மிக்க சந்தோஷம்...
எழுத்துக்களில் சில இலக்கண பிழைகள் இருந்திருக்கலாம்..
தவறுகளை உங்க வீட்டு பிள்ளை செய்ததாய் நிணைத்து மன்னிக்கவும்..
தொடர்ந்து ஆரதரவளிக்கவும்...
நன்றி
இவன் உங்கள் அன்புள்ள
RajiTalks as ராஜ்குமார்.ரா